search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்தநாள்"

    • பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது.
    • இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 14-ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடையும்.

    சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெறும்.

    இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழ் உடன் கலந்து கொள்ள வேண்டும்.

    முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 வீரமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    கலந்து கொள்பவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தங்கள் பதிவினை அன்னை சத்யா விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி நிலா தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் தலைமையில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி அப்துல்கலாம் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதில் மாணவ- மாணவிகளுக்கு வாசித்தல், மரம் வளர்த்தல், அறிவியல் மனப்பாங்கு வளர்த்தல் போன்ற அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

    • நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 11-ந்தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 12-ந் தேதி அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் ஒரு கல் லூரிக்கு இரண்டு மாண வர்கள் பெயர்ப்பட்டியலையும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டிக்கு பள்ளிக்கு காஞ்சி தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளும், கல்லூரிக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய் மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் பள்ளி களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்புகளும், கல்லூரிக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற் காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

    கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர் களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர் கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப் புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
    • ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் தனியார் கார், ஆட்டோ, வேன் டிரைவர்கள் கலந்து கொண்டு அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். முகாமில் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், சாமி சுப்பிரமணியன், கே.அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை.
    • அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்படமாட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி முப்பிடாதி என்ற ஏசம்மாள் (வயது113). இவர்களுக்கு 8 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    மேலும் மருமகள்கள், மருமன்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுபேரன், பேத்திகள் என இவர்களின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் 68 பேர் ஆகும். இதில் பல்வேறு காரணங்களால் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 60 பேர் உள்ளனர்.

    முப்பிடாதி கடந்த 1910-ம் ஆண்டு பிறந்தவர். இந்நிலையில் தனது 113-வது வயதில் மரணம் அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், முப்பிடாதி தனது வாழ்நாளான 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை. நோய்களுக்கு வென்னீர் குடிப்பது நெற்றியில் பத்து போடுவது என இயற்கை வைத்தியம் பார்த்துக்கொள்வார். அளவான நவதானிய உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். இவருக்கு ஆங்கில மருத்துவ முறையான அலோபதி என்றாலே என்ன வென்று தெரியாது.

    அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்பட மாட்டார். கணவரை இழந்தபிறகும் தனது குடும்பத்தினரால் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது 113-வது பிறந்த நாளை நாங்கள் உற்சாகமாக கொண்டாடினோம். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். 

    • கூகுள் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
    • இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது.

    புதுடெல்லி:

    இணையத்தின் பிரபலமானதேடு பொறியான கூகுள் இன்று 25-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் இன்று தனது பிறந்த நாளையே முகப்பாக வைத்துள்ளது.

    அமெரிக்காவின் ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று கணினி அறிவியல் திட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகிய 2 நண்பர்கள் உருவாக்கியது தான் கூகுள். தங்களுடைய புராஜெக்ட்டாக அவர்கள் ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தார்கள்.

    நூலகத்தில் இருக்கும் நூல்கள், ஆவணங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறிதான், இன்று இணையதள உலகில் பிரபலமான கூகுளாக வளர்ந்து நிற்கிறது. கூகுள் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள். மேலும் ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் நிறுவனத்தில் 53 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள்.

    • நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.

    நெல்லை:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    வழக்கமாக அவரது பிறந்த நாளுக்கு சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டில் தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவேன். இன்று நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்துள்ளேன்.

    எனவே இங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளேன்.

    விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்கப் படுத்துவதிலும், ஊடகத் துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் தன்னிகரற்று விளங்கிய பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.

    ஆசிய அளவிலான விளையாட்டு போட்டியில் இந்தியா 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. இத்தகைய சாதனைகளுக்கு அவர் விளையாட்டு துறையில் முன்னுதாரணமாக விளங்கியதே காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பா.ஜனதா நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பொது செயலாளர் முத்துபலவேசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நிகழ்ச்சிகள் அனைத்தும் திருவான்மியூர் மனோகரன் தலைமையில் நடக்கிறது.
    • தியாகராய நகரில் உள்ள காக்கும் கரங்கள் அமைப்பில் உள்ள ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    காங்கிரஸ் தேசிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது 78-வது பிறந்தநாளை நாளை (சனிக்கிழமை) கொண்டாடுகிறார்.

    இதையொட்டி ப.சிதம்பரம் ஆதரவாளரும் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளருமான தி.நகர் ஸ்ரீராம் ஏற்பாட்டில் சென்னையில் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று மாலை தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

    நாளை காலை 7 மணிக்கு சென்னை காளிகாம்பாள் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், பாம்பன் சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் திருவான்மியூர் மனோகரன் தலைமையில் நடக்கிறது.

    தியாகராய நகரில் உள்ள காக்கும் கரங்கள் அமைப்பில் உள்ள ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பூக்கடை ஜீவா தலைமை வகிக்கிறார்.

    சைதாப்பேட்டையில் உள்ள அன்னை மறுவாழ்வு மையத்தில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு மதியம் 12 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சைதை வில்லியம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதியம் 12.30 மணிக்கு தரமணி பள்ளிப்பட்டு கானகத்தில் உள்ள சேவை சமய ஜெயம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்படுகிறது. தரமணி கோபி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருவான்மியூரில் உள்ள காக்கும் கரங்களில் உள்ள முதியோர்களுக்கு மதியம் 2 மணி அளவில் போர்வைகள் வழங்கப்படுகிறது. திருவான்மியூர் மனோகரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கும் போர்வை வழங்கப்படுகிறது.

    • மதுரை-வாடிப்பட்டியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும் என செல்லூர்ராஜூ-ஆர்.பி.உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளனர்.
    • காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க பகுத்தறிவு பகலவன், காஞ்சி தந்த தங்கம் பேரறிஞர் அண்ணா வின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது.

    நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு இன்னாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட நிர்வாகி கள், சார்பு அணி நிர்வாகி கள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு, உள்ளாட்சி பிரதி நிதிகள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று பேரறிஞர் பெருந்தகைக்கு மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் அவர் கூறியுள்ளார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வாடிப்பட்டியில் உள்ள பேறிஞர் அண்ணாவின் சிலைக்கு நாளை (வெள்ளிக் கிழமை)காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    ஆகவே இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் செயல்வீரர்களும், செயல்வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • அண்ணா, பெரியார் பிறந்தநநாளையொட்டி அ.தி.ம.மு.க. சார்பில் நாளை சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
    • தன்மானமுள்ள தமிழர்களுக்கு திருவிழாவாகும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதா வது-

    பகுத்தறிவு என்கின்ற சுயமரியாதை விதையை நமக்கு ஊட்டி தட்டி எழுப்பிய அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி, அதைப் போன்று ஐயா பெரியாரின் தலைமைச் சீடர் காஞ்சி தந்த கருவூலம், தென்நாட்டு பெர்னாட்சா, தமிழ்நாட்டு இங்கர்சால், மறுமலர்ச்சி தமிழினத்தின் தூதுவன், காஞ்சித் தலை வன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நாளை (15-ந் தேதி) இரண்டும் உண்மை யான திராவிட இயக்க தொண்டர்களுக்கு, தன்மானமுள்ள தமிழர்க ளுக்கு திருவிழாவாகும்.

    அந்த அடிப்படையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஐயா அவர்க ளின் பிறந்தநாளையும், அண்ணா அவர்களின் பிறந்த நாளையும் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு நாடு முழுவதும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள், அனைத்து அணி களின் நிர்வாகிகள், கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை உள்ள பொறுப் பாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து இனிப்புகள் வழங்கி யும், அதைப்போன்று பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித் தும் இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாட வேண்டுகி றேன்.

    சிலைகள் இல்லாத்த இடத்தில் ஐயா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் படத்தை வைத்து மரியாதை செய்து சிறப்பாக கொண்டா டிட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழ கத்தின் தலைமைக் கழகத் தின் சார்பில் கேட்டுக்கொள் கின்றேன்.

    தலைமைக் கழகம் சார்பில் மதுரையில் அன்னை இல்லம் பல்லவன் நகர் 3-வது தெருவில் எனது தலைமையில் காலை 9 மணிக்கு நாளை (15-ந் தேதி) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளும், வருகிற 17-ந் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளும் கொண்டா டப்படும் என்பதை தெரி வித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டாக்டர் சரவணன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு- நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • எடப்பாடி பழனிச்சாமி-முன்னாள் அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றார்.

    மதுரை

    மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு னரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான டாக்டர் சரவணன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி மதுரை யில் உள்ள முக்கிய கோவில்களில் டாக்டர் சரவணன் பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை டாக்டர் சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வை சந்தித்து டாக்டர் சரவணன் வாழ்த்து பெற்றார்.

    மேலும் முன்னாள்

    எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செய லாளர் வெற்றிவேல், மாந கராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா ஆகியோர் டாக்டர் சரவணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பிறந்தநாளை முன்னிட்டு சதீஷ் ஏற்பாட்டில் தொழிலதிபர் ரகுநந்தன் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

    மத்திய 3-ம் பகுதி செயலாளர் மாணிக்கம், விளாங்குடி பகுதி செய லாளர் ஜித்தன், வாடிப் பட்டி ஒன்றிய பொறுப் பாளர் ஆவியூர் ராதா கிருஷ்ணன், வடக்கு 2-ம் பகுதி செயலாளர் கணே சன், பழங்காநத்தம் பகுதி செயலாளர் பிரிட்டோ, அம்மன் குரூப்ஸ் உரிமை யாளர் லட்சுமணன், இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்திக், தமிழக முன்னேற்ற கழகம் நிறு வனர் ராஜ்குமார், மருது தேசிய கழகம் சார்பில் மருதுபாண்டி, அகமுடை யார் கல்வி மைய நிர்வாகி கள் ஆகியோர் டாக்டர் சரவணன் சந்தித்து பொன் னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த னர்.

    டாக்டர் சரவணனின் சூர்யா அறக்கட்டளை மூலம் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மாற்று கால்கள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும் ஏராள மானோருக்கு இலவச இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

    • விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.
    • கேப்டன் பாண்டியன், கேப்டன்முத்த, பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    தமிழகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் கடந்த 25-ந் தேதி முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,தே.மு.தி.க. கட்சி நிறுவனருமான விஜய காந்தின் 71-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    அதன்அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரபாகர் காலனியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள மாண வர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் உறவு கள் மற்றும் புதிய சகாப்தம் வாட்ஸ் அப் குழு இணைந்து காலை உணவு மற்றும் நோட்டு புத்தகம் உபகர ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நாட்டார் மங்கலம் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் துரை பாஸ்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனசேகரன், பைசூர் ரகுமான், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பழனிவேல், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் ஜாபர் அலி, நகர செயலாளர் மாதவன், சிங்கம்புணரி செயலாளர்களான சிவகுமார்.

    பாண்டி, ராக்கெட் ராஜா, கேப்டன் குமார், நாச்சியார்புரம் குமார், மருதங்குடி கணேஷ்பாபு, கல்லல் ஒன்றிய பொறுப்பா ளர் நேதாஜி பிரபாகர், கிருஷ்ணன், பிள்ளை யார்பட்டி சரவணன், முத்துப்பாண்டி, பாலு, பழனிவேல், ரமணாராமு, முருகேசன், மாவட்ட ஒன்றிய நகர் கிளைக் கழக நிர்வாகிகள் உடனி ருந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய நிர்வாகிக ளான கேப்டன் பாண்டியன், கேப்டன்முத்த, பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×