search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானில் மீண்டும் தீவிரமடையும் பருவமழை-  மின்னல் தாக்கி 7 பேர் பலி
    X

    ராஜஸ்தானில் மீண்டும் தீவிரமடையும் பருவமழை- மின்னல் தாக்கி 7 பேர் பலி

    • மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை வலுவிழந்து இருந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் பருவமழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்கிறது.

    இந்நிலையில், ராஜஸ்தானின் ஜலாவர் மற்றும் உதய்பூர் மாவட்டங்களில் நேற்று மட்டும் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும். இதன் காரணமாக நாளை முதல் 15ம் தேதி வரை கிழக்கு ராஜஸ்தானில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×