search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தாருங்கள்- எஸ்.பி.அலுவலகத்தில், தாய் மனு
    X

    மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தாருங்கள்- எஸ்.பி.அலுவலகத்தில், தாய் மனு

    • எனது மகன், மருமகள் ஆகியோர் சேர்ந்து கொண்டு எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர்.
    • அரசால் வழங்கப்படும் மாத உதவி தொகையையும் அபகரித்து கொள்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மானோஜிப்பட்டியை சேர்ந்த தாமஸ் மனைவி மலர்கொடி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    எங்களுக்கு மனவளர்ச்சி குன்றிய மகள் உள்பட 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். எனது கணவர் தாமஸ் இறந்து 40 நாள் ஆகிறது. அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை கூட செய்யவில்லை. இந்நிலையில் எனது மகன், மருமகள் ஆகியோர் சேர்ந்து கொண்டு எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர். அரசால் வழங்கப்படும் மாத உதவி தொகையையும் அபகரித்து கொள்கின்றனர்.

    மேலும் வீட்டையும் அபகரித்து விட்டனர். எனவே மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×