என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெற்றோர் எதிர்ப்பு"
லாலாப்பேட்டை:
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே தாளியம்பட் டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கோபி (வயது 22). கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகள் கவிதா (19), கரூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கோபி மற்றும் கவிதா ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரின் பெற்றோர்களுக்கும் அவர்களின் காதல் விவகாரம் தெரிய வரவே, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் தாங்கள் இணைந்து வாழ முடியாது என நினைத்த கோபி, கவிதா ஆகியோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் லாலாப்பேட்டை அருகே உள்ள சிம்மாச்சிப்பட்டியில் உள்ள கோபியின் உறவினர் வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்தனர்.
இந்தநிலையில் கவிதா மற்றும் உறவினர் வெளியே சென்றிருந்த சமயத்தில் கோபி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த கவிதா முன்னதாக வீட்டிற்கு வந்து பார்த்த போது கோபி பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். இனிமேலும் வாழ முடியாது என்று எண்ணிய அவரும் விஷம் குடித்து காதலன் அருகேயே தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே கோபியின் உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து கோபியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, லாலாப்பேட்டை போலீசிலும் புகார் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருவரின் உடலையும் மீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமதுரை:
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் கவுதமி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வடமதுரை அருகே ஆர்.கோம்பையைச் சேர்ந்தவர் மோகன் (22), காங்கேயம் பகுதியில் வேலைக்கு சென்றார்.
அப்போது கவுதமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.
இந்த விஷயம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தங்களை பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். பின்பு கரூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசினர். ஆனால் இருவரும் காதல் ஜோடியை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
மோகன், தனது காதல் மனைவியை தானே காப்பாற்றிக் கொள்வேன் எனக் கூறி காதல் ஜோடி தனியாக சென்று விட்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா (20). திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.
இவரும், அருண்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.
அதன்படி, அக்டோபர் 31-ந் தேதி (நேற்று) தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.
இதையடுத்து, மணமக்கள் நேற்று காலை சிவன் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஸ்ரீஜாவின் கல்லூரி தோழிகள், அருண்குமாரின் சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும், ஏராளமான திருநங்கைகளும் வந்து இருந்தனர். அருண்குமாரின் பெற்றோர் வரவில்லை.
மணமக்கள் கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது, இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறினர்.
ஆனால், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்து உள்ளதாகவும், எனவே சட்டப்படி இந்த திருமணத்தை நடத்தலாம் என்றும் கூறி திருமண வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், திருமணத்தை வேண்டுமானால் கோவிலில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்கான பதிவு சான்றிதழை தரமுடியாது என்று கூறினார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த திருநங்கைகள் இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும் முறைப்படி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அருண்குமாரிடம், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்ததற்கான அரசாணை நகல் இருந்தால் கொடுங்கள், அதிகாரிகளிடம் பேசி திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அருணிடம் அதற்கான நகல் ஏதும் இல்லை.
அதன்படி காலை 11.40 மணிக்கு மணமக்கள் மாலை மாற்றினர். பின்னர் திருநங்கை ஸ்ரீஜா கழுத்தில் அருண்குமார் தாலி கட்டினார். அப்போது அங்கு கூடி இருந்த திருநங்கைகள் உற்சாகமாக ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ‘தற்போது திருமணம் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்தனர். #TransgenderMarriage
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவரும், பாபநாசம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சரண்யா (29) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போதே கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் சுரேசும், சரண்யாவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு சரண்யா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் நேற்றுமுன் தினம் சரண்யா தனது வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காதலன் சுரேசுடன் தஞ்சையில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பதிவு திருமணம் செய்து கொண்ட சுரேஷ், தனது காதல் மனைவி சரண்யாவுடன் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது தங்களது காதலுக்கு சரண்யா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணை நடத்தினார். இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நெல்லை:
பாளை அருகேயுள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் கோட்டையப்பன்(வயது23). இவர் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நெல்லையை அடுத்த தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா(22). பட்டதாரியான இவர் தென்காசியில் ஒரு ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார்.
சுஷ்மிதா இந்த ஆண்டு தான் கல்லூரி படிப்பை முடித்தார். பாளையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் படித்தபோது அப்பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியில் கோட்டையப்பன் படித்தார். இருவரும் வேறு வேறு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
பஸ் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்ட போது அவர்களுக்கிடையே காதல் உண்டானது. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் வேலைக்கு சென்றபின்னரும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.
சுஷ்மிதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுஷ்மிதாவுக்கு அவரது வீட்டினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் சுஷ்மிதாவுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சுஷ்மிதா தனது காதலரிடம் இதுபற்றி கூறினார்.
இதையடுத்து கடந்த 14-ந்தேதி சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காதல்ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனிடையே மகளை காணவில்லை என சுஷ்மிதாவின் தந்தை மாரியப்பன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி சுஷ்மிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கழுத்தில் மாலை அணிந்தபடி வந்தனர். தங்களை பிரிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி சுஷ்மிதா தனது காதலனுடன் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
அலுவலகத்தில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இறுதியில் சுஷ்மிதாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கணவருடன் வசித்து வந்த சுஷ்மிதா திருமணம் செய்த 2-வது நாளான நேற்று திடீரென விஷத்தை குடித்து விட்டார். மயங்கி கிடந்த சுஷ்மிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கு சுஷ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள சிங்காரக்கோட்டையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மகன்களும் ஒருமகளும் உள்ளனர். முதல் மகன் ரெங்கசாமி. இவர் படித்து முடித்து விட்டு விழுப்புரத்தில் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்திருந்தனர்.
இதனால் மனம் வேதனையடைந்த குமரேசன் போலீசாரிடம் தனது சார்பில் புகார் அளிக்க சென்றார். ஆனால் போலீசார் அவரது மனுவை வாங்காமல் அலைக்கழித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமரேசன் இன்று தனது வீட்டில் உடல் முழுவதும் மின்சார வயர்களை சுற்றிக் கொண்டு வாயில் வயரை பிடித்தவாறே மின்சாரத்தை தன் உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராரபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 28). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் கடந்த 10 வருடமாக திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் அலங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் லதா என்கிற மகேஸ்வரி (24). என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் மகேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த தேவராஜ் மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.
இதனையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் தனலட்சுமி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் தேவராஜ்-மகேஸ்வரியின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். மேலும் அவர்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறி விட்டு சென்றனர்.
பின்னர் காதல் ஜோடி திருப்பூரில் நண்பர்கள் உதவியுடன் வாடகை வீட்டில் குடியேறினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அன்னை ஆரோக்கியராஜ் (வயது 25). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் மதுக்கூர் அருகே உள்ள மண்டலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பிரியா (22) என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அன்னை ஆரோக்கிய ராஜிம், பிரியாவும் உறவினர்கள். பிரியா பி.எஸ்சி படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிரியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, தனது பெற்றோரிடம் தான் அன்னை ஆரோக்கியராஜை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். இதை கேட்டு திடுக்கிட்ட அவரது பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நாங்கள் பார்த்தும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று உறவினர்கள் பிரியாவை மிரட்டி வந்ததாத கூறப்படுகிறது.
இதுபற்றி சிங்கப்பூரில் உள்ள காதலன் அன்னை ஆரோக்கியராஜிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சிங்கப்பூரில் இருந்து கடந்த 4-ந் தேதி இந்தியா திரும்பினார்.
பின்னர் ஊருக்கு வந்த அன்னை ஆரோக்கியராஜ், தனது உறவினர்களுடன் பிரியா வீட்டுக்கு சென்று முறைப்படி திருமணம் செய்து வைக்க பெண் கேட்டார். அப்போது பிரியாவின் உறவினர்கள் மறுத்து தெரிவித்து அனுப்பி விட்டனர்.
பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரியா கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் காதலன் அன்னை ஆரோக்கியராஜை சந்தித்தார். பிறகு இருவரும் வேளாங்கண்ணி சென்றனர். அங்கு நண்பர்கள் முன்னிலையில் பிரியா கழுத்தில் அன்னை ஆரோக்கியராஜ் தாலி கட்டினார்.
இதற்கிடையே திருமணம் நடந்து விட்டதால் பிரியாவின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் காதல் ஜோடி இருவரும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இன்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பிரியாவின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தஞ்சை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்