search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mystery person"

    • குமரவேல் தனது மோட்டார் சைக்கிைள வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.
    • அதை மர்மநபர் யாரோ திருடிச்சென்றது தெரிந்தது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம் பராம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(46). இவர் தனது மோட்டார் சைக்கிைள வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிைள காணவில்லை. அதை மர்மநபர் யாரோ திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிைள திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்.

    • அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார்.
    • அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும், பீரோ சாவியை கொடு என கேட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 50).          இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும். பீரோ சாவியை கொடு என கேட்டுள்ளார். சாவியை வாங்கி பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து அமிர்தவல்லி சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராயதுரை (வயது 56). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு தனுசு (29) என்ற மகளும் பாபு என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர்.
    • அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், வீட்டின் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த தனுசு கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் தங்க சங்கிலியை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார்.


    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்த ராயதுரை (வயது 56). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு தனுசு (29) என்ற மகளும் பாபு என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் முத்துலட்சுமி எழுந்து வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், வீட்டின் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த தனுசு கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் தங்க சங்கிலியை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

      கடலூர்:

      விருத்தாசலம் அடுத்த கார்கூடல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கார்கூடல் ஆற்று பகுதியில் மர்ம நபர் திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர்.  ஆனால் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர் தப்பி ஓடினார். மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்ததில், மணல் திருடிய நபர் கோ.பொன்னேரி பகுதியை சேர்ந்த வீரமணி என்பது தெரிய வந்தது.

      சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய வீரமணியை தேடி வருகின்றனர்.

      • தேன்மொழியின் கழுத்தை நெரித்த இளைஞர் தங்கத்தாலி, தோடு, மூக்குத்தி போன்றவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.
      • கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      வாழப்பாடி:

      சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ஊராட்சி, மேலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனபால் மனைவி தேன்மொழி (வயது 37). இவர் நேற்று மாலை இவரது பூந்தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தார்.

      அப்போது அந்த வழியாக, இரு சக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் உடை அணிந்த மர்மநபர் ஒருவர், தனக்கு தாகமாக இருப்பதாகக் கூறி, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

      இதனை நம்பிய தேன்மொழி, அந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது தேன்மொழியின் கழுத்தை நெரித்த அந்த இளைஞர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலி மற்றும் தோடு, மூக்குத்தி ஆகியவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.

      இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார், பெண்ணிடம் தங்க நகைகளை பறித்த மர்ம நபரை பிடிக்க, கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      திருவாரூர் அருகே மருந்து என்று கூறி தம்பதியிடம் வி‌ஷத்தை கொடுத்த மர்ம நபரால் மனைவி பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Womankilled
      திருவாரூர்:

      திருவாரூர் அருகே உள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 75). விவசாயி. இவரது மனைவி சகுந்தலா (65). இவர்களது மகன் முருகேசன். திருவாரூரில் கடை நடத்தி வருகிறார்.

      இந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஷ்ணுதோப்பில் உள்ள செல்வம் வீட்டுக்கு வந்தார். அப்போது வாடகைக்கு வீடு தேவைப்படுவதாகவும், தான் நாட்டு வைத்தியர் என்றும் கூறினார்.

      அந்த நபர் கூறியதை உண்மை என்று நம்பிய செல்வம் தனக்கும் மனைவிக்கும் மூட்டு வலி இருப்பதாக கூறி அதற்கு மருந்து இருந்தால் கொடுக்கும் படி கேட்டார்.

      இதையடுத்து அந்த நபர், செல்வத்திடம் வேப்பிலை, மஞ்சளை சேர்த்து அரைத்து வரும்படி கூறியுள்ளார். அவர்கள் அதனை கொண்டு வந்து கொடுத்ததும் அதில் தான் வைத்திருந்த ஒரு மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் மயங்கி விட்டனர்.



      அப்போது அந்த நபர் மயங்கி விழுந்த சகுந்தலா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

      இந்தநிலையில் வீடு திரும்பிய செல்வத்தின் மகன் முருகேசன் தனது பெற்றோர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களது உடல்கள் வீங்கி போய் இருந்தன. இதனால் பயந்து போன அவர் தனது பெற்றோர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

      அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சகுந்தலா பரிதாபமாக இறந்தார். செல்வம் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

      இதுபற்றிய புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சகுந்தலாவிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் அவர் கொடுத்த நாட்டு மருந்தை சாப்பிட்டு சகுந்தலா பலியாகி விட்டதால் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #Womankilled
      ×