search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை மனு"

    • நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம்
    • மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை.

    காங்கயம்:

    ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவை வழங்க வலியுறுத்தி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் எல்லப்பாளையம்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை காங்கயத்தில் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியில் 20 குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்து மேற்கண்ட 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கலாம் என விசாரணையில் உறுதி செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை. எனவே சொந்த வீடோ அல்லது வீட்டுமனைப் பட்டாவோ இல்லாமல் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
    • சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டு கோள் விடுக்கிறோம்.

    சிவகங்கை

    சிவகங்கை தி.மு.க. நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் விடு தலைக்கு தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு உண்டு. அதில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் வீரம், கொடை, சாதி மதம் பாராமல் சமூக நீதி பார்வையோடு இந்திய நாட் டின் விடுதலைக்கு பாடுபட்ட வரலாற்று சிறப்புமிக்க மாமன்னர் மருது பாண்டியர் களின் நினைவை போற்றும் விதமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெண்கல சிலையை வைப்பதற்கு ஆணை பிறப் பித்த முதல் அமைச் சருக்கு சிவகங்கை நகர்மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதுபோல சிவகங்கையை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் வெண்கல சிலை வைப்பதற்கு ஆணை பிறப்பிக்க சிவகங்கை நகர்மன்றத்தால் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. (நகர்மன்ற தீர்மானம் எண்.202) மேலும் சிவகங்கை நகரில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல சிலையை அமைப்பதற்கும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு மன்னர் மருதுபாண்டியர் களின் பெயரை சூட்டவும், காளையார்கோவில் நினைவிடம் அருகில் மணி மண்டபம் அமைக்கவும், சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.
    • சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.

    அப்போது சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    பெட்ரோல், டீசலுக்கு ஒரே விலை

    இந்தியா முழுவதும் டீசல், பெட்ரோலுக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு சிறப்பு கட்டணத்தில் அனுமதி வழங்க வேண்டும். சுங்க கட்டண செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் புதிய சுங்கச்சாவடிகள் அதிகரித்து வருகிறது. ஒப்பந்தம் முடிந்த பல சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை அகற்ற பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை மொத்த சுங்க கட்டணத்தையும் லாரி உரிமையாளர்களாகிய நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம். ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சங்ககிரியில் லாரிகளுக்கு என தனியாக தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். லாரி தொழிலுக்கு என சங்ககிரியில் தனி நல வாரியம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆன்லைன் அபராதம் விதிக்கும் பிரச்சனையிலிருந்து லாரி உரிமையாளர்களை காத்திட வேண்டும். லாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் லாரி பார்க்கிங் அமைத்து கொடுத்தால் வாகனங்கள் சாலையோரம் நிற்காமலும், விபத்து ஏற்படாமலும் இருக்கும்.

    ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத்திறனாளி கள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மூலம் 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளையும் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரத்து 200 மதிப்பி லான உபகர ணங்களை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி.யை சந்தித்து பேசினர்.
    • கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்களை வாழ வைத்துக் கொண்டுள்ள பவானி ஆறு மற்றும் பவானிசாகர் அணையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சியை எதிர்நோக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சுமார் ஒரு கோடி பொதுமக்களின் குடிநீர், வாழ்வாதாரம் மற்றும் 4 லட்சம் ஏக்கர் பயிர்சாகு படிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கோடை காலத்தில், தென்மேற்கு பருவமழை பெய்யாத காலங்களில் கூட 2000 கனஅடிக்கும் அதிகமான அளவு தண்ணீர் வீணாக கடலை நோக்கி செல்வதாக நேரில் பார்த்து வந்த விவசாய பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் வீணாக கடலுக்குள் செல்லும் பாண்டியாற்றை - பவானிசாகருக்கு வரும் மோயாற்றுடன் இணைக்க வேண்டும் என்ற 60 ஆண்டுகள் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

    இதனைத்தொடர்ந்து பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி.யை சந்தித்து பேசினர்.

    பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தின் சாத்தியக்கூறுகள், அதனால் ஏற்படும் நன்மைகள், பாண்டியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேரடியாக பார்வையிட்ட போது ஓடிய தண்ணீர் அளவு உள்ளிட்ட விவரங்களை அப்போது விரிவாக எடுத்து கூறினர்.

    மேலும் இத்திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடி க்கைகள் மேற்கொள்ள வேண்டி பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அப்போது பணி நிறைவு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் ஆசைத்தம்பி, கீழ்பவானி முறைநீர்ப்பாசன சங்க கூட்டமைப்பின் இணைச்செயலாளர் வெங்கடாசலபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கடந்த 2022 -ம் ஆண்டு காடாம்புலியூர் கணபதி நகர் என்ற இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • இதுவரை வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடம் எங்கு உள்ளது என்பதை அதிகாரிகள் காண்பிக்கவில்லை.

    கடலூர்:

    பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் மாநில துணைத்தலைவர் ஆதி மூலம், சமூக அலுவலர் ஆல்பேட்டை பாபு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-பண்ருட்டி வட்டத்தில் உள்ள 13 கிராமத்தில் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பத்தினருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு காடாம்புலியூர் கணபதி நகர் என்ற இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

    எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அதிகாரிகள் நேரில் காண்பித்து அளவீடு செய்து கொடுக்க வில்லை. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்ததன் பேரில் நேற்று எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் இடுகாடும் மற்றும் இறந்த உடல்களை புதைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு செட்டிபாளையம், திடீர் குப்பம் உள்ளிட்ட 5 கிராமத்தை சேர்ந்த 66 குடும்பத்தினருக்கும், கரும்பூரை சேர்ந்த 8 குடும்பத்தினருக்கும் இதுவரை வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடம் எங்கு உள்ளது என்பதை அதிகாரிகள் காண்பிக்கவில்லை. ஆகையால் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி அரசு வழங்கிய இடத்தை காண்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
    • கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு முதியோர் பணம், பட்டா, குடும்ப அட்டை மற்றும் பிரச்சினை களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுப்பார்கள்.

    இந்த மனு மீது அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை கலெக்டர் நேரில் அழைத்து பேசி உடனடியாக தகுதியு டைய மனுக்களுக்கு நட வடிக்கைகள் எடுக்க வலி யுறுத்துவார்.இதன் காரணமாக திங்கட்கிழமை களில் கலெக்டர் அலுவல கத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 15-ந் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கலைஞர் உரிமை தொகை வழங்கிட ஆணை பிறப்பித்து அதை நிறை வேற்றும் வகையில் ஒவ்வொரு குடும்ப தலைவி களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப் பட்டது.

    இந்த உரிமை தொகை கிடைக்காத நபர்கள் தங்கள் அருகே உள்ள இ-சேவை மையத்தில் மேல்முறையீடு மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இன்று (திங்கட்கிழமை) மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்திருந்தனர். இதில் பெரும்பாலும் உரிமை தொகை தொடர்பான மனுக்களாக இருந்தது. மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

    • மாற்று மனையில் புதிய வீடு கட்டி கொடுத்துவிட்டு, பிறகு வீடு மனைகளை கையகப்படுத்த வேண்டும்.
    • விவசாயிகளுக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள மும்முடிசோழகன் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மும்முடிசோழகன் கிராமத்தில் கடந்த 2000 முதல் 2007-ம் ஆண்டு வரை நில எடுப்பு செய்த வீட்டு மனைகளுக்கு புதிய சட்டத்தின் படி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மாற்று மனையில் புதிய வீடு கட்டி கொடுத்துவிட்டு, பிறகு வீடு மனைகளை கையகப்படுத்த வேண்டும். மேலும் விடுபட்ட மக்களுக்கு கருணைத்தொகை வழங்கிட வேண்டும். எங்கள் நிலங்களை சமன் செய்ய என்.எல்.சி. நிறுவனம் கட்டாயப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

    ஆகையால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பஞ்சப்படியாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக வீடுமனைகளை எடுத்துக்கொண்டு நிரந்தர வேலை, புதிய சட்டத்தின்படி குடியிருப்புடன் கூடிய மாற்றுமனை வழங்கிட வேண்டும். மேலும் தற்போது வசிக்கும் வீட்டு மனைகளை எடுக்கும் வரை எங்கள் நிலங்களை சமன் செய்வதோ, நீர் பாசனத்தை நிறுத்துவதோ செய்யக்கூடாது. 2000-ம் ஆண்டு முதல் கூடுதல் இழப்பீட்டுத் தொகை பெறாத விவசாயிகளுக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும். எங்கள் கிராம மக்களுக்கு மாற்று மனையாக 10 சென்ட் இடமும், 2 ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • பட்டா வழங்க கோரி கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஊர்பொது மக்கள் சார்பில் மனு அளித்தோம்.
    • எந்த அதிகாரியும் அதன் பின் எங்கள் கிராமத்திற்கு வந்து விசார ணை செய்யவில்லை

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா படப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலு வலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: -

    நாங்கள் வம்சாவழியாக மேற்காணும் விலாசத்தில் வசித்து வருகிறோம். கடந்த 1988ம் ஆண்டு எங்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப் பட்டது.

    அதனை மாற்றி தனி பட்டா வழங்க கோரி கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஊர்பொது மக்கள் சார்பில் மனு அளித்தோம். 2 வாரங்களில் அதற்குண்டான பதில் அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர்.

    ஆனால் எந்த அதிகாரியும் அதன் பின் எங்கள் கிராமத்திற்கு வந்து விசார ணை செய்யவில்லை. வந்த வர்கள் ஊரில் எத்தனை குடும்பங்கள் உள்ளது என்ற விவரத்தை மட்டும் கேட்டு சென்றுள்ளனர்.

    இதுநாள் வரை எங்களுக்கு எந்த பதிலும் கூறவில்லை. எனவே, சம்ம ந்தப்பட்ட அதிகாரி களை உடனடியாக அழைத்து, எங்களுக்கு தீர்வு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய சாலை அமைக்கும் பணிகள் 20 நாட்களில் தொடங்கப்படும்
    • சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம், சாத்தமங்க லம், சருகுவலையப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆற்று ஓரத்தில் மண் சாலை உள்ளது. இங்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி விவசாயி கள் சில நாட்க ளுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்ட ரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் இன்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகி யோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் புதிய சாலைகளை அமைப்பதற்கு ஏதுவாக பாதை உள்ளதா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கூறுகையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் தொடங்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது மேலூர் நகர் தலைவர் முகமது யாசின், ஒன்றிய செயலா ளர்கள் பாலு, ராஜராஜன், மூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, வேலாயுதம், பொது குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதாஅப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • தமிழக அரசு, பொதுமக்க ளுக்கு பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
    • அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் பங்கு அதிகம் உள்ளதால் பெருமைப்படுகிறோம்.

    நாமக்கல்:

    கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, பொதுமக்க ளுக்கு பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் பங்கு அதிகம் உள்ளதால் பெருமைப்படுகிறோம்.

    தற்போது தமிழகத்தில் உள்ள, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாகும்.

    ஆனால், தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்காதது வேதனை அளிக்கிறது.

    நாங்களும் முழுநேரம் பொதுமக்களுக்கு பணிகளை செய்து வருகிறோம். அதனால், எங்கள் மனுவை கருத்தில் கொண்டு, கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காழ்புணர்ச்சி காரணமாக மாற்று சமூகத்தினர் பிணத்தை புதைத்து வைத்துள்ளனர்.
    • சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயமும் நிலவி உள்ளது.

    கடலூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் கண்ணன், ஆட்டோ பாஸ்கர், இளங்கோவன் மற்றும் பலர் கோரிக்கை மனு அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வடலூர் அருகே கருங்குழி-கொளக்குடி செல்லும் வழியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காழ்புணர்ச்சி காரணமாக மாற்று சமூகத்தினர் பிணத்தை புதைத்து வைத்துள்ளனர். இதன் காரணமாக விவசாயம் செய்யவிடாமல் தடுத்து விட்டனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயமும் நிலவி உள்ளது. ஆகையால் இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×