search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
    X

    போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். மளிகைக்கடைக்காரர். இவரது மகன் தனசேகரன் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பருடைய மகள் ஜனனி (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஜனனி அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இன்ஸ் பெக்டர் ரவிச் சந்திரன், சப்-இன்ஸ் பெக்டர்கள் சின்னசாமி, ஆனந்தன் ஆகியோர் பெற்றோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு போலீசார், ஜனனியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×