search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு - காதல் ஜோடி தற்கொலை
    X

    திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு - காதல் ஜோடி தற்கொலை

    திருப்பதி அருகே காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரியை சேர்ந்தவர் தனஞ்செழியன் (23), ஜேசிபி டிரைவர். இவரும், காளஹஸ்தியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.

    தனஞ்செழியன் இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்ககோரி அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

    திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடி இருவரும் இன்று அதிகாலை சந்திரகிரி பாகாலா இடையில் உள்ள மொரவபல்லி ரெயில்வே நிலைய தண்டவாளத்தின் அருகே காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

    சந்திரகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×