என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
- 9 மாதம் கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமிக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வலி ஏற்பட்டது.
- சிறுமி தற்போது தான் 18 வயது பூர்த்தியாகி உள்ளதும், அவரை மகேந்திரமணி குழந்தை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கியதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மோதூர் கொட்டாய் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரமணி (வயது25).
செல்போன் மூலம் காதல்
இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனது செல்போனில் தவறுதலாக வேறு எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் பேசியுள்ளார். அப்போது இருந்து இருவரும் செல்போனில் பேசி பழகி வந்தனர். இதுநாளடைவில் காதலாக மாறியது.
இந்தநிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், இதற்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஆண்டு அந்த சிறுமி வீட்டை விட்டு வந்தது.
குழந்தை திருமணம்
அப்போது மகேந்திரமணியும், சிறுமியும் காரிமங்கலத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஓசூரில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
தற்போது 9 மாதம் கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமிக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வலி ஏற்பட்டதால் அவரை பிரசவத்திற்காக தென்காசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமி தற்போது தான் 18 வயது பூர்த்தியாகி உள்ளதும், அவரை மகேந்திரமணி குழந்தை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கியதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் தென்காசி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தென்காசி போலீசார் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை திருமணம் செய்த சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் மகேந்திமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்