search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intellectual Center"

    • காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையப்பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு செயல்படு த்தும் திட்டங்களை மாணவ- மாணவிகள் நன்கு பயன்படுத்தி, உயர் நிலையை அடைந்து சமுதாய த்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என அமைச்சர் பேசினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையப்பணிகளை உணவு மற்றும் உணவு ப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது,

    மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவத ற்காக போட்டித்தேர்வுகளு க்கான அறிவுசார் மையம் காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, மத்திய மற்றும் மாநில அரசு உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க ப்படவுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் போட்டித் தேர்வு பயிற்சிக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. இந்த பயிற்சி கட்டுமான பணிகள் விரைந்து முடித்து பயன்பா ட்டிற்கு கொண்டுவரப்படும். மாணவ- மாணவிகள் விடா முயற்சி, தன்னம்பி க்கை மற்றும் குறிக்கோளுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவ- மாணவிகள் செல்போன்களை படிப்பி ற்காக மட்டும் பயன்படுத்தி க்கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். அரசு செயல்படு த்தும் திட்டங்களை மாணவ- மாணவிகள் நன்கு பயன்படுத்தி, உயர் நிலையை அடைந்து சமுதாய த்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, ஊராட்சி மன்றத் தலை வர்கள் அமுதா, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு
    • மார்ச் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

    வேலூர்:

    அரியூரில் ரூ.2.50 கோடியில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வேலூரை அடுத்த அரியூரில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கட்டிட பணிகள் தரமாக இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் முருகன் (பொறுப்பு), இளநிலை உதவி பொறியாளர் செல்வராஜ், கவுன்சிலர் கணேஷ்சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிவு பெறும் இடமாக அமைய இந்த அறிவுசார் மையம் கட்டப்படுகிறது. நூலகம் போன்று செயல்படும். இங்கு புத்தகங்கள் படிக்க வைக்கப்படும். மேலும் ஆன்லைன் மூலம் புத்தகங்கள் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதுதவிர தொழில்நுட்பங்களும் இடம்பெறும். போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்துபவர்களும் உதவியாக அமைய உள்ளது.

    அரியூரில் அமைக்கப்படுவதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள். கட்டிட பணிகள் வருகிற ஜனவரி மாதத்துக்குள் முடிக்கவும், இதர தொழில்நுட்ப பணிகள் முடிக்கப்பட்டு மார்ச் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன்.
    • சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர்லலிதா முன்னிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர்பொன்னையா பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    சீர்காழி நகராட்சியில் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் உட்புற நோயாளிகளுடன் தங்குவோர் கட்டிடம் கட்டிமுடிக்கப் பெற்றுள்ளதையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் கசடு கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் ரூ.260 லட்சத்தில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள கட்டிடத்தினையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் எரிவாயு தகன மேடையும், மேலும் நகராட்சி உரகிடங்கில் ரூ.147.20 லட்சம் மதிப்பீட்டில் உயிரிய செயலாக்கு முறை அமைக்கும் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தினையும், சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

    அதனைதொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட மணக்குடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமையவுள்ள பஸ் நிலைய இடத்தினையும், தருமபுரம் சாலை ராஜன்தோட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.2.00 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தேன்.

    முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு சேய்தேன். நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்ஆய்வின்போது ராஜகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர்செல்வராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், சீர்காழி நகராட்சி ஆணையர்ராஜகோபாலன், நகராட்சி மண்டல செய ற்பொறியாளர்பார்த்திபன், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர்சம்பத், மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர்சனல்குமார் ஆகியோர் இருந்தனர்.

    ×