என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். மளிகைக்கடைக்காரர். இவரது மகன் தனசேகரன் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பருடைய மகள் ஜனனி (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஜனனி அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இன்ஸ் பெக்டர் ரவிச் சந்திரன், சப்-இன்ஸ் பெக்டர்கள் சின்னசாமி, ஆனந்தன் ஆகியோர் பெற்றோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு போலீசார், ஜனனியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்