search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம நபர்"

    • ஜி.டி. அருங்காட்சியகம் அருகே செல்லும் போது ஒரு அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    • இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்திற்குள் நேற்றுமுன்தினம் மாலை மர்மநபர் ஒருவர் புகுந்து கதவை அடைக்க முயன்றார். இதை அங்கு பணியில் இருந்த ஊழியர் பார்த்து, அவரை பிடித்து வெளியே தள்ளினார்.

    இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலக ஊழியர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்தனர்.

    இதற்கிடையே இரவில் அவினாசி சாலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவர் எப்படி இறந்தார் என்பதை அறிய அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது, அந்த நபர், அவினாசி ரோடு ஜி.டி. அருங்காட்சியகம் அருகே செல்லும் போது ஒரு அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டது.

    ஆனால் இதுவரை இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் பஸ்சில் விழுந்து தான் இறந்தாரா? அப்படி தற்கொலை செய்து கொண்டால் அதற்கான காரணம் என்ன? தற்கொலை செய்யும் போது அந்த நபர் போதையில் இருந்தரா எனவும் விசாரணை நடக்கிறது.

    தற்கொலை செய்தவர் எதற்காக பா.ஜனதா அலுவலகத்திற்குள் நுழைந்தார்? அவர் அங்கு நுழைந்தற்கான நோக்கம் என்ன? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர் குறித்த முழு விவரமும் கிடைத்த பிறகே அவர் தற்கொலை செய்தற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • மருத்துவ கல்லூரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கின்றனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அந்த பெண் கல்லூரி அருகேயுள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணை மறித்து மிரட்டியுள்ளார்.

    தொடர்ந்து மறைவான இடத்திற்கு அழைத்துச் ெசன்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. அதன் பின் அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரி, திருமண மண்டபம் பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கின்றனர்.

    • மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது.
    • சிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதியில் உள்ள மளிகை கடைக்கு தனியார் லாரி மூலம் மளிகை பொருட்கள் அடங்கிய பார்சல் பெட்டி, மற்றும் 2 மூட்டைகள் வந்தது. அதிகாலை நேரம் வந்தது. அதனை லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கடை முன்பு இறக்கி வைத்து விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

    இதன் பின்னர் கடைக்கு வந்த உரிமையாளர் பொருட்களை சரி பார்த்தபோது, சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து, கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அதில் மர்ம நபர் ஒருவர் மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டியை திருடிச் செல்வது தெரிய வந்தது. இந்த நிலையில் பார்சல் பெட்டியை திருடும் மர்ம நபர் சிசிடிவி காட்சிகள், தற்பொழுது பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • நண்பரின் சகோதரர் என்று ஏமாற்றி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்துகுமார்(24). சம்பவத்தன்று இவருக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முத்துக்குமாரின் நண்பரா ன ராஜா என்பவரின் தம்பி பேசுவதாக கூறியுள்ளார்.

    அவரும், அவரது நண்பர்களும் அருகில் உள்ள விழா ஒன்றிர்க்கு வந்ததாகவும் அங்கே மது குடித்துவிட்டு கிணற்றில் குளித்தபோது நண்பர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறி உடன டியாக கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள கோவில் அருகே வரும்படி அழைத்துள்ளார்.

    முத்துகுமார் அவர் கூறிய இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு செல்போனில் பேசிய நபர் நின்றுகொண்டிருந்தார். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள அட்டைமில் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றனர். அங்கு 3 பேர் வந்து முத்துக்குமாரை ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர்.

    அதற்கு முத்துகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். அப்போது அந்த நபர்களில் ஒருவர் கத்தியின் கீழ் பகுதியால் முத்துகுமாரை தாக்கியுள்ளார். இதையடுத்து முத்துகுமார் தனது வங்கி கணக்கு கடவுச்சொல்லை கூறியுள்ளார்.போன்பே மற்றும் ஜி-பே மூலம் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 200 எடுத்துள்ளனர்.

    பின்னர் அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.அவர்கள் தாக்கியதில் காயமடைந்த முத்துகுமார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    மேலும் இதுகுறித்து முத்துகுமார் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வன ரோஜா தண்ணீர் எடுக்க குடிசை வீட்டுக்குள் செல்லும் பொழுது மர்ம நபர் அவர் பின்னாலே வீட்டிற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
    • யாரும் இல்லாததை அறிந்த அந்த மர்ம நபர் வனராஜாவிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த இலக்கம்பட்டி கிராமத்தில் வெங்கட்ராமன். இவரது மனைவி வனரோஜா (வயது39).

    இவர்களுக்கு கருக்கம்பட்டி கிராமத்தின் அருகே விளைநிலங்கள் உள்ளதால் பகல் நேரங்களில் அங்கே சென்று வருவது வழக்கம். நேற்று வழக்கம்போல் வனரோஜா தனது தோட்டத்தில் உள்ள குடிசைகள் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு உள்ளார்.

    வன ரோஜா தண்ணீர் எடுக்க குடிசை வீட்டுக்குள் செல்லும் பொழுது மர்ம நபர் அவர் பின்னாலே வீட்டிற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    யாரும் இல்லாததை அறிந்த அந்த மர்ம நபர் வனராஜாவிடம் சில்மிஷம் செய்துள்ளார். உடனே அந்தப் பெண் அருகிலுள்ள கட்டையை எடுத்து அடிக்கவே, மர்ம நபர் பதிலுக்கு குடிசையில் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து பெண்ணின் மண்டையில் பலமாக தாக்கி உள்ளார்.

    இந்த தாக்குதலில் அந்தப் பெண் மண்டை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் அலறி உள்ளார்.

    அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த அந்த நபர் கோடாரி வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

    பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வன ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தப் பெண் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
    • தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினந்தோறும் தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம்.

    நேற்று வழக்கம் போல் தென்பெண்ணை ஆறு கரையோரம் தங்கள் 3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாழங்குடா மீனவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது படகு மற்றும் வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் படகுகள் மற்றும் வலைகள் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.

    இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்பெண்ணை ஆற்று கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தேன்மொழியின் கழுத்தை நெரித்த இளைஞர் தங்கத்தாலி, தோடு, மூக்குத்தி போன்றவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.
    • கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ஊராட்சி, மேலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனபால் மனைவி தேன்மொழி (வயது 37). இவர் நேற்று மாலை இவரது பூந்தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக, இரு சக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் உடை அணிந்த மர்மநபர் ஒருவர், தனக்கு தாகமாக இருப்பதாகக் கூறி, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

    இதனை நம்பிய தேன்மொழி, அந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது தேன்மொழியின் கழுத்தை நெரித்த அந்த இளைஞர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலி மற்றும் தோடு, மூக்குத்தி ஆகியவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.

    இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார், பெண்ணிடம் தங்க நகைகளை பறித்த மர்ம நபரை பிடிக்க, கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி சுந்தரி (வயது 56).இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    சாந்திசுந்தரி பல மணி நேரம் கூட்ட நெரிசலில் வரிசையில் காத்திருந்தார். அப்போது சாந்தி சுந்தரி கையில் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர் திருடி கொண்டு தப்பினார். அதில் 10 பவுன் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வர் ராஜேந்திரன். இவரது மகளுக்கு ஐராவதநல்லூரில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது மணமகள் அறையில் புகுந்த மர்ம நபர் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடி சென்று விட்டார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஈரோடு பஸ் நிலையத்தில் திருச்சி பஸ் ரேக்கில் ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • அவரது அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சமீப காலமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பயணிகளிடம் செல்போன், பணம் திருடி கொண்டு செல்கின்றனர். குறிப்பாக முதியவர்களிடம் அதிக அளவில் கைவரிசை காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் திருச்சி பஸ் ரேக்கில் ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அவரது அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் முதியவரின் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.6,800 ரொக்க பணத்தை பாக்கெட்டில் பிளேடு போட்டு திருடி சென்றுள்ளார். பின்னர் முதியவர் தான் வைத்திருந்த பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து அந்த முதியவர் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் போலீசார் முதியோரிடம் விசாரணை நடத்தி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சியின் பதிவுகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    இதையடுத்து ஈரோடு பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

    • சங்கிலியை பறித்த.உடன் பெண் கூச்சல் போட்டதால் செயினை பறித்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
    • போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே அஞ்சாலியை சேர்ந்தவர் சுஜின்குமார். இவரது மனைவி ராதிகா (வயது 31). கோணங்காட்டில் ஆலய திருவிழா நடந்து வருகிறது. ராதிகா ஆலய விழாவிற்கு சென்றார். ஆலய வழிபாடு முடிந்து இரவு அவர் வீடு திரும்பினார்.

    ராதிகா வீட்டு முன் வரும்போது மர்ம நபர் ஒருவர் ராதிகாவின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி சங்கிலியை பறித்தான்.உடனே ராதிகா கூச்சல் போட்டார். இதனால் மர்ம நபர் தப்பி ஓடி விட்டான். இது குறித்து ராதிகா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பறிக்கப்பட்ட செயின் வீட்டின் அருகே கிடந்தது. இதனை போலீசார் கண்டு பிடித்து மீட்டனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபர் பயந்து செயினை வீசிவிட்டு சென்றாரா? அல்லது ராதிகாவிடமிருந்து செயினை பறிக்கும்போது அவர் சத்தமிட்டதால் மர்ம நபர் தப்பும்போது தவறி கீழே விழுந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தாயின் தாலிசங்கிலியையும் அபகரிக்க முயன்றதாக புகார்
    • தக்கலை அருகே இன்று அதிகாலை துணிகரம்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள பனங்கான விளை பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ், வியாபாரி.

    இவர், தனது பெற்றோர், மனைவி அனிட்டா(வயது 32) மற்றும் 1 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர்.

    அனிட்டா தனது குழந்தை யுடன் ஒரு அறையில் படுத்தி ருந்தார். அந்த அறையில் காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்து உள்ளனர். இதனை அறிந்த யாரோ மர்மநபர் இன்று அதிகாலை திறந்திருந்த ஜன்னல் வழியாக கை விட்டு கதவை திறந்துள்ளார்.

    பின்னர் அந்த நபர் வீட்டின் அறைக்குள் நுழைந்து குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளான். மேலும் அனிட்டா அணிந்திருந்த 9 பவுன் தாலிச்சங்கிலியையும் அபகரிக்க முயன்றுள்ளான்.

    அந்த நேரத்தில் குழந்தை அழுததால், அனிட்டா கண் விழித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர், நகையை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றான். ஆனால் அனிட்டா, தனது கழுத்தில் கிடந்த நகையை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.

    இதனால் அந்த மர்ம நபர், அனிட்டாவின் நகையை விட்டு விட்டு குழந்தையிடம் பறித்த ஒரு பவுன் நகையுடன் தப்பி ஒடிவிட்டான். இந்த துணிகர சம்பவம் குறித்து தக்கலை போலீசில் அனிட்டா புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் நகை பறித்த நபர் ஸ்கூட்டரில் ஏறிச் செல்வது தெரியவந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ கணபதி கோவில் உள்ளது.இந்த கோவிலில் கோபிநாத் என்பவர் பூசாரியாக உள்ளார்.நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது. கோவில் உண்டியலில் 10 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என தெரிகிறது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    ×