என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
மதுரை:
மதுரை மேலூர் அருகேயுள்ள கொட்டக்குடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் சரவணன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் அந்தப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் சரவணன் தனது பெற்றோரிடம் ‘நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கேட்டார்.
அதற்கு தெய்வேந்திரன் ‘அண்ணனுக்கே இன்னும் திருமணமாகவில்லை, உன் தங்கையும் திருமண வயதில் உள்ளார். எனவே 3 ஆண்டு காத்திரு’ என்று அறிவுரை கூறினார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரவணன் ‘பிரேக் ஆயில்’ குடித்து மயங்கி விழுந்தார்.
உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக தெய்வேந்திரன் மேலூர் போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்