search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver Suicide"

    • வீடியோவில் அம்பத்தூர் போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரித்து தன்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறுகிறார்.
    • போலீசார் மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த பரணிபுத்தூரை சேர்ந்தவர் ரூபன் (வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனர்.

    ரூபன் பைனான்சில் ஆட்டோ வாங்கி இருந்தார். இதற்கான பணம் ரூ. 3 லட்சம் வரை திருப்பி கட்ட முடியவில்லை என்று தெரிகிறது.

    இதுதொடர்பாக அம்பத்தூர் போலீசில் ரூபன் மீது புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரூபன் செல்லவில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 2-வது மனைவியான லீலாவதி வீட்டுக்கு சென்ற ரூபன் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக ரூபன் தனது செல்போனில் வீடியோ ஒன்று பேசி பதிவு செய்து உள்ளார். அதில், அம்பத்தூர் போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரித்து தன்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறுகிறார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம் என்று கூறி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது பெயரையும் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ரூபன் மீது வேறு சில வழக்குகளும் உள்ளதாக தெரிகிறது. அந்த வழக்குகளையும் சேர்த்து கைது செய்யப்போவதாக போலீசார் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன ரூபன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அசோக்கின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
    • இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது

    நாகர்கோவில்:

    பணகுடி ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், குமார் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் தண்டவாளத்தின் அருகே ஆட்டோ ஒன்றும் நின்று கொண்டிருந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் பணகுடி பாம்பன்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோக் (வயது 39) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அசோக்கின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

    இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இவர் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கும் முயன்றதும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அசோக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரியாங்குப்பத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது38). ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி பச்சைவாழி(34) மற்றும் மகள் லட்சுமி தேவி(7) மகன் ஆகாஷ்(3) ஆகியோருடன் அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே தியாகராஜனுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் ரூ.18 லட்சம் வரை அவருக்கு கடன் இருந்ததாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொடர்ந்து தியாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    இதனால் மனமுடைந்த தியாகராஜன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து அவர்கள் 3 பேரையும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கில் தொங்கினார்.

    வெகு நேரமாக தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது தியாகராஜன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அரியாங்குப்பத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மனைவி-குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தியாகராஜன் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் நெருங்கிய உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாணடம் அருகே ஆட்டோ டிரைவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). ஆட்டோ டிரைவர்.

    இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

    மேலும் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் ஆட்டோ டிரைவர் ‘பிரேக் ஆயில்’ குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மேலூர் அருகேயுள்ள கொட்டக்குடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் சரவணன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் அந்தப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் சரவணன் தனது பெற்றோரிடம் ‘நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கேட்டார்.

    அதற்கு தெய்வேந்திரன் ‘அண்ணனுக்கே இன்னும் திருமணமாகவில்லை, உன் தங்கையும் திருமண வயதில் உள்ளார். எனவே 3 ஆண்டு காத்திரு’ என்று அறிவுரை கூறினார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரவணன் ‘பிரேக் ஆயில்’ குடித்து மயங்கி விழுந்தார்.

    உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தெய்வேந்திரன் மேலூர் போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு அருகே ஆட்டோ டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை சேர்ந்தவர் லோகு சாமி (வயது 48) இவர் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் டிரைவராக பணி புரிந்தார்.

    இவரது மனைவி பெயர் ராதா மணி (35) இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை.

    இதனால் மன வேதனையில் இருந்த லோகு சாமி வீட்டில் வி‌ஷம் குடித்து விட்டார் உடனடியாக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே தாளியம்பட் டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கோபி (வயது 22). கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகள் கவிதா (19), கரூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோபி மற்றும் கவிதா ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரின் பெற்றோர்களுக்கும் அவர்களின் காதல் விவகாரம் தெரிய வரவே, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் தாங்கள் இணைந்து வாழ முடியாது என நினைத்த கோபி, கவிதா ஆகியோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் லாலாப்பேட்டை அருகே உள்ள சிம்மாச்சிப்பட்டியில் உள்ள கோபியின் உறவினர் வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்தனர்.

    இந்தநிலையில் கவிதா மற்றும் உறவினர் வெளியே சென்றிருந்த சமயத்தில் கோபி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த கவிதா முன்னதாக வீட்டிற்கு வந்து பார்த்த போது கோபி பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். இனிமேலும் வாழ முடியாது என்று எண்ணிய அவரும் வி‌ஷம் குடித்து காதலன் அருகேயே தற்கொலை செய்து கொண்டார்.

    இதனிடையே கோபியின் உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து கோபியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, லாலாப்பேட்டை போலீசிலும் புகார் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருவரின் உடலையும் மீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    தருமபுரியில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி சாலை விநாயகர் ரோட்டில் உள்ள குன்செட்டிபுரத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் கணேசன் (வயது 33). ஆட்டோ டிரைவர்.

    இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் தகவலறிந்து சம்பவத்திற்கு சென்று கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போத்தனூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    போத்தனூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது 25). ஆட்டோ டிரைவர். இவருக்கு குடிப் பழக்கம் உண்டு. இதை அவரது மனைவி இந்துமதி (24) கண்டித்துள்ளார். இதனால் பெரியசாமி நான் தற்கொலை செய்யப் போகிறேன் என மனைவியை மிரட்டி வந்துள்ளார்.

    நேற்று மாலை பெரியசாமி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது பெரியசாமி, நான் தற்கொலை செய்யப் போகிறேன் என கூறி சேலையில் தூக்கு போடுவது போல நடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை இறுக்கி பெரியசாமி தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இந்துமதி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் அவர் இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சின்மையாநகரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    போரூர்:

    சென்னை சின்மையா நகர் குலசேகரபுரம் வேதா சாலையை சேர்ந்தவர் பாபு (வயது50). ஆட்டோ டிரைவர். பாபு குடிபழக்கம் கொண்டவர்.

    இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21-ந்தேதி மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த பாபுவுடன் மனைவி தகராறில் ஈடுபட்டார்.

    இதில் மன உளைச்சல் அடைந்த பாபு வீட்டு பூஜை அறையில் இருந்த விளக்கு எண்ணெயை உடலில் ஊற்றி திடீரென தீவைத்து கொண்டார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பாபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்கரமனுர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த முரளிக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
    புதுவையில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். (வயது 42). இவருக்கு முத்தழகு என்ற மனைவியும், பிரேம்ராஜ் (17), பிரேம்சாந்த் (14) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    இதற்கிடையே மினி வேன் வாங்கி ஓட்டி வந்த புருஷோத்தமன் அதனை விற்று விட்டு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார்.

    ஆனால், குடிப்பழகத்தினால் புருஷோத்தமன் ஆட்டோ தொழிலுக்கும் கடந்த சில நாட்களாக செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் முத்தழகு டெய்லர் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

    நேற்று மூத்த மகன் பிரேம்நாத் பிறந்த நாளை மது குடித்து கொண்டாட புருஷோத்தமன் முடிவு செய்தார். இதற்காக டெய்லர் கடைக்கு சென்று மனைவி முத்தழகுவிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு முத்தழகு மகனுக்கு பிறந்த நாள். புத்தாடை வாங்கி தர முடியாத நிலையில் உள்ளதால் தற்போது பணம் எதுவும் இல்லை என்று கூறி பணம் தர மறுத்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த புருஷோத்தமன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்கிருந்து வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

    சிறிது நேரம் கழித்து வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மூத்த மகன் பிரேம்ராஜ் தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அலறி னார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் புருஷோத்தமனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே புருஷோத்தமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    புதுவை சண்முகாபுரம் வழுதாவூர் சாலை அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (42). நரிக்குறவர். இவருக்கு அஞ்சலை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள ஜெய்சங்கர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

    அது போல் நேற்று இரவும் ஜெய்சங்கர்மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். மேலும் மனைவி, குழந்தைகளை தாக்கினார். இதற்கு பயந்து அஞ்சலை தனது குழந்தைகளை அங்கிருந்து அழைத்து சென்று விட்டார்.

    சிறிது நேரம் கழித்து அஞ்சலை வீட்டுக்கு வந்து பார்த்த போது, அங்கு கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆரல்வாய்மொழி மற்றும் மார்த்தாண்டத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்தவர் குமார் (வயது 37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 18-ந்தேதி குமார் சவாரிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்தார். மனம் உடைந்து காணப்பட்ட குமார் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மார்த்தாண்டம் பாண்டார கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ராஜகனி(வயது30). இவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லை. பால்ராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜகனிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல்நலம் சரியாக வில்லை. இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜகனி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.      
    ×