search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர் எதிர்ப்பு"

    வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். (வயது 20). இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது பதிவு திருமண விபரம் தெரிய வரவே பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமலைக்கேணியில் திருமணம் செய்து கொண்டனர்.

    தங்களுக்கு பெற்றோர்களால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்த அவர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித தடையும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி அருகே காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரியை சேர்ந்தவர் தனஞ்செழியன் (23), ஜேசிபி டிரைவர். இவரும், காளஹஸ்தியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.

    தனஞ்செழியன் இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்ககோரி அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

    திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடி இருவரும் இன்று அதிகாலை சந்திரகிரி பாகாலா இடையில் உள்ள மொரவபல்லி ரெயில்வே நிலைய தண்டவாளத்தின் அருகே காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

    சந்திரகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    போச்சம்பள்ளி அருகே காதல் செய்த பெண்ணை பெற்றோர் அழைத்து சென்றதால் மனம் உடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அகரம் அருகே உள்ள நாகலேரி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சக்திவேல் (வயது21). இவர் காவேரிப்பட்டணத்தில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் வேலை பார்த்தார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைபார்த்தபோது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள முக்குளம் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 2 பேரும் போனில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டனர்.

    கடந்த 10-ந்தேதி அன்று மகாலட்சுமியை சக்திவேல் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்து இருந்தார். நேற்று காலை மகாலட்சுமியை அவரது தந்தை வந்து சமாதானம் பேசி அழைத்து சென்றார். வெளியே சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்த சக்திவேல் இது குறித்து உறவினரிடம் கேட்டார்.

    அப்போது அவரை அவரது தந்தை அழைத்து சென்ற விபரம் தெரியவந்தது. இதனால் மனம் உடைந்த சக்திவேல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பிணத்தை கைப்பற்றி காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் கிராம நிர்வாக அலுவலர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திகோட்டை அடுத்த சென்னியக்குடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் அபிராமி (வயது 24). இவருக்கும், திருவோணம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மகேந்திரனுக்கும் (29) பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இந்த நிலையில் அபிராமியின் காதல் விவகாரம், அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அபிராமி, தனது பெற்றோரிடம் , தொடர்ந்து காதலனுடன் திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன், நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்துக்கு மாறுதலாகி சென்றார்.

    அபிராமி, நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனை திருமணம் செய்வது பற்றி பெற்றோரிடம் போனில் பேசினார். அதற்கு பெற்றோர் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அபிராமி, திடீரென வி‌ஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி ஒரத்தநாடு போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ் உத்தரவின் பேரில் வாட்டாத்திக் கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சப்-இன்ஸ்பெக்டரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாடாலூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்த முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காதலன் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் வெங்கடேசன்(வயது 22). இவர் பாடாலூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அந்த மாணவியும் அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் சேர்ந்து மாணவியை கடத்த திட்டமிட்டனர். 

    இந்த நிலையில் நேற்று காலை அந்த மாணவி பிளஸ்-2 கடைசி தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் ஏறி செட்டிகுளம் வந்தார். செட்டிகுளத்தில் இறங்கி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மாணவியின் தாய் அவரது பின்னால் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கு வெங்கடேசன் உள்பட 8 பேர் காத்திருந்தனர். அப்போது திடீரென வெங்கடேசன் மாணவியை கடத்தி செல்வதற்காக தன்னுடன் வருமாறு கையை பிடித்து இழுக்க முயன்றார். இதனை பார்த்த மாணவியின் தாயும், செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் மற்றும் பொதுமக்களும் மாணவியிடம் தகராறு செய்தது குறித்து தட்டி கேட்டனர்.

    இதனால் அச்சமடைந்த வெங்கடேசன், மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இதில் தாமோதரனை வெங்கடேசன் உள்பட 8 பேரும் சேர்ந்து தாக்கி காயப்படுத்தினர். பின்னர் வெங்கடேசனின் நண்பர்கள் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(22), கருப்புசாமி(18) ஆகிய இருவரையும் பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்ற 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து செட்டிகுளம் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் பிடித்து வைத்து இருந்த இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற மற்ற 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். மளிகைக்கடைக்காரர். இவரது மகன் தனசேகரன் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பருடைய மகள் ஜனனி (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஜனனி அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இன்ஸ் பெக்டர் ரவிச் சந்திரன், சப்-இன்ஸ் பெக்டர்கள் சின்னசாமி, ஆனந்தன் ஆகியோர் பெற்றோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு போலீசார், ஜனனியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கல்லூரி காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    திருவள்ளூர்:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (21). இவர் பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட், இறுதியாண்டு படித்து வருகிறார்.

    இவரும் அதே கல்லூரியில் உடன்படிக்கும் புண்ணியம் கிராமத்தை சேர்ந்த சின்ராஸ்(22). என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் திலகவதி வீட்டில் தெரிய வந்தது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    இதையடுத்து கடந்த 7-ந்தேதி திலகவதியும், சின்ராசும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை பாரிமுனையில் உள்ள பதிவு துறை அலுவலக்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இருவரும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரணை நடத்தினார், அப்போது இருவிட்டாரின் பெற்றோர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

    திண்டுக்கல் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள வீரலப்பட்டி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகள் தீபிகா (வயது23). இவர் எம்.காம்.சி.ஏ. படித்துள்ளார். பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    தொப்பம்பட்டி அருகே தேவத்தூர் கப்பலப்பட்டியை சேர்ந்த கோபி (23). இவர்கள் 2 பேரும் அம்பிளிக்கையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்தனர். அப்போது இவர்களிடையே காதல் ஏற்பட்டது.

    இந்த விசயம் பெற்றோருக்கு தெரியவந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் வடகாடு மலைப்பகுதியில் எல்லைக்கருப்பணசாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

    எனினும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு 2 பேரும் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபிகா மேஜர் என்பதால் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

    ஆம்பூரில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை புதுதெருவை சேர்ந்தவர் பழனி மகள் ஐஸ்வர்யா (வயது 18). இவரும் கம்பிக்கொள்ளை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜெயசூர்யா என்பவரும் கடந்த 2ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    கடந்த 31-ந் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பேரணாம்பட்டில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

    வில்லியனூரில் வீட்டை விட்டு வெளியே சென்ற பட்டதாரி பெண் காதலனை திருமணம் செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பெரியபேட் பால்வாடி தெருவை சேர்ந்தவர் முனுசாமி. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் விஷ்ணுபிரியா (வயது24). இவர் பி.காம். படித்து முடித்து தற்போது சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் சம் பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய விஷ்ணுபிரியா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் விஷ்ணுபிரியா இல்லை.

    இதையடுத்து முனுசாமி தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விஷ்ணுபிரியா தனது உறவினர் மகனான புவியரசன் (27) என்பவரை காதலித்து வந்ததும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்த காதல் ஜோடி இன்று புதுவை கோர்ட்டில் தஞ்சம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் அபிராமி (வயது 19). இவர் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான தினேஷ்குமார்(25) என்பவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு அபிராமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி தனது காதலன் தினேஷ்குமாருடன் சென்று கடலூரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் அபிராமி தனது காதல் கணவர் தினேஷ்குமாருடன் இன்று காலை புதுவை கோர்ட்டில் தஞ்சம் அடைந்தார். ஏற்கனவே அபிராமியின் பெற்றோர் தங்களது மகள் மாயமானதாக போலீசில் புகார் தெரிவித்து இருந்ததால் நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துறையூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தா.பேட்டை:

    துறையூர் தாலுகா முத்தையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமல்பிரகாஷ். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது உறவினர் மகள் அபிநயா (19). நர்சிங் படித்து விட்டு திருப்பூரில் தனியார் மருத்துவ மனையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து நிலையில் அபிநயாவிற்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். 

    இதையடுத்து கமல் பிரகாசும், அபிநயாவும் கடந்த சிலதினங்களுக்குமுன்பு பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடி கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். 

    பின்னர் தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீசில் நேற்று முன்தினம் மணக்கோலத்தில் இருவரும் பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த கமல்பிரகாசின் பெற்றோர்கள் இருவரையும் பார்த்து கொள்வதாக போலீசாரிடம் தெரிவித்து அழைத்து சென்றனர். 

    காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×