search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் துண்டிப்பு"

    • குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. மேலும் ஆந்திரா பகுதியிலும் பலத்த மழைபெய்தது. இதனால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பொன்னேரி அடுத்த சோமஞ்சேரி, சின்னக்காவனம், தத்தை மஞ்சி ஆகிய 3 இடங்களில் ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களுக்குள் புகுந்தது. ஆரணி ஆற்றின் கரை உடைந்து பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை மின்சாரம், குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வரும்நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் சூறைக்காற்றில் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் 4-வது நாளான இன்னும் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் மின்சப்ளை சீராகவில்லை. பொன்னேரி மூகா ம்பிகை நகர், சின்ன க்காவனம், பழவேற்காடு வைரங்குப்பம், கரிமணல், தாழங்குப்பம், பிரளயம்பாக்கம் சோமஞ்சேரி, கம்மார் பாளையம், மீஞ்சூர் அத்திப்ப ட்டு புதுநகர், மேலூர், அரியன்வாயல் உள்ளிட்ட பகுதி களில் இன்னும் மின்தடை உள்ளதால் பொது மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் அப்பகுதி மக்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் படகில் சென்று வருகிறார்கள்.

    • லாரி மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கே விழுந்தது.
    • உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து முந்திரி தொலும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இது பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவில் அருகே சென்ற போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியது. இதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கோ விழுந்தது. மேலும், மின்கம்பத்தில் இருந்த கம்பிகள்அறுந்து சாலையில் தொங்கியது. உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சரிசெய்து மின் இணைப்பு வழங்கினர்.

    • ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்
    • வாட்ஸ் ஆப் குழு அமைத்து பின் தொடரும் வாலிபர்கள்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அடிவாரத்தில் 2 யானைகள் சுற்றி திரிகின்றன. நேற்று இரவு 9 மணியளவில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பாரத கோவில் வழியாக சந்தைக்கோடியூர் ஏரி கரையின் மீது நடந்து சென்றது.

    மின்சாரம் துண்டிப்பு

    இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் முன் கூட்டியே மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    போலீசாரும் ஒலி பெருக்கி மூலம் அனைவரும் வீட்டிற்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரும் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் நேற்று இரவு 9 மணியளவில் சந்தைக்கோடியூர் வக்கணம்பட்டி புது ஓட்டல் தெரு ஏலகிரி கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மின்சாரம் இருந்தால் அதன் வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி யானை ஊருக்குள் வந்து விடும் என்று எண்ணி நேற்று இரவு மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு சந்தைக்கோடியூர் பகுதியில் இருந்து சக்கரகுப்பம் வழியாக வக்கணம்பட்டி மாரியம்மன் கோவில் ஆலயம் எதிரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி எதிரே 2 யானைகள் முகாமிட்டுள்ளது.

    இரவு நேரத்தை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் யானையை பின் தொடர்ந்தனர். ஆபத்தான நிலையில் தங்களது செல் போனில் வீடியோ எடுத்து யானை வருது உஷார் என வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்து அதில் பதிவு செய்து வருகின்றனர்.

    பொது மக்கள் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் யானைகள் ஆலங்காயம் காட்டு பகுதிக்கு சென்று விடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் பலத்த சூறை காற்றுடன் கன மழை பெய்து வந்தது.
    • மரத்தின் மரக்கிளை உடைந்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் இரண்டாக உடைந்து குடியிருப்புக்கு செல்லும் சாலையின் குறுக்கே சாய்ந்தது.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன டிப்படையில் தருமபுரி மாவட்டத்திலும் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் பலத்த சூறை காற்றுடன் கன மழை பெய்து வந்தது.

    இதனையடுத்து நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் தருமபுரி அடுத்த தொழில் மைய குடியிருப்பு பகுதியில் இருந்த பழமையான மரத்தின் மரக்கிளை உடைந்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் இரண்டாக உடைந்து குடியிருப்புக்கு செல்லும் சாலையின் குறுக்கே சாய்ந்தது.

    இதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். உடனடியாக குடியிருப்பு பகுதிக்கு மின்சாரம் துண்டிக்கபட்டது.

    தகவலறிந்து வந்த மின்சார துறையினர் மரக்கிளை மற்றும் மின்கம்பத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்

    • பலத்த மழையால் நடவடிக்கை
    • பொதுமக்கள் அவதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் நேற்று இரவில் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மழை விட்ட பின்னரும் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கண்ணமங்கலம், ஒண்ணுபுரம், சந்தவாசல், அம்மாபாளையம், வாழியூர் உள்ளிட்ட 75 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி கிடந்தது.

    கொசுக்களின் தொந்தரவு காரணமாக உழைக்கும் கிராம மக்கள் தூக்கம் இல்லாமல் 6 மணி நேரத்திற்க்கும் மேலாக தவியாய் தவித்து வந்தனர்.

    • அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு
    • தேர்வு நேரங்களில் மின்சாரம் சீராக விநியோகிக்க வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    காலை 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் காலையில் எழுந்து படிக்கலாம் என்று நினைத்திருந்த அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வு நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் பலத்த மழை காரணமாக நள்ளிரவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் காலை வரை வராததால் மாணவர்கள் காலையில் எழுந்து படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் வசதி வாய்ப்பு இல்லாத ஒரு சில மாணவர்கள் காலையில் பள்ளி வளாகத்திற்கு வந்து தங்கள் படிப்பை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் பொழுது துண்டிக்கப்படும் மின்சாரம் உடனடியாக சரி செய்து அதை இயக்குவதற்கான வழிமுறை களை மின்சாரத்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் கால தாமதமாக செய்வதால் இன்று அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்-1 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    எனவே தேர்வு நேரங்களில் மாணவர் நலன் கருதி மின்சார துறை பல்வேறு காரணங்களால் துண்டிக்கப்படும் மின்சாரத்தை சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் சரி செய்து இயக்குவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • ஜனார்த்தனம் திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார்.
    • தீவிபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஜனார்த்தனம். இவர், அதே பகுதி திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. அங்கிருந்த பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் வேகமாக தீப்பற்றி எரிந்ததால் அதனை அணைக்க முடியவில்லை. அப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் விநாயகமூர்த்தி, ஞானவேல் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீயை கட்டுப்படுத்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பூண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களுக்கு மின்சாரம் தடைபட்டது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,
    • மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை

    கடலூர்:

    திட்டக்குடி அருகே வாகையூர்,ஆக்க னூர், பாளையம், இடைச்செ ருவாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இன்று காலை 9.30 மணி வரை மின்சாரம் இல்லாமல் பள்ளி செல்லும் மாணவ மாணவர்கள், குழந்தைகள், முதியோர் உட்பட மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்.     

    நேற்று மழை காற்று அதிக அளவில் இல்லை, இருப்பினும் மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் தங்கு தடை இன்றி பொது மக்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது.
    • முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றி உள்ள ராமநத்தம், வாகையூர், பாளையம், கீழ்ச்செருவாய், ஆவினங்குடி, பெண்ணாடம் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது. மழையின் காரணமாக திட்டக்குடி நகரில் மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் அதிகாலை 3 மணிக்கு வந்துள்ளது.

    இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் சிறுவர்களை வைத்துக்கொண்டு தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். தற்பொழுது இதுபோன்று பகல் நேரங்களிலும் எந்த முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

    • கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைக்கு ஹெல்த்கேம்ப் காவலா் குடியிருப்பு அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    இதன் காரணமாக அப்பகுதிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியா்கள் மின் கம்பிகளை சீரமைத்தனா். ஊட்டி குன்னூரிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது

    ×