search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycle rally"

    • மாவட்ட செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம்.

    காஞ்சிபுரம்:

    தி.மு.க. மாநில இளைஞரணி 2-வது மாநாடு டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இரு சக்கர வாகன பிரசார பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து பேரணி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

    நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் சென்றடைந்தது. நேற்று மாலை காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான காஞ்சிபுரம் அருகே உள்ள சின்னையன் சத்திரத்தில் மாவட்ட செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிள் பேரணி காஞ்சிபுரம் பொன்னேரி கரை மற்றும் பெரியார் தூண், அண்ணா இல்லம் போன்ற பகுதிகளில் சென்றது. பெரியார் தூணில் பிரசார பேரணிக்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தசரதன், பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் .எஸ். சுகுமார், வக்கீல் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மோட்டார்சைக்கிள் பிரசார பேரணியின் போது எழுத்தாளர் ராஜா தமிழ் மாறன் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே பிரசாரம் மேற்கொண்டார் . அப்போது அவர் பேசியதாவது:-

    கருப்பு என்றால் தியாகம், சிவப்பு என்றால் வீரம். வீரத்திற்கும் தியாகத்துக்கும் தமிழர்களுக்கு தமிழர்கள் தான் நிகரானவர்கள். நம்மை பிளவுபடுத்த ஒன்றிய அரசு நினைக்கிறது. இதை ஒருபோதும் நடத்திட முடியாது. கல்வி, சுகாதாரம் மூலம் நம்மை பின்னுக்கு தள்ள நினைக்கிறது. நிதி வசூல் மூலம் நம்மை ஒன்றிய அரசு வஞ்சிக்க நினைக்கிறது . அவர்கள் நினைப்பது ஒரு நாளும் பலிக்காது. நமது கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும் நமது தமிழ் டி.என்.ஏ.வில் ஊறி இருக்கிறது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    • மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா கடற்கரை சாலையில் நடைபெற்றது.
    • சமுதாயக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

     புதுச்சேரி:

    உலக அமைதியை வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா கடற்கரை சாலையில் நடந்தது.

    காஞ்சி மாமுனிவர் கல்லூரி மாணவி ஷகிலா வரவேற்றார். ஹோப் நிறுவன இயக்குனர் ஜோசப் விக்டர் ராஜ் தொடக்கவுரையாற்றினார். ஐ.ஜி.சந்திரன் கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார். ரைஸ் நிறுவன கன கராஜ், ரோச் விக்டர், பால கிருஷ்ணன், சத்தியபாமா, திருமால், தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சமுதாயக் கல்லூரி மாணவர் சபரி தலைமை யில் புதுவையில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், தாகூர் கலைக்கல்லூரி, மற்றும் சமுதாயக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணி செல்லும் வழியில் உள்ள பொதுமக்க ளுக்கு உலக அமைதி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது பேரணி, கடற்கரை காந்தி சாலையில் தொடங்கி, புதிய பஸ் நிலையம், மூலக்குளம் வழியாக வில்லியனூர் துணை தாசில்தார் அலுவலகம் முன்பு அமைந் துள்ள அம்பேத்கர் சிலை அருகே முடிவடைந்தது.

    • போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்/
    • பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    கோவை,

    பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவையில் இருந்து காத்மாண்டு வரை 7000 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள் பேரணியை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகரை பொறுத்தவரை சைபர் குற்றங்கள் நடப்பதற்கு முன்னதாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் நடைபெற்றதற்கு பின்பு பண இழப்புகள் ஏற்பட்டாலும் அதனை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

    பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பாலுக்கு உள்ள நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சைபர் கிரைம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம். பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 6 இளைஞர்கள் இங்கிருந்து காத்மாண்டு வரை 7 ஆயிரம் கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளனர். கல்லூரி மாணவ, மாணவிகள் எப்படி சமூக வலைதளங்களில் கவனமாக கையாள வேண்டும், எந்த மாதிரியான தகவல்களை பரிமாறக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    கடந்த சில நாட்களாக கிரைண்டர் மொபைல் ஆப்பை ஒரு சில நபர்கள் பதிவு செய்து அதனை பயன்படுத்தி அதன் மூலமாக பணம் பறித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக கோவை மாநகரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரை கைது செய்துள்ளோம்.

    இரண்டு வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு 500 சைபர் கிரைம் புகார்கள் பதிவாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நெருங்குவதால் கோவை மாநகரில் 500 மீட்டருக்கு ஒரு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கோவை - அவிநாசி சாலையில் அதிவேக பயணத்தை தடுப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதை ஒழிப்பை வலியுறுத்தி மதுரையில் போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
    • மதுரை பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, தெற்கு காவல் கூட தெரு வழியாக பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில் சுமார் 150 போலீசார் மோட்டார் சைக்கிள்களுடன் கலந்து கொண்டனர்.

    பேரணியை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார், உதவி கமிஷனர்கள் செல்வின் (டவுன்), மாரியப்பன் (தல்லாகுளம்), இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக் (திலகர் திடல்), ரமேஷ்குமார் பெரியார்- மத்தி), கணேஷ்ராம் (தெற்கு வாசல்), சுரேஷ் (தல்லாகுளம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசரடியில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணி காளவாசல், பைபாஸ் ரோடு, எல்லீஸ் நகர், பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, தெற்கு ஆவணி மூல வீதி, தெற்கு காவல் கூட தெரு வழியாக பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

    • திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
    • பாஜ.க.வினர் விண்ணில் மூவர்ணத்திலான பலூன்களை பறக்க விட்டு கைகளில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

    திருச்சி :

    இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை வீடுகள் தோறும் மூவர்ண தேசிய கொடியேற்றி மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் தலைமை தாங்கினார். கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வரவேற்றார். இளைஞரணி மாவட்ட தலைவர் ஹரிகுமார் முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து பாஜ.க.வினர் விண்ணில் மூவர்ணத்திலான பலூன்களை பறக்க விட்டு கைகளில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணி கலெக்டர் அலுவலகம், மிளகு பாறை, ஜங்ஷன் தலைமை தபால் நிலையம், காந்தி மார்க்கெட் வழியாக சத்திரம் நிலையத்தை சென்றடைந்தது.

    பேரணியில் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் ஸ்ரீராம், மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு வந்தே மாதரம், பாரத் மாதாக்கி ஜெ... என கோஷங்கள் எழுப்பிய படி சென்றனர்.

    ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 500 போலீசார் ‘ஹெல்மெட்’ அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். #Helmet
    சென்னை:

    சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது ஐகோர்ட்டு உத்தரவு ஆகும்.

    எனவே ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். எனினும் சில போலீசார் சட்டத்தை மதிக்காமல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து ‘ஹெல்மெட்’ அணியாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீசார் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆயுதப்படை துணை கமிஷனர்கள் கே.சவுந்தரராஜன், ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 1,300 போலீசார் பங்கேற்றனர். அப்போது அவர்கள், இனி மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும்போதும், பின்னால் அமர்ந்து செல்லும்போதும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 500 போலீசார் ‘ஹெல்மெட்’ அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

    எழும்பூர் ருக்மணி சாலை, எத்திராஜ் கல்லூரி சாலை வழியாக சென்ற பேரணி பின்னர் ராஜரத்தினம் மைதானத்தை வந்தடைந்தது. ‘ஹெல்மெட்’ பிரசாரத்துடன் கார்களில் செல்லும் போது ‘சீட் பெல்ட்’ கட்டாயம் அணிய வேண்டும் என்றும் போலீசார் எடுத்துரைத்தனர்.
    கும்பகோணத்தில் சாலை விதி முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

    கும்பகோணம்:

    சதன் ரைடர் என்ற சமூக நல ஆர்வலர் அமைப்பை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல மாநிலங்களில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடத்தி மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விதி முறைகளை பொதுமக்கள் கடை பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர். 

    இந்த அமைப்பினர் கடந்த 1-ந்தேதி பல்வேறு மாநிலங்களில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு இன்று (13-ந்தேதி) தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை வந்தடைந்தனர். 65 மோட்டார் சைக்கிள்களில் 65 பேர் 1260 கி.மீ. பயணம் செய்து வந்ததாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக கேட்டபோது, சாலை விதி முறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். வாகனங்களை மிதவேகத்தில் விபத்து ஏற்படுத்தாமல் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினோம். இதன் மூலம் பொதுமக்களிடம் சாலை விதிமுறையை கடைபிடிக்கும் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும் என்று கூறினர்.

    கூடலூரில் சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை மீட்பு குழுவினர் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். #EnvironmentAwareness
    கூடலூர்:

    கூடலூர் பசுமை மீட்பு குழு, கோவை நட்பு குழு ஆகியவை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் கூடலூரில் நடைபெற்றது. மேலும் ஏராளமான மாணவிகளும் ஊர்வலமாக சென்றனர். கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதற்கு பசுமை மீட்பு குழு தலைவர் அன்பரசு தலைமை தாங்கினார். நிர்வாகி சங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னாள் தலைமை ஆசிரியர் சத்தியநேசன், ஆசிரியர் கிருஷ்ணகுமார், சுரேஷ் குமார், சந்திரகுமார், கோவை நட்பு குழு நிர்வாகிகள் கவுதம், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் நான்குமுனை சந்திப்பு, மெயின் ரோடு, பழைய பஸ் நிலையம் வழியாக ஊட்டி ரோட்டில் சென்றது. பின்னர் மேல் கூடலூர் வழியாக தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது.

    ஊர்வலத்தில் பசுமையை காப்போம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து கூடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மூலிகை பண்ணை அமைக்கும் பணியில் பசுமை மீட்பு குழு தொண்டர்கள் ஈடுபட்டனர். அரசு டாக்டர் மயில்சாமி கலந்து கொண்டு மூலிகை நாற்றுக்களை நட்டு தொடங்கி வைத்து பேசினார். மேலும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

    இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்திலும் மூலிகை நாற்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பசுமை மீட்பு மற்றும் கோவை நட்பு குழுவினர், பசுமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    பசுமை மீட்பு குழு தலைவர் அன்பரசு, நிர்வாகி சங்கர் ஆகியோர்் கூறும்போது, இன்றைய காலத்தில் வனம் மற்றும் பசுமை இழந்து வருகிறது. இதனால் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் அழிந்து தண்ணீருக்காக போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. வனத்தில் பசுந்தீவன தட்டுப்பாட்டால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. பசுமையை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக நூலகங்கள், ஆஸ்பத்திரி வளாகங்களில் மூலிகை பண்ணைகள், மரக்கன்றுகள் நட்டு வருகிறோம். கூடலூர் பகுதியில் மாணவர்களை ஒன்றிணைத்து அதிகளவு மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையை காக்க முயற்சி செய்யப்படு கிறது, என்றனர்.  #EnvironmentAwareness
    ×