search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "koyambedu police investigation"

    நெற்குன்றத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் காயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தான்.
    போரூர்:

    இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

    என்றாலும், பட்டாசு வெடிப்பதில் சிறுவர்கள் ஆர்வம் காட்டினார்கள். நெற்குன்றம் விநாயகர் புரத்தில் ஆண்டியப்பன் என்பவருடைய மகன்கள் ரவிராஜ் (9), சரண்ராஜ் (7) ஆகியோர் கடந்த 3-ந்தேதி வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தனர்.

    அப்போது தீப்பொறி பட்டு எதிர்பாராதவிதமாக அங்கு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்தன.

    இதில் ரவிராஜ், அவனுடைய தம்பி சரண்ராஜ் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இரண்டு பேரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ரவிராஜுக்கு 28 சதவீதமும், சரண்ராஜுக்கு 9 சதவீதமும் தீக்காயம் இருந்தது.

    தீக்காயம் அடைந்த சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிறுவன் ரவிராஜ், சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்கு பிறகு நேற்றுஇரவு பரிதாபமாக உயிர் இழந்தான். அவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    பலியான சிறுவன் உடலை கண்டு பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை சின்மையாநகரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    போரூர்:

    சென்னை சின்மையா நகர் குலசேகரபுரம் வேதா சாலையை சேர்ந்தவர் பாபு (வயது50). ஆட்டோ டிரைவர். பாபு குடிபழக்கம் கொண்டவர்.

    இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21-ந்தேதி மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த பாபுவுடன் மனைவி தகராறில் ஈடுபட்டார்.

    இதில் மன உளைச்சல் அடைந்த பாபு வீட்டு பூஜை அறையில் இருந்த விளக்கு எண்ணெயை உடலில் ஊற்றி திடீரென தீவைத்து கொண்டார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பாபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்கரமனுர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த முரளிக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
    ×