search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் அவதி
    X

    புதுவையில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் அவதி

    புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் கோடை வெயில் இருக்கும். ஜூலை மாதத்தில் வெயில் குறைந்து காற்று வீசத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை முடிந்து ஆகஸ்டு 3-வது வாரம் தொடங்கி விட்ட நிலையிலும் இதுவரை காற்று வீசவில்லை.

    அதே நேரத்தில் கோடையை விட அதிக வெப்பமான வெயிலின் தாக்கம் உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் வீசும் வெயிலில் கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருகிறது.

    இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலால் புதுவை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    Next Story
    ×