search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் சில்மிஷம் செய்து கோடாரியால் தாக்கிய மர்ம நபர்
    X

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வனரோஜாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட காட்சி.

    பெண்ணிடம் சில்மிஷம் செய்து கோடாரியால் தாக்கிய மர்ம நபர்

    • வன ரோஜா தண்ணீர் எடுக்க குடிசை வீட்டுக்குள் செல்லும் பொழுது மர்ம நபர் அவர் பின்னாலே வீட்டிற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
    • யாரும் இல்லாததை அறிந்த அந்த மர்ம நபர் வனராஜாவிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த இலக்கம்பட்டி கிராமத்தில் வெங்கட்ராமன். இவரது மனைவி வனரோஜா (வயது39).

    இவர்களுக்கு கருக்கம்பட்டி கிராமத்தின் அருகே விளைநிலங்கள் உள்ளதால் பகல் நேரங்களில் அங்கே சென்று வருவது வழக்கம். நேற்று வழக்கம்போல் வனரோஜா தனது தோட்டத்தில் உள்ள குடிசைகள் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு உள்ளார்.

    வன ரோஜா தண்ணீர் எடுக்க குடிசை வீட்டுக்குள் செல்லும் பொழுது மர்ம நபர் அவர் பின்னாலே வீட்டிற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    யாரும் இல்லாததை அறிந்த அந்த மர்ம நபர் வனராஜாவிடம் சில்மிஷம் செய்துள்ளார். உடனே அந்தப் பெண் அருகிலுள்ள கட்டையை எடுத்து அடிக்கவே, மர்ம நபர் பதிலுக்கு குடிசையில் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து பெண்ணின் மண்டையில் பலமாக தாக்கி உள்ளார்.

    இந்த தாக்குதலில் அந்தப் பெண் மண்டை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் அலறி உள்ளார்.

    அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த அந்த நபர் கோடாரி வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

    பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வன ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தப் பெண் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×