search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஹோண்டா இருசக்கர வாகனங்களில் புது ஸ்மார்ட் அம்சம் - விரைவில் அறிமுகம்!
    X

    ஹோண்டா இருசக்கர வாகனங்களில் புது ஸ்மார்ட் அம்சம் - விரைவில் அறிமுகம்!

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது தொழில்நுட்பம் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் பைக் என இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் அம்சம் பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது. புது தொழில்நுட்பம் H ஸ்மார்ட் என அழைக்கப்படுகிறது. ஹோண்டாவின் புதிய H-ஸ்மார்ட் தொழில்நுட்பம் ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புது தொழில்நுட்பம் எதுபோன்ற வசதியை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனினும், இதற்கான டீசரில் இந்த தொழில்நுட்பம் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    ஹீரோ நிறுவனத்தின் iஸ்மார்ட் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், யமஹா நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் என பல்வேறு நிறுவனங்கள் அதிக மைலேஜ் வழங்கும் தொழில்நுட்பங்களை வழங்க துவங்கிவிட்டன. அந்த வகையில் ஹோண்டா ஏற்கனவே தனது வாகனங்களில் சைலண்ட் ஸ்டார்ட் அம்சத்தை வழங்கி இருக்கிறது. எனினும்,ஸ ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.

    அந்த வகையில் புது தொழில்நுட்பம் ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் ஹோண்டா CB300F மற்றும் ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ப்ளூடூத் மூலம் கனெக்டிவிட்டி வசதியை வழங்கும். இது ஹோண்டா வாகனங்களின் டிஜிட்டல் டேஷ்-இல் நோட்டிஃபிகேஷன் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்குகிறது.

    Next Story
    ×