search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை பெற்ற 16 வயது சிறுமி- வாலிபர் மீது போக்சோ வழக்கு
    X

    குழந்தை பெற்ற 16 வயது சிறுமி- வாலிபர் மீது போக்சோ வழக்கு

    • சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    • மாரண்டஅள்ளி போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வாத்தியார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமி.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் அந்த சிறுமியை காதலித்து வந்தார். இதன்காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தார்.

    அந்த சிறுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் சிறுமியின் கணவர் ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×