search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால்குட ஊர்வலம்
    X

    பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

    பால்குட ஊர்வலம்

    • கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
    • இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்தது.

    ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் புழுக்காப்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்குடங்கள் எடுத்தும், திரளான பக்தர்கள் அலகு காவடி, பறவை காவடி எடுத்தும் முக்கிய வீதிகளின் வழியாக விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோவிலை அடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர் . கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர். தொடர்ந்து காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வீதி உலா வந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு அழைக்கப்பட்டு இருந்த தீகுண்டத்தில் பிரதான பக்தர்கள் தீமைகளை நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    Next Story
    ×