search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    X

    ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    ஆம்பூரில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை புதுதெருவை சேர்ந்தவர் பழனி மகள் ஐஸ்வர்யா (வயது 18). இவரும் கம்பிக்கொள்ளை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜெயசூர்யா என்பவரும் கடந்த 2ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    கடந்த 31-ந் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பேரணாம்பட்டில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

    Next Story
    ×