search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ வழக்கு"

    • 9 மாதம் கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமிக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வலி ஏற்பட்டது.
    • சிறுமி தற்போது தான் 18 வயது பூர்த்தியாகி உள்ளதும், அவரை மகேந்திரமணி குழந்தை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கியதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மோதூர் கொட்டாய் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரமணி (வயது25).

    செல்போன் மூலம் காதல்

    இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனது செல்போனில் தவறுதலாக வேறு எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் பேசியுள்ளார். அப்போது இருந்து இருவரும் செல்போனில் பேசி பழகி வந்தனர். இதுநாளடைவில் காதலாக மாறியது.

    இந்தநிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், இதற்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஆண்டு அந்த சிறுமி வீட்டை விட்டு வந்தது.

    குழந்தை திருமணம்

    அப்போது மகேந்திரமணியும், சிறுமியும் காரிமங்கலத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஓசூரில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

    தற்போது 9 மாதம் கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமிக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வலி ஏற்பட்டதால் அவரை பிரசவத்திற்காக தென்காசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமி தற்போது தான் 18 வயது பூர்த்தியாகி உள்ளதும், அவரை மகேந்திரமணி குழந்தை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கியதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் தென்காசி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக தென்காசி போலீசார் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை திருமணம் செய்த சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் மகேந்திமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    • மாரண்டஅள்ளி போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வாத்தியார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமி.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் அந்த சிறுமியை காதலித்து வந்தார். இதன்காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தார்.

    அந்த சிறுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் சிறுமியின் கணவர் ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
    • வாலிபரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவரது தாய்-தந்தை கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். வீட்டில் சிறுமி மற்றும் அவரது தம்பியையும் பாட்டி பராமரித்து கொள்வார். இந்த நிலையில் பாட்டி ஊருக்கு சென்றார். சிறுமியும், தம்பியும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகே வசிக்கும் சிவஜெயராம் என்ற வாலிபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்தார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தாய் புகார் செய்தார்.

    போலீசார் ேபாக்சோவில் வழக்குப்பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • குற்றம்சாட்டப்பட்ட நபர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, வழக்கு நடத்தி வந்தார்.
    • சிறுமிக்கு ஆதரவாக அரசு வக்கீல் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.

    மாமல்லபுரம்:

    திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்த இருளர் வேலன் என்பவரின் 11 வயது மகள், கடந்த 2017-ஆம் ஆண்டு அப்பகுதிக்கு பேன்ஸி பொருட்கள் விற்க வந்த உத்திரமேரூர் பெருநகர் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் அரசன் (வயது 52) என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அப்போது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் அரசன் தான் குற்றம் செய்யவில்லை என்று வாதாடி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, வழக்கு நடத்தி வந்தார்.

    இந்த வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக அரசு வக்கீல் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் அரசன் மூன்று திருமணங்கள் செய்தவர் என்பதும், சம்பவம் நடந்த தினத்தன்று சிறுமிக்கு ரஸ்னா வாங்கி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததும், சிறுமி கூச்சலிட்டபோது அவரை காப்பாற்றிய சாட்சிகள் விசாரணையின் மூலம் உறுதியானது.

    இதன் அடிப்படையில் குற்றம் உறுதி ஆனதால், போக்சோ சட்டத்தின் கீழ் அரசனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது.

    • போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    • இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகாசி அருகே உள்ள மாரனேரி திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(24). திருமணம் ஆகவில்லை. இவர் விறகு வெட்டும் வேலைக்கு சென்று வந்தார். 2022-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி டியூசன் சென்ற 5-ம் வகுப்பு மாணவிக்கு பாண்டியராஜன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லி புத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் பாண்டியராஜனுக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.

    • தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும், மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சாபு. தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக முண்டகாயம் போலீசார் விசாரணை நடத்தி சாபுவை கைது செய்தனர்.

    அவர் மீதான வழக்கு சங்கனாச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். இதில் சாபுவுக்கு 50 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும், மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறி இருந்தார்.

    • 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததுடன் கொலை செய்ய முயற்சி செய்ததாக புகார் வந்தது.
    • திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் தண்டாயுதபாணி விடுதலை செய்யப்பட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 36) .கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சொந்த ஊராக கொண்ட இவர் கடந்த 12.4.2013ம் தேதி போயம்பாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததுடன் கொலை செய்ய முயற்சி செய்ததாக புகார் வந்தது. புகாரின் பேரில் தண்டாயுதபாணி வடக்கு அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தண்டாயுதபாணி விடுதலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தண்டாயுதபாணி குற்றம் செய்ததை புலன் விசாரணையில் கண்டறிந்த போலீசார் மேல்முறையீடு செய்து வழக்கினை நடத்திட முடிவு செய்தனர். அதன்படி போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடந்து வந்த நிலையில் தலைமறைவாக இருந்த தண்டபாணியை தீர்ப்பு நாளான நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதில் தண்டாயுதபாணிக்கு போக்சோ குற்றத்திற்கு 10 வருடமும், கொலை முயற்சிக்கு 10 வருடமும் மற்றும் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததற்கு 7 வருடமும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தண்டனை அளிக்கப்பட்டது.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 10.5 லட்சம் கொடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் உதவி ஆணையர் அனில்குமார், கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் கலாவதி மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் பாராட்டினார்.குற்றவாளி இவர் தான் என்பதை உறுதி செய்த நிலையில், உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தி போலீசார் தண்டனை பெற்றுதந்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.

    • குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி

    ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம்.

    இந்த நிலையில் கடந்த வாரம் இளம் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த வெங்கட்ராம் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி இளம் பெண்ணே பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

    இதற்கு மாற்றுத்திறனாளி பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை சரமாரியாக தாக்கி காலை உடைத்தார். மாற்றுத்திறனாளி பெண் வலியால் அலறி கூச்சலிட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்தபோது வெங்கட்ராம் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்கு வந்து படுகாயம் அடைந்த மகளை மீட்டு சர்வஜனா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் நந்தியாலா போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 112 போக்சோ வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
    • பொதுமக்கள் 83000 31100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் கடந்த 2021-ம் வருடம் 51 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது. 2022-ம் ஆண்டு 33 கொலை வழக்குகள் பதிவானது. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் குறைவானதாகும். சொத்து வழக்குகளை பொறுத்த மட்டில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சொத்து வழக்குகளின் கண்டுபிடிப்பு 55 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    கொடுங்குற்ற வழக்கு களில் 2021-ம் ஆண்டு 69 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 56 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 வழக்குகள் குறைவானதாகும். கொலை, கொலை முயற்சி, வன்முறை மற்றும் காயம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் 2021-ம் ஆண்டு 907 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 840 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவாகும். 2022-ம் ஆண்டு 112 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றங்கள் தொடர்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஏற்பட்ட 1,199 வாகன விபத்துக்களில் 360 பேர் உயிரிழந்துள்ளனர். 1286 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட 10 சதவீதம் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது. விதி மீறிலில் ஈடுபட்ட 3 லட்சத்து 96 ஆயிரத்து 782 இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக தீவிர சோதனை மேற்கொண்டதில், புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரை யாகவும் விற்பனை செய்த 602 பேர் மீது 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.34 லட்சத்து 8 ஆயிரத்து 856 மதிப்புள்ள 3ஆயிரத்து 698 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4,451 பேர் மீது 4,402 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11284 லிட்டர் மதுபானம் மற்றும் பனங்கள் 3,442 லிட்டர் கைப்பற்றப்பட்டது.

    கஞ்சா விற்ற 192 பேர் மீது 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.29 லட்சத்து 27 ஆயிரத்து 80 மதிப்புள்ள 266 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 105 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் ஒரு நபரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 85 பேர் மீது 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 143 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சம்பந்தமாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சூதாட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக இந்த ஆண்டில் மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 275 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தவருடம் 1.1.2022-ம் தேதி முதல் இந்நாள் வரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்ட 7 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர், பாலினகுற்ற செயல்களில் ஈடுபட்ட 6 பேர், சொத்து குற்றசெயல்களில் ஈடுபட்ட 3 பேர், தேசவிரோத குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 பேர் என மொத்தம் 24 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் நடப்பாண்டில் 711 புகார் மனுக்கள் நேரடியாகவும், இணைய தளம் வழியாகவும் பெறப்பட்டு விசாரணைக்குபின் 74 சைபர் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.68லட்சத்து 38 ஆயிரத்து 980 முடக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.13 லட்சத்து84 ஆயிரத்து 25 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 853 புகார்களில் 552 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு புகார்தாரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கிவைப்பவர்கள், சில்லறை மதுபானம் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 83000 31100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும்.

    தாராபுரம் :

    குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பது தான் போக்சோ சட்டம். குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை என அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான்.

    குழந்தைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, குழந்தை மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது. அது பெற்றோர், உறவினர், ஆசிரியர், மருத்துவர், காவலர் என அனைவருக்கும் பொருந்தும்.போக்சோ சட்டம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இரு பாலினருக்கும் பொருந்தும். திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குறித்தான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய நபர்கள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்.

    பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும். வழக்கு பதிவு செய்ய தாமதம் கூடாது என போலீஸ் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு தகுந்த அறிவுரை வழங்கி வருகின்றனர். கணவன், மனைவி பிரிந்த நிலையில் கவனிக்க, வளர்க்க ஆளில்லாத சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.பெரும்பாலான வழக்குகளில் இரண்டாவது தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.

    குழந்தை வன்முறை குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியுள்ளதாவது :- குழந்தைகளை தவறான வார்த்தைகளால் பேசுதல், குழந்தைகளை பாதிக்கும் கேலி, கிண்டல் செய்தல், ஆபாச படங்கள் காண்பிப்பது, பேசுவது, குழந்தை விரும்பத்தகாதவாறு உடல் பாகங்களை தொடுதல், குழந்தையின் தன்னம்பிக்கையை இழக்க செய்தல், தன் கோபத்தை தணிக்க குழந்தை மீது தீங்கிழைத்தல், குழந்தையை தன் வயப்படுத்தல், வேலையாளாக பயன்படுத்துவது, கருத்துக்கு செவி சாய்க்காமல் இருப்பது, உணர்வுகளை புறக்கணித்தல், பள்ளியில் உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளாக்குவது, மருத்துவ தேவைகளை புறக்கணித்தல், கல்வியின் அவசியத்தை புறக்கணித்தல், கண்காணிப்பு இல்லாமல் விட்டு விடுதல் ஆகியவை குழந்தை வன்முறை என வரையறுக்கப்பட்டுள்ளது.

    மேலும் போலீசார் கூறுகையில், ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் படி தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சென்று போக்சோ சட்டம் குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வு குறித்தும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் விழிப்புணர்வு ஏற்பட்டு இது தொடர்பான புகார்கள் அதிகம் வருகின்றன. அதை உடனடியாக பதிவு செய்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு குழந்தைகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. போக்சோ உதவி பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன என்றனர். 

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
    • இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் ஜெகதீசன் மீது கடந்த 2.11.2022 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்கு பதிவு செய்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் அதில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி யுவராஜாவிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த லஞ்ச பணத்தை 13.12.2022 காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறி உள்ளார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை இன்ஸ்பெக்டர் மாலதியிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து யுவராஜ் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியில் கூறிய பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.
    • பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் பத்தனம்திட்டாவில் 45 வயது நபர் ஒருவரின் மனைவி நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அதன்பின்னர் அந்த நபர் மனநலம் பாதித்த மகளை வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி 13 வயது நிரம்பிய நிலையில், பல சந்தர்ப்பங்களில் மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 2020ல் இந்த கொடுமை நடந்துள்ளது. சிறுமி தனது பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் இதைப் பற்றி கூறிய பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி அவரது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. பல்வேறு பிரிவுகளில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், அந்த சிறுமியின் தந்தை மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து அவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 107 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

    சில பிரிவுகளுக்கான தண்டனைகளை ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதால், குற்றவாளி மொத்தம் 67 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

    ×