search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bicycle race"

    • கலெக்டர் தகவல்
    • வேலூரில் நாளை நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பிறந்த நாளையொட்டி 2023-24-ம் ஆண்டுக்கான சைக்கிள் போட்டிகள் வேலூரில் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவு சார்பில் நடத்தப் படும் இந்த போட்டிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களுடைய சொந்த சைக்கிளுடன் கலந்து கொள்ளலாம்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டிகள் 13 வயது, 15 வயது, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்படும்.

    இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமையா சிரியர்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்றும் அல்லது ஆதார் அட்டை கொண்டு வந்தும் கலந்து கொள் ளலாம். போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்படமாட்டாது.

    போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர்களை நாளை காலை 6 மணிக்குள் வேலூர் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டி நடைபெறும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசுத்தொகை, சான்றி தழ்கள் வழங்கப்படும்.

    4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்குத் தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகையும் தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டிகள் காட்பாடி அருகிலுள்ள பள்ளிக்குப்பத்தில் தொடங்கி கண்டிப்பேட்டில் நிறைவடையும்.

    மேலும் விவரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017 03483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது.
    • இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 14-ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடையும்.

    சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெறும்.

    இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழ் உடன் கலந்து கொள்ள வேண்டும்.

    முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 வீரமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    கலந்து கொள்பவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தங்கள் பதிவினை அன்னை சத்யா விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி நிலா தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்தது
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2022-2023 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிவின் சார்பாக இன்று காலை 7 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து சைக்கிள் போட்டி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சைக்கிள் போட்டியினை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இப்போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சைக்கிள் போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் மாணவ- மாணவிகள் 13 வயது, 15 வயது, 17 வயது கொண்ட மாணவர்கள் 5கி.மீ தூரம் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு காசோலை மூலம் முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களில் பிடிப்பவர்களுக்கு ரூ.250 வீதம் பரிசு தொகையும் தகுதி சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி சிப்காட் பெல் ரூட் அக்ராவரம் வழியாக சென்று மீண்டும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பி.பிரபு மற்றும் மாவட்ட உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள், ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வகை பள்ளிகளின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15ம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2022-2023-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிவின் சார்பாக வருகிற 11-ந் தேதி காலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    இதில் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், 13 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 15 கி.மீ.தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ.தூரமும், 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும் எ 15 கி.மீ. தூரமும் நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    மேற்கண்ட 3 வயது பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குகாசோலை மூலம் முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு தினப்படி/பயணப்படி ஏதும் வழங்க மாட்டாது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் பெயர்களை 11-ந் தேதி காலை 6 மணிக்குள் போட்டி தொடங்கும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஆன்சிலரி பெல் ரூட், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், அக்ராவரம், திருமலை கெமிக்கல்ஸ் கம்பெனி வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை எண். 40,பெல் நிறுவனம் வரையும் சென்று மீண்டும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரும்பி வரும் வகையில் நடத்தப்பட உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலக நேரங்களில் 0416 2221721 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×