search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுப்போட்டி"

    • தொண்டியில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.
    • அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் அஹமது இப்ராகிம் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள அமீர் சுல்தான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ம் ஆண்டு பள்ளி மாணாவர்களுக்கான மாவட்ட அளவிலான எம்.ஆர்.எம். அப்துர்-ரகீம் பேச்சுப்போட்டி நடந்தது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முகம்மது ரபீக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அல்ஹிலால் அறக்கட்டளை தலைவர் கமால்பாட்ஷா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் அப்துல் ரவூப் நிஸ்தார் வரவேற்று பேசினார். தொண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் சமகால இந்தியா சமத்துவத்தின் சோலையா? சீரழிவின் பாலையா? என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர்.

    முதல் பரிசு கீழக்கரை பியர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி கிருஷ் ரோஷிணி, 2-ம் பரிசு தொண்டி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி மாணவி அல்ஹா, 3-ம் பரிசு ராமநாதபுரம் செய்யது அம்மமாள் ஆண்கள் மெட்ரிக் பள்ளி மாணவர் செல்வக்குமார், தமிழ் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ஆர்.எஸ்.மங்களம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகம்மது அஸ் பாக், 2-ம் பரிசு தொண்டி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி மாணவி ஹசன் பியாஷா, 3-ம் பரிசு ஆர்.எஸ்.மங்களம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவி கமர் மெர்ஸிஹா ஆகியோர் பெற்றனர். அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் அஹமது இப்ராகிம் நன்றி கூறினார்.

    • அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை ஏற்பாடு
    • போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் வருகிற 27-ந் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப அறிவுறுத்தல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா, பெரியார் பிறந்தநாளை யொட்டி வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட உள்ளது.

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் காலை 10 மணிக்கு இந்த போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புடன் திறமையை வெளிப்ப டுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து, 2 பேருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடை பெறும் நேரத்தில் மாண வர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப் பெறுவர்.

    எனவே தரப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

    மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் பரிந்து ரையுடன் ஒப்பமும் பெற்று வருகிற 27-ந் தேதிக்கு ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

    இந்த போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • மதுரை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) சுசிலா தெரிவித்தார்.

    மதுரை

    காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் வரிச்சியூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீநிகா, முதல்பரிசும், தோப்பூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி தீப்தி 2-ம் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிஷிபா 3-ம் பரிசும் வென்றனர். தத்தனேரி, திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன்அழகர்சாமி, பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் கோகுல் ஆகியோர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு வென்றனர்.

    கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் மதுரை பாத்திமா கல்லூரி மாணவி ராஜேஸ்வரி முதல் பரிசும், மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி மங்கையர்க்கரசி 2-ம் பரிசும், கே.கே.நகர் வக்பு வாரியக் கல்லூரி மாணவன் இஸ்ஹாக் அகமது மூன்றாம் பரிசும் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் சங்கீதா வழங்குவார். இந்த தகவலை மதுரை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) சுசிலா தெரிவித்தார்.

    • நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 11-ந்தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 12-ந் தேதி அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் ஒரு கல் லூரிக்கு இரண்டு மாண வர்கள் பெயர்ப்பட்டியலையும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டிக்கு பள்ளிக்கு காஞ்சி தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளும், கல்லூரிக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய் மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் பள்ளி களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்புகளும், கல்லூரிக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற் காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

    கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர் களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர் கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப் புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
    • ஒரு கல்லூரியிலிருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் பள்ளிமாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதியும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 10-ந்தேதியும் காலை 8.30 மணிக்கு தமிழ் வளர்ச்சி த்துறை சார்பில் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 5-ந்தேதி பள்ளிகளுக்கு காஞ்சித் தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளிலும் மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணாவும் மேடைபேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி 10-ந்தேதி பள்ளிகளுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சமூகர் சீர்திருத்தங்கள் ஆகிய தலைப்புகளிலும் மற்றும் கல்லூரிகளுக்கு பெரியாரும் பெண் விடுதலையும் சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் ஆகிய தலைப்பு களில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

    தென்காசி மாவட்ட அளவில் நடை பெறும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் 6-ம் வகுப்பு முதல்

    12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம்பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2ஆயிரம், வீதம் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பெறும் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டி யில் கலந்து கொள்ளலாம்,

    மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் 2-ம் தலத்தில் செயல்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 04822502521) தொடர்பு கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் ஆர்வ த்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில்20-ந்தேதி நடக்கிறது
    • ஒரு கல்லூரியில் இருந்து 5 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்

    கன்னியாகுமரி :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணி அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு "கலைஞரும் சங்கத் தமிழும்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒரு கல்லூரியில் இருந்து 5 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். 3 நிமிடங்களுக்குள் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் தங்களின் பெயர்களை 72005 62301 என்ற எண்ணில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    • மதுரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 23-ந்தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    தமிழ் வளர்ச்சித் துறை யின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக்கோ ரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப்பாடுபட்ட தலை வர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப்போட்டிகள் வருகிற 23.08.2023 அன்று பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பக லிலும் மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகக் கூட்டரங்கில் நடத்தப்பட இருக்கி றது.

    அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு, தனி யார், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி கள், பொறியியல் மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க லாம்.

    போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.

    கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்காக தலைப்புகள் வெளியிடப்பட் டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு கலைத்தாயின் தவப்புதல் வன், முத்தமிழறிஞர், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப் பொக்கும் எல்லா உயி ருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி.

    கல்லூரி மாணவர்களுக்கு என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச்சூரியனே, பூம்பு கார், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகர் கலைஞர், சமூகநீதிக் காவலர் கலைஞர் ஆகிய தலைப்புகளில் முத்தமிழறிஞர் கருணாநிதி யின் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் நடைபெற வுள்ளன.

    பள்ளி கல்லூரி மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம்பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத் தப்படும் பேச்சுப் போட்டி யில் மட்டும், தங்கள் பேச் சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத்தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.

    மேற்கண்ட தகவலை தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

    • வனத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.
    • ஜோசப் ஸ்டாலின் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மேட்டுப்பாளையம்,

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ந்தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்லார் புதூர் உண்டு,உறை விடப்பள்ளியில் வனத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.

    மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முன்னதாக ஜோசப் ஸ்டாலின் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வனவர் முனியாண்டி, பள்ளி நிர்வாகி ஷ்யாம் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.
    • முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது மின்னஞ்சலில் 24-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது. 

    கடலூர் மாவட்டத்தி லுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடை பெற உள்ளன. அப்போட்டி களில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும், பள்ளி மாண வர்களுக்கென நடத்தப் பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் களுள் அரசுப் பள்ளி மாண வர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொரு வருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 வீதம் வழங்கப்பெறவும் உள்ளன.

    பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவி லான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 24-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

    பள்ளி களுக்கான பேச்சுப் போட்டி தலைப்பு கள் கலைத் தாயின் தவப்புதல்வன், முத்தமிழறி ஞர், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி. கல்லூரி களுக்கான பேச்சு ப்போட்டி தலைப்பு கள் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகார், நட்பு, குறளோ வியம், கலைஞரின் எழுது கோல், அரசியல் வித் தகர் கலைஞர், சமூக நீதி காவலர் கலைஞர்.பள்ளிப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்கும். இப்போ ட்டிகளில் கட லூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவி கள் கலந்து கொண்டு பயன்பெ றலாம். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    • மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள், நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்க உள்ளது.
    • மாணவர்கள் குலுக்கல் சீட்டு மூலம் தலைப்பினை தேர்வு செய்து பேச வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா் மற்றும் கருணாநிதி ஆகியோர் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள், நாளை (13-ந்தேதி) தொடங்கி 14ந்தேதி வரை 2 நாட்கள் நடக்க உள்ளது.

    இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள், ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ஜூலை 13, 14ந்தேதிகளில் நடக்க உள்ளன.

    இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் மூன்று பரிசாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    மேலும் பள்ளிகளில் நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரை தோ்வு செய்து, அவா்களுக்கு சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

    முன்னதாக பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் குலுக்கல் சீட்டு மூலம் தோ்வு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேச வேண்டும். எனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் உரிய படிவத்தை பூா்த்தி செய்து பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் இன்று (12ந்தேதி) மாலை 6 மணிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • 15 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    போட்டிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்று பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன் , பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை துறையின் நல அலுவலர் நரேந்திரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா ஹனி, கல்லூரி செயலர் ராதாகிருஷ்ணன், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மாணவர்களுக்கு ரூ 20 ஆயிரமும்,2ம் இடம் வெற்றிப்படும் மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், 3ம் இடம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. ஐந்தாயிரம் வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே, பெரியார் அம்பேத்கரும் கண்ட சமூக ஜனநாயகம், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணாவின் தமிழ் கனவு, கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும் மாநில உரிமைகளும் உள்ளிட்ட 15 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் உதவி கலெக்டர் அர்ச்சனா, ஒன்றிய குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், காமாட்சி, மகேந்திரன், நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ண ன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏவிசி கல்லூரி தமிழ் துறை தலைவர் தமிழ் வேலு நன்றி கூறினார்.

    • கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
    • தமிழக அரசு காலை உணவுத் திட்டம் 1544 பள்ளிகளில் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அரங்கில், மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்துக் கல்லூரி மாணவ, பேச்சுப் போட்டி நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழினை வழங்கி அவர் பேசியதாவது:-

    கடுமையான முயற்சி செய்தால்தான் முன்னேற முடியும். விடா முயற்சி, கடுமையான உழைப்பு இதுதான் நமது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் அப்போதுதான் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற முடியும் பேச்சுப்போட்டி என்பது கல்வி சார்ந்த ஆற்றலை அதிகப்படுத்துவது வாழ்கையில் கல்வி மட்டும் போதுமானது அல்ல. அதையும் தாண்டி பல்வேறு ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் தனித்திறமைகள் மாணவர்களுக்கு தேவை. அரசை தேடி மக்கள் இல்லை மக்களைத் தேடி அரசு சென்று சேவை செய்யவேண்டும் என்பது தான் நமது பொதுப்பணி துைற அமைச்சரின் விருப்பம், ஒவ்வொரு தொகுதியிலும் நேரடியாக சென்று மக்களிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது தீர்வு காண்பதே தன்னுடைய தலையாய் கடைமையாக பணியாற்றி வருகின்றார்.

    மாணவர்கள் அரசுப் போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு வருகின்ற ஜூன் மாதத்திலிருந்து திருவண்ணாமலை செய்யாறு அரசுக்கலைக் கல்லூரிகளில் வகுப்பு தொடங்கப்படும் இந்த பயிற்சிக்கு வேலை வாய்ப்பு பயிற்சி துறையின் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் இ - புக் - ல் டவுன்லோட் செய்து பயன் பெறலாம் மற்றும் தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது நமது மாவட்டத்தில் 1544 பள்ளிகளில் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் . பார்வதி சீனிவாசன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் . நிர்மலா கார்த்தி வேல்மாறன், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×