search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக்"

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய 750சிசி மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • டிரான்சால்ப் 750 மாடலில் உள்ள என்ஜின் புதிய 750சிசி மாடலிலும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் GB750 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. ஜப்பானில் GB350, சர்வதேச சந்தையில் ஹைனெஸ் CB350 வடிவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதை போன்றே புது மாடலிலும் பழைய மோட்டார்சைக்கிள்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    அந்த வகையில் புது மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், குறைவான பாடிவொர்க், ஹை-ரைஸ் ஹேண்டில்பார்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் GB750 மாடலில் ரெட்ரோ-ஸ்டைல் பெயிண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை இந்த மாடலில் டிரான்சால்ப் 750 மற்றும் CB750 ஹார்னெட் மாடல்களில் உள்ள யூனிட் வழங்கப்படலாம்.

    எனினும், இந்த மாடலில் பழைய பைக் போன்ற தோற்றத்தை கொடுக்கும் பாகங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள், பின்புறம் கன்வென்ஷனல் ஃபோர்க்குகள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஎஃப்டி டேஷ், ரைடு மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

    புதிய ஹோண்டா GB750 மாடல் பற்றி இதுவரை ஹோண்டா தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மோட்டார்சைக்கிள் டிரையம்ப் போன்வில் T100 மற்றும் கவாசகி Z650RS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது தொழில்நுட்பம் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் பைக் என இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் அம்சம் பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது. புது தொழில்நுட்பம் H ஸ்மார்ட் என அழைக்கப்படுகிறது. ஹோண்டாவின் புதிய H-ஸ்மார்ட் தொழில்நுட்பம் ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புது தொழில்நுட்பம் எதுபோன்ற வசதியை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனினும், இதற்கான டீசரில் இந்த தொழில்நுட்பம் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    ஹீரோ நிறுவனத்தின் iஸ்மார்ட் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், யமஹா நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் என பல்வேறு நிறுவனங்கள் அதிக மைலேஜ் வழங்கும் தொழில்நுட்பங்களை வழங்க துவங்கிவிட்டன. அந்த வகையில் ஹோண்டா ஏற்கனவே தனது வாகனங்களில் சைலண்ட் ஸ்டார்ட் அம்சத்தை வழங்கி இருக்கிறது. எனினும்,ஸ ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.

    அந்த வகையில் புது தொழில்நுட்பம் ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் ஹோண்டா CB300F மற்றும் ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ப்ளூடூத் மூலம் கனெக்டிவிட்டி வசதியை வழங்கும். இது ஹோண்டா வாகனங்களின் டிஜிட்டல் டேஷ்-இல் நோட்டிஃபிகேஷன் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்குகிறது.

    • டுகாட்டி நிறுவனத்தின் புதிய டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் வினியோகம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய டெசர்ட் எக்ஸ் மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்திய சந்தையில் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என அறிவித்து இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புது மாடலில் 937சிசி, L-ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் புதிய டுகாட்டி மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட ஐந்து இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த மாடலில்- ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியுரோ என ஆறு வித ரைடிங் மோட்கள் உள்ளது.

    இத்துடன் ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு பவர் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் கார்னெரிங் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் கூடுதலாக ஆப்ஷனல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் 2023 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதில் பனிகேல் வி4 ஆர், மான்ஸ்டர் எஸ்பி, டயவெல் வி4, ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி2, மல்டிஸ்டிராடா வி4 ரேசி, ஸ்கிராம்ப்ளர் ஐகான் 2ஜி, ஸ்கிராம்ப்ளர் ஃபுல் திராட்டில் 2ஜி, ஸ்கிராம்ப்ளர் நைட்ஷிஃப்ட் 2ஜி மற்றும் ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 லம்போர்கினி உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    • பைக் மோதி இளம்பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    புதூர் ராமலட்சுமி நகரை சேர்ந்த பாண்டி மகள் காதம்பிரியா (24). சம்பவத்தன்று காலை இவர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் நடந்து சென்றார். வணிக வளாகம் அருகே, வேகமாக வந்த பைக் மோதியது.

    இதில் காதம்பிரியா படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த தேனி மாவட்டம், சிப்பலாக்கோட்டை, அம்பிகை கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (34) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊமச்சிகுளம், புது நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேர்ந்த ராஜாராம் மனைவி தனம் (80). இவர் வெளியூருக்கு செல்வதற்காக, குடிநீர் வடிகால் வாரிய காலனி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி தனத்தை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த மதுரை இளம்பூர் இளங்கோ முருகன் ராம்பாபு (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளித்து வியாபாரி அசத்தி இருக்கிறார்.
    • மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் கார் என ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பரிசுகளை ஊழியர்களுக்கு கொடுத்தார்.

    தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகை காலத்தை ஒட்டி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது வியாபாரம் செய்வோரின் பழக்கம். அந்த வகையில் சென்னையை சேர்ந்த சல்லானி ஜூவல்லரி மார்ட் கடை உரிமையாளர் ஊழியர்களுக்கு பரிசளிக்கும் வழக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்.

    நகை கடை உரிமையாளரான ஜெயந்தி லால் சயந்தி தனது ஊழியரகளுக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கொடுத்துள்ளார். இதில் எட்டு நான்கு சக்கர வாகனங்கள், மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என மொத்தம் 18 இருசக்கர வாகனங்கள் அடங்கும். பரிசு வாகனங்களாக மாருதி சுசுகி ஸ்விப்ட், ஹோண்டா ஆக்டிவா 110 மற்றும் ஹோண்டா ஷைன் போன்ற மாடல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    "அவர்களின் பணியை பாராட்டி, வாழ்க்கையில் சிறப்பு சேர்க்கும் வகையில் இதுபோன்ற பரிசு கொடுத்திருக்கிறோம். வியாபாரத்தின் அனைத்து காலக்கட்டத்திலும் அவர்கள் நாங்கள் லாபம் ஈட்ட உழைத்துள்ளனர். இவர்கள் ஊழியர்கள் மட்டுமில்லாது எங்களின் குடும்பத்தினர் ஆவர். இதன் காரணமாகவே எனது குடும்பத்தாருக்கு செய்வதை போன்றே, எதிர்பாராத பரிசுகளை வழங்க முடிவு செய்தேன்."

    "இவ்வாறு பரிசு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொருத்தரும் இது போன்று அவர்களின் ஊழியருக்கு மதிப்பு கொடுத்து, அவர்களுக்கு பரிசளித்து மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்," என ஜெயந்தி லால் தெரிவித்து இருக்கிறார்.

    • தடுப்பு கம்பியில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் பிரவீன்குமார் (வயது22). இவர் கல்லூரியில் படித்து வரும் தனது தங்கையை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் கல்லல் அருகே உள்ள ஏழுமாபட்டி பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்ட பொது மக்கள் நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செப்டம்பர் மாதத்திற்கான இருசக்கர வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2022 செப்டம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2022 மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை 12.4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப்ப் நிறுவனம் 5 லட்சத்து 07 ஆயிரத்து 690 மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 12 ஆயிரத்து 290 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 19 ஆயிரத்து 980 யூனிட்களில் ஹீரோ நிறுவனம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 237 பைக்குகளையும், 39 ஆயிரத்து 743 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து இருக்கிறது.

    2021 செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 ஆயிரத்து 366 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்துள்ளது. பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி விடா எனும் புது பிராண்டின் கீழ் ஹீரோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் கழற்றும் வசதி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஜீரோ உடன் ஹீரோ கூட்டணி அமைத்து இருக்கிறது. இதன் மூலம் இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளன.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த மோட்டார்சைக்கிள் மாடலாக புதிய ஹண்டர் 350 அறிமுகம் செய்யப்பட்டது.
    • இளம் வாடிக்கையாளர்களை குறி வைத்து ஏராள மாற்றங்கள் மற்றும் புது அம்சங்களுடன் இந்த பைக் அறிமுகமாகி இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை ஆகஸ்ட் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடல் இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. புதிய ஹண்டர் 350 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை, எடை கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் 349 சிசி, சிங்கில் சிலிண்டர் OHC பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உள்ளது.

    ஆகஸ்ட் 2022 மாதத்தில் மட்டும் ஹண்டர் 350 மாடல் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது ராயல் என்பீல்டு நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்த ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் இரண்டாவது இடம் ஆகும். கடந்த மாத விற்பனையில் அசத்திய கிளாசிக் 350 மாடலை விட ஹண்டர் 350 வெறும் 796 யூனிட்கள் தான் பின்தங்கி இருக்கிறது.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய CT125X மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த மாடல் ஹோண்டா ஷைன் மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    புதிய பஜாஜ் CT125X மோட்டாரைச்கிள் பஜாஜ் விற்பனை மையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பஜாஜ் CT110X மாடலின் 125சிசி வெர்ஷன் ஆகும். இத்துடன் இந்த மாடல் அதிக அம்சங்கள் மற்றும் திறன் கொண்டிருக்கிறது.

    பஜாஜ் CT125X மோட்டார்சைக்கிள் மூலம் பஜாஜ் நிறுவனம் 125சிசி பட்ஜெட் மோட்டார்சைக்கிள் பிரிவில் மீண்டும் களமிறங்குகிறது. முன்னதாக டிஸ்கவர் 125 மற்றும் XCD 125 போன்ற மாடல்களை பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையின் 125 சிசி பிரிவில் விற்பனை செய்து வந்தது.


    பட்ஜெட் மாடல்கள் பிரிவில் பிளாட்டினா 100, பிளாட்டினா 110 மற்றும் CT110X போன்ற மாடல்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. 125சிசி மட்டுமின்றி பெட்ரோல் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்யாத காரணத்தால் பஜாஜ் வாகனங்கள் ஒட்டுமொத்த விற்பனை திடீர் சரிவை எதிர்கொண்டது.

    தற்போது பஜாஜ் CT125X மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தன் மூலம் பஜாஜ் நிறுவனம் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய பிரிவில் பலத்த போட்டியை ஏற்படுத்த முடியும். இந்திய சந்தையில் புதிய பஜாஜ் CT125X மாடல் ஹோண்டா SP125, ஹோண்டா ஷைன், ஹீரோ கிளாமர், ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • போதை ஒழிப்பை வலியுறுத்தி மதுரையில் போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
    • மதுரை பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, தெற்கு காவல் கூட தெரு வழியாக பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில் சுமார் 150 போலீசார் மோட்டார் சைக்கிள்களுடன் கலந்து கொண்டனர்.

    பேரணியை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார், உதவி கமிஷனர்கள் செல்வின் (டவுன்), மாரியப்பன் (தல்லாகுளம்), இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக் (திலகர் திடல்), ரமேஷ்குமார் பெரியார்- மத்தி), கணேஷ்ராம் (தெற்கு வாசல்), சுரேஷ் (தல்லாகுளம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசரடியில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணி காளவாசல், பைபாஸ் ரோடு, எல்லீஸ் நகர், பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, தெற்கு ஆவணி மூல வீதி, தெற்கு காவல் கூட தெரு வழியாக பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

    • டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மாடலை மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • புது மாடலில் ஸ்டைலிங் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    L மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2023 போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பெயிண்ட் மூலம் ஸ்டைலிங் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்திய சந்தையில் புதிய போன்வில் ஸ்பீடுமாஸ்டர் - ஜெட் பிளாக், சபையர் பிளாக், பியுஷன் வைட் மற்றும் கார்டோவன் ரெட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் ஜெட் பிளாக் மற்றும் கார்டோவன் ரெட் நிறங்கள் சிங்கில் டோன் பினிஷ், சபையர் பிளாக் பியுஷன் வைட் டூயல் டோன் பினிஷ் கொண்டுள்ளது.


    விலை விவரங்கள்:

    - டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் ஜெட் பிளாக் ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம்

    - டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் கார்டோவன் ரெட் ரூ. 12 லட்சத்து 18 ஆயிரம்

    -டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் சபையர் பிளாக் பியுஷன் வைட் ரூ. 12 லட்சத்து 35 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2023 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மோட்டார்சைக்கிள் வட்ட வடிவ ஹெட்லேம்ப், க்ரோம் பில்லர் கேப் கொண்ட டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீடர்கள், எக்சாஸ்ட் கேனிஸ்டரில் ஸ்லாஷ் கட் டிசைன், வயர் ஸ்போக் வீல்களை கொண்டுள்ளது.

    இந்த மாடலில் 1200 சிசி, பேரலல் ட்வின் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76.9 ஹெச்பி பவர், 106 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய நைட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த மாடலில் சக்திவாய்ந்த 975சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் இந்தியா இணைந்து முற்றிலும் புதிய நைட்ஸ்டர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளன. புதிய ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள், பாகங்கள் மற்றும் அக்சஸரீக்களை அதிகாரப்பூர்வமாக வினியோகம் செய்யும் பொறுப்பை ஹீரோ மோட்டோகார்ப் ஏற்று நடத்தி வருகிறது. புதிய ஹார்லி டேவிட்சன் மாடல் முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன.


    இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் விவிட் பிளாக் ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் கன்ஷிப் கிரே ரூ. 15 லட்சத்து 13 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் ரெட்லைன் ரெட் ரூ. 15 லட்சத்து 13 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.


    இந்த மாடலில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ரெவல்யுஷன் மேக்ஸ் 975T, 975சிசி, லிக்விட் கூல்டு, வி-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மேலும் 41 மில்லிமீட்டர் ஷோவா முன்புற போர்க்குகள், ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள், இரு டயர்களிலும் சிங்கில் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

    இத்துடன் மூன்று வித ரைடிங் மோட்கள், ஏபிஎஸ், என்ஜின் பிரேக்கிங் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    ×