search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy sun"

    • பெரியகுளம் கண்மாயில் வேகமாக குறையும் நீர்மட்டத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • கடும் வெயிலின் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குைறந்து வருகிறது.

    வத்திராயிருப்பு,

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் பெரியகுளம் கண்மாய், வீராக சமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த இரு கண்மாயை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் தென்னை, நெல் ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கோடை கால நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கி்றது. அறுவடை முடித்தவர்கள் முதல் போக நெல் சாகுபடி செய்வதற்காக விவசாய பணியினை தொடங்கு வதற்கு வயல்களை தயார் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள சூழ்நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் குறைந்து வருகிறது. கடும் வெயிலின் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குைறந்து வருகிறது. தற்போது முதல் போக நெல் நடவு செய்வதற்காக நெல் நாற்றங்கால் பாவ போதுமான தண்ணீர் கிணறுகளில் இருப்பதால் நாற்றங்கால் பணியை தொடங்கி உள்ளோம்.

    மேலும் கண்மாயில் தற்போது 20 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டால் நீர்மட்டம் வெகு வாக பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை யுடன் கூறினர்.

    வேடசந்தூர் பகுதியில் வெயில் கொடுமைக்கு ஓய்வு பெற்ற வயர்மேன் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பகல் பொழுதில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவித்து வருகின்றனர்.

    வெயில் கொடுமையால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேடசந்தூர் குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சை (வயது80). ஓய்வு பெற்ற வயர்மேன். கடந்த சில நாட்களாக மனநலம் பாதித்ததுபோல் சுற்றிதிரிந்துள்ளார். திடீரென பிச்சை மாயமானார்.

    அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் வடமதுரை சாலையில் உள்ள காலி இடத்தில் பிணமாக கிடந்தார். வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பிச்சை இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அய்யலூர் அருகே சங்கிலிகரடு மலை அடிவாரத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்துள்ளார். அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் இதை பார்த்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரித்தபோது அவர் பிலாத்து பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என தெரிய வந்தது. மலைப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சுட்டெரித்த வெயிலால் மயங்கி மலைப்பகுதியிலேயே இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சேலத்தில் வெயில் கொடுமை அதிகரித்துள்ளதால் எலுமிச்சம்பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    சேலம்:

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சேலத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் கொடுமையால் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதேபோல் எலுமிச்சம் பழத்திற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

    எலுமிச்சம் பழம் ஜூஸ்-க்கு பயன்படுவதால் அதற்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. கடந்த வாரம் 3 ரூபாய்க்கு விற்ற ஒரு எலுமிச்சம்பழம்,  7 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கு விற்ற பழம் 8 முதல் 10 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
    நாகர்கோவிலில் கோடைகாலம் போல இப்போதே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு அதிக அளவு நீர்வரத்து இருந்தது. மேலும் குளம் போன்ற நீர்நிலைகளும் பெரும்பாலும் நிரம்பி விட்டன.

    இந்த நிலையில் படிப்படியாக மழை குறைந்து வந்தது. தற்போது கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் மழை பெய்யாத சூழ்நிலை உள்ளது. மழை குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோடை காலம் போல வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் காலை நேரத்திலேயே உச்சிநேரம் போல வெயில் கொளுத்துகிறது. இன்றும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    அதிக வெயில் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துவிட்டது. அத்தியாவசிய பணிக்காக வெளியில் செல்பவர்கள் குடை பிடித்த படி சென்றனர். மேலும் சாலையோரங்களில் வெப்பத்தை தணிக்கும் வகையில் பழச்சாறு கடைகளும் ஆங்காங்கே உருவாகி உள்ளன. ஆரஞ்சு பழம் மற்றும் மாதுளம் பழச்சாறுகள் அதிகளவு இந்த கடைகளில் விற்கப்படுகிறது. இதே போல கரும்புச்சாறு, குளிர்பான கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆங்காங்கே நுங்குகளும் குவித்து விற்பனை செய்யப்படுகிறது.

    இளநீர் விற்பனையும் அதி அளவு நடைபெறுகிறது. ஒரு இளநீர் சராசரியாக ரூ.40 வரை விற்பனை ஆகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீரை அதிகம் குடித்து வருகிறார்கள். கோடைகாலம் போல இப்போதே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
    புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் கோடை வெயில் இருக்கும். ஜூலை மாதத்தில் வெயில் குறைந்து காற்று வீசத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை முடிந்து ஆகஸ்டு 3-வது வாரம் தொடங்கி விட்ட நிலையிலும் இதுவரை காற்று வீசவில்லை.

    அதே நேரத்தில் கோடையை விட அதிக வெப்பமான வெயிலின் தாக்கம் உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் வீசும் வெயிலில் கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருகிறது.

    இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலால் புதுவை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    ×