search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போத்தனூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    போத்தனூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

    போத்தனூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    போத்தனூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது 25). ஆட்டோ டிரைவர். இவருக்கு குடிப் பழக்கம் உண்டு. இதை அவரது மனைவி இந்துமதி (24) கண்டித்துள்ளார். இதனால் பெரியசாமி நான் தற்கொலை செய்யப் போகிறேன் என மனைவியை மிரட்டி வந்துள்ளார்.

    நேற்று மாலை பெரியசாமி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது பெரியசாமி, நான் தற்கொலை செய்யப் போகிறேன் என கூறி சேலையில் தூக்கு போடுவது போல நடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை இறுக்கி பெரியசாமி தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இந்துமதி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் அவர் இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×