search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிமண்டபம்"

    • தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி யில் உள்ள தியாகி இமானு வேல்சேகரன் நினைவிடத் தில் மலர் அஞ்சலி செலுத்த வருகை தந்தார். அவரை தேவேந்திர பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பை பாலா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    இதனை தொடர்ந்து இமானுவேல் சேகரின் மகள் சுந்தரி பிரபா ராணி பேரன்கள் ரமேஷ், கோம கன், சக்கரவர்த்தி, சந்துரு, பேத்தி லதா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். பின்னர் தேவேந்திர பண்பாட்டுக் கழகம், இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளி யேற்ற வேண்டும், இமானு வேல் சேகரன் நினை விடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், அவரது பிறந்தநாளை அரசு விழா வாக அறிவிக்க வேண்டும், ஓட்டப்பாலம் ரவுண்டானா வில் இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் தாலுகா புல்வாய்குளம் கிராமம் சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட கவுரவ விரிவுரையாளர்கள் சார்பாக தமிழகத்தில் பணி யாற்றும் 6000-க்கும் மேற்பட்ட கவுரவ விரி வுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பண்பாட்டு கழக செயலாளர் புண்ணிய மூர்த்தி, பொருளாளர் முருகேசன், பா.ஜனதா நிர்வாகி குமார், வழக்கறிஞர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.20 லட்சத்தில் மகன்கள் கட்டினர்
    • 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 70).

    இவரது மனைவி இந்திராணி இவர்களுக்கு 3 மகன்கள் 2 மகழ்கள் உள்ளனர். நீலகண்டன் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக நாட்டு மருத்துவம் பார்த்து வந்தார்.

    பெண் கல்வியை ஊக்குவித்து பல பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து அப்பகுதி மக்களிடையே பேரன்பை பெற்றிருந்தார்.

    மேலும் தனது 3 மகன்களான ரமேஷ், ராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோரை நல்ல முறையில் படிக்க வைத்து இன்று வெளிநாட்டில் பல லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.

    இந்நிலையில் நீலகண்டன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய அவரது மகன்கள் அவருக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டினர் பின்னர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி விருந்து அளித்தனர். மேலும் சுமார் 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

    இதுகுறித்து அவரது மகன்கள் கூறுகையில்:-

    எங்களுடைய தந்தை எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கினார். அப்பா செய்ததில் நாங்கள் சிறிது கூட அவருக்காக எதுவும் செய்யவில்லை. எங்களுடைய அப்பா அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என அவ்வபோது கூறி வருவார்.

    அதன் காரணமாக அவருடைய நினைவு நாளில் தங்களால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றும் மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

    • மதுரையில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு வெண்கல சிலை-மணி மண்டபம் அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    30 ஆண்டு காலமாக இந்த சட்டமன்றத்தில் பணியாற்றியவரும், ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் நின்று வெற்றி பெற்ற பசும்பொன் தேவர் தந்த பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா, தற்போது கொண்டாடப்படும் இந்த வேளையில் அவருக்கு இந்த அரசு வெண்கல சிலை அமைத்தும், மணிமண்டபம் உருவாக்கியும், அவரது பிறந்த பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    மதுரை மண்ணின் மைந்தன், இசை பேரரசர், பத்மஸ்ரீ. டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவர் சென்னையில் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டியதற்கு, மதுரை மக்களின் சார்பாகவும், குறிப்பாக சவுராஷ்டிரா மக்களின் சார்பாகவும் தமிழக முதல்-அமைச்ச ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிலை

    மேலும் அவருடைய திருவுருவச்சிலை மதுரை யில் வைப்பதற்கு இடம் தேர்வு செய்திருப்பதாக கேள்விபட்டேன். அதே இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கி றேன்.

    அதே போலவே மதுரை மண்ணில் பிறந்த இசைக் குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியை கவுரவிக்கும் வகையில் சென்னையிலோ, மதுரையிலோ சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைத்து தர வேண்டும்.

    கூட்டுறவு வரலாற்றில் இல்லாத வகையில் ஜெய லலிதா, மாற்றுத்திறனாளி களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ஆணையிட்டதன் பேரில், 2011 முதல் 2021 வரை, 69 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு 292 கோடி ரூபாய் கடன் வழங்கி 2 முறை தேசிய அளவில் குடியரசு தலைவரிடம் விருதை நானே பெற்று வந்துள்ளேன்.

    கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி நடத்தினர். தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாட்சி யர்கள், பணி நியமனம் செய்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் பாகு பாடின்றி உறுப்பினர்களை சேர்க்க அனுமதித்து, தேர்தலை எவ்வித புகார் களின்றி நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர் ரூபினிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 48-வதுவார்டு கவுன்சிலர் ரூபினிகுமார் பேசும்போது கூறியதாவது:-

    மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் முழுமையாக செய்து தரவில்லை. அதனை விரைந்து செய்ய வேண்டும்.

    மேலும் மதுரைக்கு புகழ் சேர்த்த சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர ராஜன் அவர்களுக்கு சிலை அமைக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் சட்டசபையில் முதலில் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள். தற்போது தமிழக அரசு டி. எம். சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்காக சட்டசபையில் குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் மதுரையில் டி. எம்.சவுந்தரராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் சட்ட சபையில் குரல் கொடுத்த செல்லூர் ராஜூ அவர்களுக்கு நன்றிதனையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறோம்.

    இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் மதுரை மாநகராட்சியின் அடுத்த கூட்டத்தில் டி.எம். சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எனது வார்டு மக்கள் சார்பாகவும் அ.தி.மு.க. சார்பாகவும் கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சட்டசபையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • கலெக்டர் தலைமையில் ஒழுங்குப்படுத்தப்பட்டு விரைவில் அந்தப்பணி நிச்சயமாக தொடங்கும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தமிழக சட் டசபை கூட்டத் தொடரில் நேற்று கேள்வி நேரத்தின் போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் பேசியதாவது.-

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு தோவாளையில் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி, அந்த பணி முடியும் தருவாயில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. செய்தித்துறை அமைச்சர் நேரடியாக வந்து விசாரித்து அந்த இடம் இந்து அறநிலையத்து றைக்கு சொந்தமான இட மாக இருப்பதால், அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்படும் என்று கூறினார்கள். எனவே, மீண்டும் அந்த பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்குபதில் அளித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-

    இந்த பிரச்சினை தொடர்பாக என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடந்த கூட்டத் தொடரிலையே சட்டசபையில் இது குறித்து எடுத்து சொன்னார். தேர்தலுக்கு முன்பாகவே, அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து மாவட்ட கலெக்டரோடு நானும் (அமைச்சர் சாமிநாதன்) தொடர்பு கொண்டு பேசினேன். இந்த பிரச்சினை கோர்ட்டுக்கு சென்று விட்டது. மாவட்ட கலெக்டர் தலைமையில் இப்போது ஒழுங்குப்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் அந்தப்பணி நிச்சயமாக தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பிரச்சினையை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இம்மாத இறுதிக்குள் தானும் அந்த இடத்தை ஆய்வு செய்ய இருப்பதாகவும் உறுதியளித்தார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சட்ட மன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சட்டமன்றத்தில் பேசியதாவது:-

    குமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வேண் டுமென்று கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.1 கோடி நிதி ஒதுக் கப்பட்டு அதற்கான வேலைகளும் முடிக்கக் கூடிய நிலையில், தனி நபரால் வழக்கு தொட ரப்பட்டு அந்த இடம் இந்து சமய மற்றும் அறநிலைய துறைக்கு சொந்த மானது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த இடத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் ஆய்வு செய்து அந்த இடம் அரசுக்கு சொந்தமென்று மணி மண்டபத்திற்கு ஒதுக்கினார்கள். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த இடம் அறநிலையத்து றைக்கு சொந்தமென தீர்ப்பு வந்திருக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர் என்னுடைய கிராமத்தில் ஆய்வு செய்ய வந்த போது மணி மண்டபத்தையும் ஆய்வு செய்தார். அங்குள்ள திருமண மண்டபத்தையும் ஆய்வு செய்தார்.

    அப்பொழுது திருமண மண்டபத்திற்கான வாடகை ரூ.15 ஆயிரம் என நிர்ண யிக்கப்பட்டது. அதற்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த இடம் இப்போது அரசுக்கு சொந்தம். அறநிலையத்து றைக்கு சொந்த மானது என தீர்ப்பு வந்திருக்கிறது. எனவே அமைச்சர் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கிற்கு அப்பீல் செய்ய வேண்டும். அறநி லையத்துறையோடு ஆலோசித்து அந்த இடத்தி லேயே மணிமண்டபம் பணி களை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், குமரி மாவட்டத்தில் துறையின் பணிகள் குறித்து ஆய்வு செய்கிற போது அந்த பிரச்சினை எனது கவனத்திற்கு வந்தது. முதல்-அமைச்சர் உத்தரவின் அடிப்படையில் கலெக்டர் கவனத்திற்கு எடுத்து சொல்லியிருக்கிறோம். நீதிமன்ற உத்தரவு இருக்குமானால் அந்த பிரச்சினையை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள், நானும் அந்த இடத்தை ஆய்வு செய்ய இருக்கிறேன் என்றார்.

    • மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.
    • சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழக முதல் அமைச்சர் முக. ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழாகொண்டாட்டங்களை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படிவரலாற்று பக்கங்கள், மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.அதன்படி நமது தமிழகத்தை சேர்ந்தசுதந்திர போராட்ட வீரரும், தமிழர்களின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.ஆங்கிலேயன் கட்டுப்பாட்டில் இருந்தகமுதி கோட்டையில் நெல் உள்ளிட்ட தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதைக் கைப்பறிநம்முடைய மக்களுக்கு விநியோகம் செய்ததால் வெள்ளைக்காரனுடன் மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது‌. அந்த போரின் போது வீர மரணம் அடைந்த சுதந்திர போராட்ட வீரர் சிங்கம் செட்டியாரின் வரலாற்றை புத்தகமாகவெளியிட்டும், மேலும் உலகம் அறியும் வகையில் அவர் வீரமரணம் அடைந்த கமுதியில் மணிமண்டபமும்அமைத்து தரவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • ‘தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
    • நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.

    நாகப்பட்டினம்:

    தனித்தமிழ் இயக்கத் தந்தை பன்மொழி அறிஞர் மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா, மறை.தாயுமானவன் எழுதிய 'தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்' நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.

    அதில் பங்கேற்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ பேசும்போது, மறைமலை அடிகள் பிறந்த நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன். அந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார். விழாவில், பெரும்புலவர் பதுமனார், முனைவர் மறைமலை இலக்குவனார், மறைமலை அடிகளார் பேரன் தாயுமானவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அருங்காட்சியகத்துடன் ராஜகோபால தொண்டைமான் நினைவு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
    • நூற்றாண்டு விழா 4 நாட்கள் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து முதல் நாளான நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ராஜா ராஜகோபால தொண்டைமானின் சிலைக்கு, கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பின் அமைச்சர் ரகுபதி கூறுகையில்,

    மன்னர் தனது பதவிக்காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். கருணாநிதி புதுக்கோட்டையை 1974-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைத்திட ராஜகோபால தொண்டைமான் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொக்கைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.

    அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னர் அவர்களின் திருவுருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.

    புதுக்கோட்டை நகரில் ராஜகோபால தொண்டைமான் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைப்படும் என்று அறிவித்துள்ள முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் மன்னரின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மண்டபம் விரைவில் அமைக்கப்படும் .

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • நுகர்வோர் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள புதிய கோர்ட் வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டும் பணிகள் நடந்து முடிவடைந்தது.
    • ஓய்வு பெற்ற நீதிபதியும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவருமான சுப்பையா நுகர்வோர் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பனகல் கட்டிடம் வளாகத்தில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நுகர்வோர் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள புதிய கோர்ட் வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டும் பணிகள் நடந்து முடிவடைந்தது.

    இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    ஓய்வு பெற்ற நீதிபதியும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவருமான சுப்பையா நுகர்வோர் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் மோகன்தாஸ், முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் மற்றும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி,தை, பங்குனி மாதங்களில் அதிக ளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அந்த ஆடுகள் பலியிட்டு சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம்.

    கோவிலில் நேர்த்தி கடன்களை செலுத்த வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கோவில் வளாகத்தில் 20 விருந்து மண்டபங்கள் கட்டுவதற்கு 2020-21-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் ரூ.2 கோடியே 50 லட்சம் தொகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மதிப்பீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் கட்டுமான வேலைக்கான பணி ஆணை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தொண்டி அருகே ராணுவ வீரருக்கு மணிமண்டபம் திறப்பு - மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ராணுவ வீரர் பழனியின் மனைவி, குழந்தைகளுடன் மணிமண்டபம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் பழனி (வீர் சக்ரா) கடந்த

    2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி இந்திய- சீன எல்லையான லடாக் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார்.

    அவரது உடல் அவரது சொந்த ஊரான கடுக்கலூரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக மணிமண்டபம் கட்ட அவரது பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் அவரது பெற்றோர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்களது சொந்த செலவில் தன் மகனுக்கு மணிமண்டபம் அமைத்தனர். அதனை பழனியின் தாயார் லோகம்பாள்-தந்தை காளிமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிலையில் பழனியின் மனைவி மணிமண்டபம் திறப்பு விழாவில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது குழந்தை மற்றும் பெற்றோர்களுடன் மணி மண்டபம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×