search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன்"

    • தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார்.
    • உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது தந்தை வாசு. தாயார் மணி (54). ஜீவா என்கிற தங்கை உள்ளார். பிரபு மற்றும் அவரது தங்கை ஜீவா ஆகியோர் சிறுவயதில் இருந்தபோதே தந்தை வாசு இறந்து விட்டார்.

    தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார். இதனால் பிரபுவுக்கு உயிருடன் உள்ள தனது தாயாருக்கு சிலை வடித்து கோவில் கட்ட வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆசையாக இருந்து உள்ளது.

    தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள தாயாரை பெருமைபடுத்தும் வகையிலும், நன்றி கடன் செலுத்தும் வகையிலும் தனது வீட்டிற்கு அருகே 1,200 சதுர அடி நிலம் வாங்கி, கோவில் போன்று கட்டி அதில் 3 அடி உயரத்தில் தனது தாயாருக்கு சிலை வைத்து உள்ளார்.

    இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    இது குறித்து பிரபு கூறியதாவது:-

    நான் சிறுவயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்து விட்டார். பல்வேறு கஷ்டங்களை சந்தித்து என்னை வளர்த்த தாயாரை கவுரவப்படுத்த நான் எண்ணினேன். இறந்த பின்னர் பிண்டம் வைத்து திதி கொடுப்பதை விட, உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது.

    இத்தாலியன் மார்பிள்ஸ் கல் மூலம் ரூ.1.50 லட்சம் மதிப்பில் வெள்ளை நிறத்தில் செதுக்கப்பட்டு உள்ள இந்த சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக இறந்தவர்களுக்கு தான் சிலை வைப்பார்கள். ஆனால் உயிருள்ள ஒருவருக்கு சிலை வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாயின் சிலையை அப்பகுதியை சேர்ந்த பலர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    உயிருடன் இருக்கும் எனக்கு மகன் சிலை வைத்து இருப்பது பெருமையாகவும், நெகிழ்வாகவும் இருப்பதாக பிரபுவின் தாயார் மணி கூறினார்.

    மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற மகன் மீது போலீசார் வழக்கு

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 44), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரிய கொரட்டி பிறீடா (40). இவர்களுக்கு ஜான் பிஜோ (17), ஜான் பினோ (7) என 2 மகன்கள் உள்ளனர்.

    ஜான் போஸ்கோ தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருவதால், தற்போது அப்பகு தியிலுள்ள வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மேக்காமண்ட பத்தில் தனது தாய் இறந்த தால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மரிய கொரட்டி பிறீடா மகன்களுடன் அங்கு தங்கி இருந்தார்.

    நேற்று அவர், கணவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தனது மகன் ஜான் பிஜோவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்ததால், ஜான் பிஜோ திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    இந்த விபத்தில் மரிய கொரட்டி பிறீடா சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மரிய கொரட்டி பிறீடா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஜான் பிஜோ லேசான காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கடையாலுமூடு குழிக்கால விளையை சேர்ந்த தபசிமுத்துவிடம் (55) விசாரணை நடத்தினர்.

    குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று மரிய கொரட்டி பிறீடாவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பி றகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற ஜான் பிஜோ மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எனது மகன், மருமகள் ஆகியோர் சேர்ந்து கொண்டு எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர்.
    • அரசால் வழங்கப்படும் மாத உதவி தொகையையும் அபகரித்து கொள்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மானோஜிப்பட்டியை சேர்ந்த தாமஸ் மனைவி மலர்கொடி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    எங்களுக்கு மனவளர்ச்சி குன்றிய மகள் உள்பட 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். எனது கணவர் தாமஸ் இறந்து 40 நாள் ஆகிறது. அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை கூட செய்யவில்லை. இந்நிலையில் எனது மகன், மருமகள் ஆகியோர் சேர்ந்து கொண்டு எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர். அரசால் வழங்கப்படும் மாத உதவி தொகையையும் அபகரித்து கொள்கின்றனர்.

    மேலும் வீட்டையும் அபகரித்து விட்டனர். எனவே மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார்.
    • மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 17 வயது ஆகிறது.

    இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் வயநாட்டை சேர்ந்த சுனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுனீஸ், அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து சென்றார்.

    இதுபற்றி அக்கம்பக்கத்தினர், ராஜேஸ்வரியின் மூத்த மகனிடம் கூறினர். அவர் தாயாரிடம் இதுபற்றி கேட்டார். இதில் தாய்க்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவதன்றும் சுனீஸ் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அவரை ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேஸ்வரி, மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார். அவருடன் சேர்ந்து சுனீசும், தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சிறுவன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தாக்கியதாக அவரது தாயார் ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் சுனீஸ் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார்.
    • பல இடங்களில் தேடியுள்ளனர்.

    பல்லடம் :

    கோவை மாவட்டம், சூலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). இவரது மனைவி கவிதா ( 29 ). இவர்களது மகன்கள் ரத்தீஷ்( 8 ), மிஜின்( 6 ) இந்த நிலையில் கடந்த 29- ந்தேதி பொங்கலூர் அருகே உள்ள வேலம்பட்டியில் வசிக்கும் கவிதாவின் அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கவிதா மற்றும் அவரது 2 மகன்களுடன் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவர்கள் பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக வேலம்பட்டி வந்த பெருமாள் இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தாயை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மிளகரணை, நடுத்தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது50). இவரது மகன் மாதவன் (25). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சற்று மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் நோய் முழுமையாக குணமாக வில்லை.

    இந்தநிலையில் சாந்தி நேற்று அதிகாலை வீட்டில் இருந்தார். அப்போது மாதவன் பணம் கேட்டுள் ளார். அவருக்கு பணம் கொடுக்க சாந்தி மறுத்து விட்டார். இதில் ஆத்திர மடைந்த மாதவன் இரும்பு கம்பியை எடுத்து வந்து சாந்தியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த சாந்தி மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.

    • காப்பகத்தில் ஒப்படைப்பு
    • ஆசாரிபள்ளம் போலீசார் கேரளா சென்று மீட்டு அழைத்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    ஆசாரிபள்ளம் அருகே பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 28).

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவின ரான கிருஷ்ண குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கிருஷ்ணகுமார் கடந்த சில வருடங்களாக வெளி நாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது அவர் தனது வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரி கிறது.

    கவிதாவுக்கும் கிருஷ்ண குமாருக்கும் ஏற்கனவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் கவிதா வுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே கவிதா தனது 6 வயது மகனுடன் திடீரென மாயமானார்.அவரை உறவினர் வீடு களில் தேடியும் கவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கவிதாவின் தாயார் பார்வதி ஆசாரி பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கவிதா கேரளாவில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுனில் தலைமையில் ஏட்டு விஜி கலா ஆகியோர் கேரளா சென்று கவிதாவை மீட்டு ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா, கவிதாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு கவிதாவும், அவரது மகனும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • வேலு என்பவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.
    • மகன் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பேச்சிப்பாறை அணைக்கு அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.

    இந்த குடியிருப்புக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாது. பாதிக்கப்பட்ட நபரை சில கி.மீ. தூரம் தூக்கி சென்று அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்ற பரிதாப நிலை இருக்கிறது.

    இந்தநிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பேச்சிப்பாறை கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பைச் சேர்ந்த வேலு (வயது 67) என்பவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.

    இதையடுத்து அவருடைய மகன் விக்னேஷ், தந்தையை காப்பாற்ற தோளில் சுமந்து சென்றார். அந்த வகையில் 3 கி.மீ. தூரம் கடந்து சென்ற அவர் பின்னர் ஒரு காரில் ஏற்றி பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வேலு ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    இதனை கேட்டு மகன் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சாலை வசதியில்லாததால் நோயால் பாதித்த வேலுவை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாததால் அவர் உயிரிழந்த சம்பவம் பழங்குடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகன் ரமேஷ் (வயது 32)குளச்சலில் ஒரு கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மதியம் ரமேஷ் மேற்கு நெய்யூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தாய் ரெஜினாளை (55) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.செம்பொன்விளை கடந்து பெத்தேல்புரம் கிணறு குற்றிவிளை வளைவில் செல்லும்போது வர்த்தான்விளையில் ஒரு திருமண வீட்டிலிருந்து 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    இந்த மோட்டார் சைக்கிள் எதிர்ப்பாராமல் நிலை தடுமாறி ரமேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரெஜினாள் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குளச்சல் போலிசார் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.
    • கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கடியப்பட்ட ணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஆன்றனி மைக்கேல் (வயது 43). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி சபின் சஜோனா (32). இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சபின் சஜோனா தனது மகன்களுடன் வீட்டிலிருந்து மாயமானார். ஆன்றனி மைக்கேல் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.

    இச்சம்பவம் குறித்து ஆன்றனி மைக்கேல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 3 பேரை தேடி வருகின்றனர்.

    • ரவடி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவரது 2-வது மகன் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மணி கண்டனுடன் சுற்றித்திரிவதை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் குடும்பத்திற்கும் நடராஜன் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் மூத்த மகன் ஆகாஷ் நேற்று எம்ஜிஆர் நகர் பகுதியில் சென்ற போது நடராஜன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஆகாஷை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் குத்தினார்கள்.

    இதையடுத்து படு காயம் அடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக ஆசாரிப்ப ள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஆகாஷ் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.அவருடன் அவரது தந்தை மணிகண்டனும் வந்தார்.

    சி.பி.எச்.ரோடு சிவன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது ஆகாஷையும் அவரது தந்தை மணிகண்டனையும் தடுத்து நிறுத்தி நடராஜன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஈசாக், ராஜா,வெற்றிவேல், ராஜராஜன் ஆகியோர் தகராறு செய்தனர்.

    பின்னர் ஆகாஷையும், அவரது தந்தை மணிகண்டனையும் கத்தியால் குத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கூச்சலிட்டனர்.அங்கு பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவ ருக்கும் சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணி கண்டனின் மனைவி கீதா வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெ க்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் ஈசாக், நடராஜன் மகன் மணிகண்டன்,ராஜா, வெற்றிவேல் ராஜராஜன் ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் ஈசாக் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • போலீசார், உறவினர்கள் சமரசத்தை ஏற்க மறுப்பு
    • கோர்ட்டில் மனு செய்து விவாகரத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலையை அடுத்த முளகுமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் மணவிளை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.

    கணவர் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி, செல்போனில் தோழிகளுடனும், தோழர்களுடனும் பேசி வந்தார்.

    இதில் அவரது வீடு அருகே வசித்த 30 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த வாலிபருடன் செல்போனில் பேசி வந்தார். பின்னர் இருவரும் தனியாக சந்திக்க தொடங்கினர்.

    நாளடைவில் இந்த சந்திப்பு கள்ளக்காதலாக மாறியது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அவர் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தார். இங்கு வந்த பின்பு மனைவியை கண்டித்தார்.

    மேலும் இனி கேரளாவுக்கு வேலைக்கு செல்லவில்லை. இங்கேயே வேலை செய்யப்போவதாகவும் தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். கணவர் வீட்டில் இருந்தால் கள்ளக்காதலனை பார்க்க முடியாது என்பதை அறிந்து வேதனை அடைந்த அவர் கடந்த மாதம் 24-ந் தேதி வீட்டில் இருந்து மாயமானார்.

    இதுபற்றி பெண்ணின் கணவர் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான பெண்ணை தேடி வந்தனர். இதில் அவர் தனது பக்கத்து வீட்டில் வசித்த வாலிபருடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரியவந்தது. அவரை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். போலீசார், பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீஸ் நிலையம் வந்து மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

    இதுபோல போலீசாரும், உறவினர்களும் கணவருடன் செல்லுமாறு பெண்ணுக்கு அறிவுரை கூறினர். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து கள்ளக்காதலனுடன் செல்வேன் எனக்கூறினார். இதையடுத்து போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கினர். பின்னர் கோர்ட்டில் மனு செய்து விவாகரத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். கணவர், மகனை தவிக்க விட்டு பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×