search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் அவதி"

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ளது ஆத்துக்கொல்லை கிராமம். இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்கள் இறந்தவர்கள் உடலை ஆத்துக்கொல்லை கிராமத்தை ஒட்டியவாறு செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் புதைப்பது வழக்கம்.

    இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த நிலையில் அந்த பாதையை சிமென்ட் சாலையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தடுத்து பாதையை துண்டிப்பு செய்து தகராறில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனால் இந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கை இல்லை என இப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது.
    • பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர் ஹெட்லைட்களை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி - கடலூர் ரோடு, சென்னை ரோடு, கும்பகோணம் ரோடு, காந்தி ரோடு, ராஜாஜி ரோடு ஆகிய ரோடுகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பண்ருட்டி-சென்னை ரோட்டில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோணம் ரோட்டில் கொள்ளுக்காரன் குட்டை வரையிலும் குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது.

    எல்.என்.புரம், கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. மேலும், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வெளியூரில் டூவீலரில் வந்த உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையி லும் அதிகாரிகள் ஊழிய ர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
    • தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லை யேந்தல் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

    ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தொட்டி அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதற்கு பல லட்சம் செலவில் தமிழக அரசு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் மக்கள் பயன் பெற முடியவில்லை. இங்கு மாதத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டும் காவிரி தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

    இதனால் இந்தப்பகுதியில் உள்ள பெண்கள் முதல் சிறுவர், சிறுமிகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் இ.சி.ஆர். சாலையில் உள்ள கீழக்கரை துணை மின்நிலையம் அருகில் உள்ள குழாய்களில் இரவும், பகலுமாக தள்ளு வண்டிகளில் குடங்களை வைத்து இழுத்துச்சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வருகிறது.

    லாரியில் விற்கப்படும் குடம் தண்ணீர் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி தில்லையேந்தல் ஊராட்சி பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூ ரிடம் மனு அளித்தனர்.

    இது தொடர்பாக ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-

    தில்லையேந்தல் ஊராட்சிக்கு காவிரி குடிநீர் முறையாக வருவது கிடையாது. மாதத்திற்கு 2 அல்லது 3 முறை தண்ணீர் திறந்து விடுவதால் மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தில்லை யேந்தல் ஊராட்சியில் அனைத்து பகுதியில் உள்ள குடிதண்ணீர் குழாய்களில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், ஊரணிகள் தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பாலையாறு அருகே ஒரு கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்க வேண்டும்.

    ஊராட்சி பகுதிகளை சுத்தம் செய்ய கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். உடனுக்குடன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய டிராக்டர் வசதி செய்து ஏற்படுத்தி தர வேண்டும்.

    கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் அதிகமான பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய தெரு விளக்கு வசதிகள் செய்யவில்லை. தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
    • அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி குளம் போன்ற முக்கிய நீர் நிலைகளில் வெகுவாக தண்ணீர் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள விவ சாயிகளும். நேற்று இரவு முதல் இன்று காலை வரை யில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த கனமழையால் இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க பூமி ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் மரக்காணம் சன்னதி வீதி அம்பேத்கர் நகர் செல்லி அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர் இதுபோல் மரக்காணம் தாழங்காடு சாலையிலும் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    • 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது.
    • 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது. இதனால் தியாகதுருகம், பெரிய மாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனா ர்பாளையம், பழைய சிறுவங்கூர், சூளாங்குறி ச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பா ளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

    இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் செயற்பொறியாளர் ரகுராமன் தலைமையில் கள்ளக்குறிச்சி மின் அளவு மற்றும் உணர்த்தி ஓர்வு அதிகாரிகள் விரைந்து வந்து மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதனை தொடர்ந்து இரவு சுமார் 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்படாத மி ன்வெட்டால் தியாகதுருகம் பகுதி பொது மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    • வீட்டிற்கு வெளியே நிறுத்தி விடுவது வழக்கம்.
    • சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி சிக்னல் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் காய்கறிகளை இறக்கி, ஏற்றி செல்வது வழக்கம்.

    மார்க்கெட்டுக்கு எதிர்ப்புறம் ஸ்ரீ நாராயண குரு சாலை உள்ளது. இது குடியிருப்பு பகுதியாகும்.

    இந்நிலையில் மார்க்கெட்டில் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயண குரு சாலையில் கடைசி வரை நிறுத்தி விடுகின்றனர்.இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது 4 சக்கர வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விடுவது வழக்கம்.

    ஆனால் சரக்கு வாகனங்களை சாலை முழுவதும் வரிசையாக நிறுத்தி விடுகின்றனர்.

    இதனால் குடியிருப்போர் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் சரக்கு வாகனங்களை வரிசையாக நிறுத்தி விடுவதால் வாகனங்களுக்கு பின்புறம் மறைவாக நின்று கொண்டு ஒரு சில ஆசாமிகள் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளை முகம் சுளிக்க வைக்கிறது. பெரும்பாலும் இப்பகுதி சுத்தமான பகுதி ஆகும். ஆனால் தற்போது இந்த வாகனங்கள் காரணமாக அசுத்தம் நிறைந்த பகுதியாக காட்சி இருக்கிறது.

    தற்போது மழை காலமாக இருப்பதால், சரக்கு வாகனங்களில் இருக்கும் காய்கறி கழிவுகள் மழை நீரில் அடித்துக் கொண்டு தெருவில் கொட்டி அசத்தமாக காட்சி அளிக்கிறது.

    இந்த சாலையில் தனியார் ஆஸ்பத்திரிகளும், தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

    எனவே சரக்கு வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும். அதிகாரிகள் விரைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • மதுரையில் விடிய விடிய கனமழையால் கால்வாய் ஆக்கிரமிப்பால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் சூழ்ந்தது.
    • சகதி காடான வீதிகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.



    மதுரையில் பெய்த மழையால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால்தந்தி நகர், பார்க் டவுன், ஒத்தக்கடை, ஊமச்சிக்குளம், அய்யர்பங்களா, திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக மழை தண்ணீர் கண்மாய்களுக்கு செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. வீதிகளிலும் தண்ணீர் தேங்கி சகதிகாடாக உள்ளதால் மக்கள் நடக்க கூட முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு-

    சிட்டம்பட்டி -13, கள்ளந்திரி -10, தனியா மங்கலம்- 14, மேலூர் -8, சாத்தையாறு அணை- 9, வாடிப்பட்டி -22, உசிலம்பட்டி -5, மதுரை வடக்கு -21, தல்லாகுளம் -19, விரகனூர் -7, விமான நிலையம் -8, இடைய பட்டி -40, புலிப்பட்டி -40, சோழவந்தான் -11, மேட்டுப்பட்டி -19, பேரையூர்- 45, ஆண்டிப்பட்டி -29.

    மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 29.9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 763கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1759 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதுரை நகர குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 1819 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது.
    • முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றி உள்ள ராமநத்தம், வாகையூர், பாளையம், கீழ்ச்செருவாய், ஆவினங்குடி, பெண்ணாடம் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது. மழையின் காரணமாக திட்டக்குடி நகரில் மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் அதிகாலை 3 மணிக்கு வந்துள்ளது.

    இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் சிறுவர்களை வைத்துக்கொண்டு தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். தற்பொழுது இதுபோன்று பகல் நேரங்களிலும் எந்த முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

    • வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள்அவதிப்படுகின்றனர்.
    • இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


     



    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் செல்லும் வழியில் உள்ளது சாத்தமங்கலம். இந்த கிராமத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் மற்றும் விஷ பூச்சிகள் புகுந்து விடும் என்ற பயத்தில் உள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

    தேங்கிய மழை நீரால் கொசுதொந்தரவும் அதிகமாக உள்ளது. பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் தேங்கிய மழைநீரை கடந்து செல்லும் போது சிரமத்துக்கு உள்ளாவதாகவும் கூறினர்.

    இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    அடிக்கடி மழை பெய்யும் போதெல்லாம் இந்த நிலை ஏற்படுகிறது. மழைநீர் வடியவும் நீண்ட நாட்கள் ஆகிவிடுகிறது. தற்போது தொடர்மழையினால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாங்கள் ஊரை விட்டு காலி செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டபட்டு மூடப்படாமல் உள்ள குழிகளால் திருச்சி தூசு நிறைந்த நகராக மாறியுள்ளது
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பெரியார் சிலை அருகாமையில் சாலையின் நடுப்பகுதி துண்டிக்கப்பட்டது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மாநகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கும் அதிக நிதி செலவிடப்படுகிறது.

    ஆனால் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை பார்க்கும் போது இது அழகான மாநகரமா? என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. காரணம், மாநகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டு குண்டும், குழியுமாக கிடக்கின்றன. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பதிப்பதற்காக மேற்கண்ட சாலைகளில் குழிகள் தோண்டப்படுகிறது.

    இவ்வாறு சாலைகள் துண்டிக்கப்படும் போது சில நேரங்களில் குடிநீர் குழாய்களும் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஆறாக ஓடி அந்தப் பகுதி மழை இல்லாமலேயே சேரும், சகதியுமாக மாறிவிடுகிறது.

    சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தினால் அந்தப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி புயல் பலமாக வீசுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பெரியார் சிலை அருகாமையில் சாலையின் நடுப்பகுதி துண்டிக்கப்பட்டது. அதற்கு முன்பாக தமிழ்நாடு ஓட்டல் பகுதி, அரிஸ்டோ கார்னர் பகுதி ஆகிய இடங்களில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டன.

    ஏற்கனவே உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குறைகளை சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    நாளும் தூசு மண்டலத்தில் வசித்து வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் மட்டுமின்றி சாலையோரம் மற்றும் கடைகள் நடத்தும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடைகளில் உள்ள பொருட்கள் மீது துடைத்து வைத்த ஒரு சில விநாடிகளில் அந்த வழியாக கடக்கும் வாகனங்களால் மீண்டும் தூசு படிந்து விடுவதால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு செல்லவும், பொருட்களை வாங்கவும் மறுக்கின்றனர்.

    இது தொடர்பாக வாசன் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, சாலையை துண்டித்து பைப் லைன் பதித்து மண் போட்டு மூடி விடுகிறார்கள். அதன் பின்னர் வெகு நாட்கள் கழித்த பின்னரே ஜல்லி போட்டு பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்கின்றனர்.

    பின்னர் தார் போடுவதற்கு மேலும் சில வாரங்கள் தாமதம் செய்கிறார்கள். இதனால் ஜல்லிகள் பெயர்ந்து மீண்டும் குண்டும் குழியுமாக சாலை மாறி விடுகிறது. இதற்கெல்லாம் எப்போது விடிவு என்றே தெரியவில்லை என்றார்.

    இந்த சாலைகள் துண்டிக்கப்பட்டு மேடு பள்ளமாக இருப்பதால் கவுன்சிலர்களுக்கும் குடைச்சல் இருக்கிறது. அதனால் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் அவ்வப்போது அனைத்து கட்சி கவுன்சிலர்களும் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, திருச்சி மாநகராட்சி பகுதியில் 1,330 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலைகள் உள்ளன. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் துண்டிக்கப்படுகிறது.

    ஒரு இடத்தில் சாலையை துண்டித்தால் அந்த இடத்தில் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க காண்டிராக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளையும் சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைந்து முடிப்போம் என்றார்.

    புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் கோடை வெயில் இருக்கும். ஜூலை மாதத்தில் வெயில் குறைந்து காற்று வீசத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை முடிந்து ஆகஸ்டு 3-வது வாரம் தொடங்கி விட்ட நிலையிலும் இதுவரை காற்று வீசவில்லை.

    அதே நேரத்தில் கோடையை விட அதிக வெப்பமான வெயிலின் தாக்கம் உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் வீசும் வெயிலில் கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருகிறது.

    இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலால் புதுவை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    ×