search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணி மண்டபம் கட்டும் பணி
    X

    மணி மண்டபம் கட்டும் பணி

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி,தை, பங்குனி மாதங்களில் அதிக ளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அந்த ஆடுகள் பலியிட்டு சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம்.

    கோவிலில் நேர்த்தி கடன்களை செலுத்த வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கோவில் வளாகத்தில் 20 விருந்து மண்டபங்கள் கட்டுவதற்கு 2020-21-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் ரூ.2 கோடியே 50 லட்சம் தொகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மதிப்பீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் கட்டுமான வேலைக்கான பணி ஆணை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×