search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hundiyal"

    • கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெற்றது.
    • 48 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டு இருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் உண்டியல் திறப்பு கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் 25ந்தேதிக்கு பிறகு நேற்று வியாழக்கிழமை இந்து சமய அறநிலைய த்துறை திருப்பூர் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் செயல் அலுவலர் ராமநாதன், காங்கயம் ஆய்வாளர் அபிநயா முன்னிலையில் திறக்கப்ப ட்டது. பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை அறநிலைத்துறை பணியா ளர்கள் எண்ணினார்கள்.

    அதில் ரூ.15 லட்சத்து 70 ஆயிரத்து 323 ரொக்கமும், 48 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டு இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    • நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ கணபதி கோவில் உள்ளது.இந்த கோவிலில் கோபிநாத் என்பவர் பூசாரியாக உள்ளார்.நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது. கோவில் உண்டியலில் 10 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என தெரிகிறது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே செல்லி அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணியபோது ரூ.2.89 லட்சம் வசூலாகி உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே செங்கரையில் காட்டுச் செல்லி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வியாழன், ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. செயல் அலுவலர் சீனிவாசன் மேற்பார்வையில் எண்ணப்பட்டது. இதில் ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 873 வசூல் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×