search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி
    X

    போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி

    • போதை ஒழிப்பை வலியுறுத்தி மதுரையில் போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
    • மதுரை பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, தெற்கு காவல் கூட தெரு வழியாக பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில் சுமார் 150 போலீசார் மோட்டார் சைக்கிள்களுடன் கலந்து கொண்டனர்.

    பேரணியை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார், உதவி கமிஷனர்கள் செல்வின் (டவுன்), மாரியப்பன் (தல்லாகுளம்), இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக் (திலகர் திடல்), ரமேஷ்குமார் பெரியார்- மத்தி), கணேஷ்ராம் (தெற்கு வாசல்), சுரேஷ் (தல்லாகுளம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசரடியில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணி காளவாசல், பைபாஸ் ரோடு, எல்லீஸ் நகர், பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, தெற்கு ஆவணி மூல வீதி, தெற்கு காவல் கூட தெரு வழியாக பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

    Next Story
    ×