என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி நகரில் இரவு முழுவதும் மின்தடை: மக்கள் அவதி
- பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது.
- முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றி உள்ள ராமநத்தம், வாகையூர், பாளையம், கீழ்ச்செருவாய், ஆவினங்குடி, பெண்ணாடம் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து உள்ளது. மழையின் காரணமாக திட்டக்குடி நகரில் மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் அதிகாலை 3 மணிக்கு வந்துள்ளது.
இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் சிறுவர்களை வைத்துக்கொண்டு தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். தற்பொழுது இதுபோன்று பகல் நேரங்களிலும் எந்த முன் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
Next Story