என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உடல் முழுவதும் வயரை சுற்றி மின்சாரம் பாய்ச்சி தொழிலாளி தற்கொலை
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள சிங்காரக்கோட்டையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மகன்களும் ஒருமகளும் உள்ளனர். முதல் மகன் ரெங்கசாமி. இவர் படித்து முடித்து விட்டு விழுப்புரத்தில் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்திருந்தனர்.
இதனால் மனம் வேதனையடைந்த குமரேசன் போலீசாரிடம் தனது சார்பில் புகார் அளிக்க சென்றார். ஆனால் போலீசார் அவரது மனுவை வாங்காமல் அலைக்கழித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமரேசன் இன்று தனது வீட்டில் உடல் முழுவதும் மின்சார வயர்களை சுற்றிக் கொண்டு வாயில் வயரை பிடித்தவாறே மின்சாரத்தை தன் உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்