search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலாடுதுறை"

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
    • மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார். தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுமார்ரூ. 7 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் சென்டரை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மருத்துவமனையில் ரூ. 45 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.பி, ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் , மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் துவங்கி 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் 6 மாவட்டங்கள் விடுபட்டுள்ளதாகவும், இதற்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும் இதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை பலமுறை பார்த்து வந்துள்ளதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் கிடைத்தவுடன் மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதலில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2023-ம் ஆண்டுக்கான கோடை விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 16 மாநிலங்களை சேர்ந்த 270 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய 2023-ஆம் ஆண்டுக்கான கோடை விழா கலைநிகழ்ச்சி மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    3 நாள் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரகாண்ட், ஆந்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், கோவா ஆகிய 16 மாநிலங்களில் சேர்ந்த 270 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள் நடைபெறும் இக்கலை நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சியை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய அதிகாரி நாதன், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை பரணிதரன், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.

    இதில், மத்திய பிரதேச மாநிலத்தில் இயற்கை பேரழிவுகள் மற்றும் நோய்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஷிதலாதேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்படும் படாய் நாட்டுப்புற நடனம், சத்தீஸ்கர் மாநிலத்தின் சத்னாமி சமூகத்தினர் மகி பூர்ணிமாவில் நிகழ்த்தும் பந்தி நாட்டுபுற நடனம், ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த குஜராத் பழங்குடியினர் வேட்டையாடிய பின்னர் ஏற்படும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக ஆடும் சித்தி டமால் நடனம், உத்தர பிரதேச மாநிலம் பிரஜ் பகுதியை சேர்ந்த மக்கள் ராதா மற்றும் கிருஷ்ணர் இடையேயான காதல் அத்தியாயத்தில் இருந்து உருவாக்கப்பட்டு, ஆடும் மயூர் ஹோலி நடனம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதில், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ், வட்டார தலைவர் ஜம்பு கென்னடி, மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத், நகர செயலாளர் ராமகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் சௌ.சர்வோதயன் மற்றும் திரளான ரசிகர்கள் பங்கேற்று கண்டு ரசித்தனர்.

    • பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
    • இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது.

    ஆதீனத்துக்கு சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் ஆலய திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை நடைபெறுகின்றது.

    இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி, தருமபுர ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார்.

    ஒட்டகம் குதிரை ஆகிய முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு சேந்தங்குடி வள்ளலார் கோயில் நிர்வாகிகள் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக ஆலய மடத்தில் செந்தமிழ் சொக்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்ய ப்பட்டது.

    இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி, வீரசோழன், மஞ்சளாறு, மகிமலையாறு, விக்ரமண் ஆறு, அய்யாவையானாறு, பழவாறு, மண்ணியாறு, தெற்குராஜன் ஆகிய ஆறுகளிலிருந்து பிரியும் பிரிவு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாரிட விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் நடப்பாண்டு 2023-24, 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரபடவுள்ளதால் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டங்களை சேர்ந்த 71ஆயிரத்து 811.69 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தங்குதடையின்றி கடைமடை வரை சென்றடையும்.

    மேலும் மழை வெள்ளக்காலங்களின் பாசன நிலங்களில் தேங்கும் வெள்ள நீர் விரைவாக வடியவும் உறுதி செய்யப்படும்.அந்த வகையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் ஊராட்சியில் மஞ்சளாற்றின் வலது கரையில் பிரியும் வாழ்க்கை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.

    இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி 25.04 கி.மீ தூரத்திற்கு ரூ.22.05 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. மேற்கண்ட வாய்க்கால் தூர்வாருவதால் தரங்கம்பாடி வட்டத்தை சார்ந்த மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், செம்பனார்கோயில் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், ஜெயராமன், சீனிவாசன், சண்முகம், உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர், வீரப்பன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்ஸ்ரீதர், ஒப்பந்தக்காரர் வேல்முருகன்,தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, செம்பனார்கோயில் ஒன்றிய ஆணையர் மீனா, மற்றும் உழவர் குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.
    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள 2-ம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உண்டியல் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.

    உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைத் தொடர்ந்து மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பாதி பணத்தை அள்ளிக்கொண்டு அருகில் உள்ள இருட்டில் பதுங்கினர். பின்னர் சிறிதளவு பணத்தை அங்கேயே விட்டு, விட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அன்னை இந்திரா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டாவழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு மாநில குழு உறுப்பினர் பாபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • பட்டவர்த்தி பகுதிக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளில் 4 இடங்களில் தடுப்பு அமைத்து காவல்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி மதகடி பகுதியில் கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு தினத்தில் வி.சி.க.வினர் மற்றும் ஒரு சமூகத்தினர் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தியபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு அதே இடத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே பகுதியில் மற்றொரு தரப்பினர் தங்களது புதிய அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று காவல் துறையில் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்தனர்.

    இதுதொடர்பாக மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் நேற்று இரவு (5.12.22) 10 மணி முதல் (10.12.22) தேதி நள்ளிரவு 12 மணி வரை பட்டவர்த்தி மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அப்பகுதியில் இரண்டு நபர்களுக்கு மேல் சட்டவிரோதமாக கூடுவதும், அரசியல் கட்சிகளின் கொடிகள் பேனர்கள் வைப்பதும் தடை செய்யப்படுவதாகவும் புதிதாக படத்திற்கு யாரும் மாலை மரியாதை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து பட்டவர்த்தி மதகடி பகுதியில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 9 டிஎஸ்பிகள், 16 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பட்டவர்த்தி பகுதிக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளில் 4 இடங்களில் தடுப்பு அமைத்து காவல்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். 21 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு தனியார் வேன்கள் மூலம் பள்ளி செல்வதற்கு காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பட்டவர்த்தியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    காலை முதலே வஜ்ரா வாகனம், தீயணைப்புத் துறை வாகனம் ஆகியவை மதகடி பகுதியில் வரவழைக்கப்பட்டு காவல்துறை குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.

    • பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது தண்ணீர் வடிந்தாலும் அந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது, கால்நடைகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
    • பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு குறை ந்தபட்சம் ரூ 30000 வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விளைநிலங்களை பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    மழையால் பாதிக்க ப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் கடந்த 14ஆம் தேதி நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.

    தொடர் மழையால் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 764 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இதுவே மிகப்பெரிய பாதிப்புக்கு அடையாளம் இரண்டு லட்சம் மக்கள் கையேந்துகிற நிலைமை ஏற்பட்டு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அரசு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது.

    பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது தண்ணீர் வடிந்தாலும் அந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது, கால்நடைகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    அதேபோல் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    முதல்வர் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் அறிவித்த ரூபாய் ஆயிரம போதாது கூடுதலாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு குறை ந்தபட்சம் ரூ 30000 வழங்க வேண்டும். பெற்ற குழந்தை தாய்யை பறிகொடுத்தது போல் சம்பா சாகுபடிவிவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிரை பறிகொடுத்து தவித்து வருகின்றனர்.

    மீண்டும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மேலும் பாதிப்பு ஏற்படும் விவசாயிகள் ஒரு ஆண்டுகளுக்கான வருமானத்தை முற்றிலும் இழுந்துவிட்டனர்.

    மேலும் விவசாயிகளின் மாடி வீடுகள், தொகுப்பு வீடுகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது தனை உயர்த்தி வங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    நாகை எம்பி செல்வ ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் சிவராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.
    • கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில், துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் துலா உற்சவம் புகழ் பெற்றதாகும்.

    இந்த மாதத்தில் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேத பாராயணங்கள் செய்யப்படும். வேதபாராயணம் செய்வதற்கு உரிய அந்தணர்களைக் கொண்டு வேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.அதன் ஒரு பகுதியாக சேந்தங்குடி ராகவேந்திரர் ஆராதனை கமிட்டி சார்பில் உலக நன்மை வேண்டியும், கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நான்கு நாட்களாக சேந்தங்குடி அக்ரஹாரத்தில் நடைபெற்று வருகிறது. அந்தணர்கள் ஒன்பது பெயர் வேதங்களை பாராயணம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் பெங்களூர் ரவிகுமார் கலந்து கொண்டார். கிரி தலைமையிலான விழா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு சொந்த மான இடம் மருத்துவமனை கட்டுவதற்காக அரசு க்கு பதிவு செய்து வழங்கப்பட்டளது. ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

    கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது காலித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இந்து, முஸ்லிம் முறைகள் படி, துவா மற்றும் வேத மந்திரங்களுடன் நடைபெற்றது. தரைத்த ளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடு க்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன.பல்லாயிரக்க ணக்கா னோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா முருகன் எம்.எல்.ஏ.விடம், கிராம மக்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தவள்ளி ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கனி, உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
    • இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்தது.

    ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் புழுக்காப்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்குடங்கள் எடுத்தும், திரளான பக்தர்கள் அலகு காவடி, பறவை காவடி எடுத்தும் முக்கிய வீதிகளின் வழியாக விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோவிலை அடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர் . கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர். தொடர்ந்து காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வீதி உலா வந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு அழைக்கப்பட்டு இருந்த தீகுண்டத்தில் பிரதான பக்தர்கள் தீமைகளை நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன்.
    • சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர்லலிதா முன்னிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர்பொன்னையா பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    சீர்காழி நகராட்சியில் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் உட்புற நோயாளிகளுடன் தங்குவோர் கட்டிடம் கட்டிமுடிக்கப் பெற்றுள்ளதையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் கசடு கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் ரூ.260 லட்சத்தில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள கட்டிடத்தினையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் எரிவாயு தகன மேடையும், மேலும் நகராட்சி உரகிடங்கில் ரூ.147.20 லட்சம் மதிப்பீட்டில் உயிரிய செயலாக்கு முறை அமைக்கும் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தினையும், சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

    அதனைதொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட மணக்குடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமையவுள்ள பஸ் நிலைய இடத்தினையும், தருமபுரம் சாலை ராஜன்தோட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.2.00 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தேன்.

    முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு சேய்தேன். நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்ஆய்வின்போது ராஜகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர்செல்வராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், சீர்காழி நகராட்சி ஆணையர்ராஜகோபாலன், நகராட்சி மண்டல செய ற்பொறியாளர்பார்த்திபன், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர்சம்பத், மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர்சனல்குமார் ஆகியோர் இருந்தனர்.

    ×