search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
    X

    சீர்காழியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.

    சீர்காழியில், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

    • 15 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    போட்டிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்று பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன் , பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை துறையின் நல அலுவலர் நரேந்திரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா ஹனி, கல்லூரி செயலர் ராதாகிருஷ்ணன், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மாணவர்களுக்கு ரூ 20 ஆயிரமும்,2ம் இடம் வெற்றிப்படும் மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், 3ம் இடம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. ஐந்தாயிரம் வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே, பெரியார் அம்பேத்கரும் கண்ட சமூக ஜனநாயகம், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணாவின் தமிழ் கனவு, கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும் மாநில உரிமைகளும் உள்ளிட்ட 15 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் உதவி கலெக்டர் அர்ச்சனா, ஒன்றிய குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், காமாட்சி, மகேந்திரன், நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ண ன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏவிசி கல்லூரி தமிழ் துறை தலைவர் தமிழ் வேலு நன்றி கூறினார்.

    Next Story
    ×