search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைவீதி"

    • ஜவுளி, பட்டாசு, இனிப்பு வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
    • காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு முதல் அனைத்து வகையான பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.

    தஞ்சையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க தொடங்கி விட்டனர். மேலும் தற்போது தங்கள் வீட்டுக்கு, உறவினர்களுக்கு கொடுக்க தேவைப்படும் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு குவிய தொடங்கியுள்ளனர்.

    இதனால் தஞ்சையில் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படுகிறது.

    இன்று பிற்பகல் வரை மழை இல்லாத காரணத்தினால் வியாபாரம் பாதிப்படையவில்லை.

    தஞ்சை காந்திஜி சாலை, கோர்ட் ரோடு, கீழவாசல், பழைய பஸ் நிலையம் ,புதிய பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் தஞ்சை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தஞ்சைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் நகரில் சாலைகளில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்க காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    இனி வரக்கூடிய நாட்களில் இதை விட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • கடந்த 2021 ம் ஆண்டு புனரமைக்க இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்தது.

    பல்லடம் :

    பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு கடைவீதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் என்பதால் கோவிலின் கட்டடங்கள் பல பகுதிகளில் சிதிலமடைந்து உள்ளது. கோவிலை இடித்துவிட்டு புதுப்பித்துக் கட்ட பலமுறை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு புனரமைக்க இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்தது.

    இந்தநிலையில் நேற்று கடைவீதி மாகாளியம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் ராமசாமி,சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை, பாலசுப்பிரமணியம், ராம். கண்ணையன், விமல் பழனிச்சாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இது குறித்து செயல் அலுவலர் ராமசாமி செய்தியாளரிடம் கூறியதாவது:- கோவில் கட்டுமான பணிக்கு கடந்த ஆண்டிலேயே அனுமதி கிடைத்து விட்டது. கோவிலுக்கு முன் உள்ள கடைகளில் வாடகைக்கு உள்ளவர்களை காலி செய்ய ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் காலி செய்தவுடன் பாலாலயம் செய்து கோவில் திருப்பணிகள் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.  

    • பொருட்கள் வாங்க பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார்.
    • கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சம்பவத்தன்று பல்லடத்தில் உள்ள அரசு வங்கியில் ரூ.60 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு, அதனை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துள்ளார்.

    பின்னர் பொருட்கள் வாங்க பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடையின் முன்பு நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதையடுத்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் கடைவீதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது.
    • சிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதியில் உள்ள மளிகை கடைக்கு தனியார் லாரி மூலம் மளிகை பொருட்கள் அடங்கிய பார்சல் பெட்டி, மற்றும் 2 மூட்டைகள் வந்தது. அதிகாலை நேரம் வந்தது. அதனை லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கடை முன்பு இறக்கி வைத்து விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

    இதன் பின்னர் கடைக்கு வந்த உரிமையாளர் பொருட்களை சரி பார்த்தபோது, சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து, கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அதில் மர்ம நபர் ஒருவர் மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டியை திருடிச் செல்வது தெரிய வந்தது. இந்த நிலையில் பார்சல் பெட்டியை திருடும் மர்ம நபர் சிசிடிவி காட்சிகள், தற்பொழுது பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன.
    • பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு பகுதி பல்லடம் நகரத்தின் முக்கிய கடைவீதி ஆகும். இங்கு ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த ரோட்டில் பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அது கடந்த பல நாட்களாக எரியாததால் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல நாட்களாக அவைகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.மேலும் இரவு நேரத்தில் பெண்கள், சிறுவர்கள் அந்த ரோட்டில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 30ந்தேதி பல்லடம் கடை வீதியில் வணிகர் சங்க அலுவலக திறப்பு விழாவிற்க்கு வரும் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்லடம் அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×