search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
    X

    தஞ்சையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

    • பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது.
    • இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 14-ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடையும்.

    சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெறும்.

    இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழ் உடன் கலந்து கொள்ள வேண்டும்.

    முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 வீரமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    கலந்து கொள்பவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தங்கள் பதிவினை அன்னை சத்யா விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி நிலா தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×