search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்கள்"

    • கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
    • மகளிர் மற்றும் மாணவிகளுக்காக இயக்கப்படும் இந்த பேருந்து முறையாக இயக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் நகர பேருந்துகள் மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான மகளிர் தமிழக அரசு சார்பாக இயக்கப்படும் இலவச நகர பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

    ஆனால் குன்னூர் பகுதிகளில் 4 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பேருந்துகள் குன்னூர் மவுண்ட் பேஸன்ட் பிளாக் பிரிட்ஜ், சிம்ஸ்பார்க், பெட் போர்டு வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

    குறிப்பாக மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அந்த வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும், அதற்கு பதிலாக சில பேருந்துகளை வேறு பகுதிக்கு இயக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரங்களில இந்த பகுதியில் மகளிர் பயணம் செய்ய முடிவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 3 பேருந்துகளும் வரிசையாக நிறுத்தப்பட்டும், ஒரே நேரத்தில் அனைத்தும் இயக்கப்படுவதால் நீண்ட நேரம் மகளிர் பேருந்துகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே மகளிர் மற்றும் மாணவிகளுக்காக இயக்கப்படும் இந்த பேருந்து முறையாக இயக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
    • தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர்.

    பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர். கோர்ட்டில் இருதரப்பு வாதங்கள் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடுவை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார்.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜ மகேந்திரபவரத்தில் உள்ள ஜெயிலில் நள்ளிரவு அடைத்தனர். ஜெயிலில் அவருக்கு 7691 கைதி எண் வழங்கப்பட்டது.

    ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் வீட்டு உணவு வழங்கவும் நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.

    இந்த பந்திற்கு ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் லோக் சத்தா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    தெலுங்கு தேசம் கட்சி பந்த் அறிவிக்கப்பட்டதால் ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவில் பந்த் காரணமாக மாநிலத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வாகனங்களின் டிரைவர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

    விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆந்திராவில் பதட்டம் நிலைவியது.

    ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து வழக்கம் போல ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஆந்திர எல்லையில் இருந்து முக்கிய பஸ் நிறுத்தங்களில் அந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் திருப்பதி இடையே இன்று வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.

    பந்த் காரணமாக ஆந்திராவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    பந்தால் பக்தர்கள் அவதி அடையக் கூடாது என்பதற்காக திருப்பதிக்கு மட்டும் பந்த் இல்லை என விலக்கு அளித்துள்ளனர். திருப்பதியில் கடைகள் ஓட்டல்கள் டீக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.

    • ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.
    • ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    ஆந்திரா மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் ஆந்திராவிற்கு இயக்கப்படுகிறது. அதே போல் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு கிருஷ்ணகிரி வழியாக செல்வது வழக்கம்.

    அதே போல் ஓசூரில் பணிபுரியும் ஆந்திரா மாநில தொழிலாளர்கள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை சென்று வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.

    திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் ஆந்திரா பஸ்கள் ஓசூர், கிருஷ்ணகிரிக்கு பயணிகளை ஏற்றி செல்ல வந்தது. அதே போல் தமிழக பஸ்களும் ஆந்திரா மாநிலத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றன.

    இதனால் வழக்கம் போல் நேற்று காலை முதல் ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் சென்று வந்தன.

    • 8-ந்தேதி மற்றும் 9-ந் தேதிகளில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பஸ்களின் இயக்கத்தினை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    விழுப்புரம்:

    வருகிற 10மற்றும் 11 -ந் தேதிகளில் சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 8-ந்தேதி மற்றும் 9-ந் தேதிகளில் மக்கள் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் எண்ணிக்கை குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ் களை ஏற்பாடு செய்யவும், பஸ்களின் இயக்கத்தினை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    • ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.
    • சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகி ப்பாளர்கள் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    அந்த்யோதயா ரெயிலானது முன்பதிவு இல்லா பெட்டி களுடன் ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.

    இந்த ரெயில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இயக்கப்பட வில்லை என்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குறையாக உள்ளது.

    இதனால் அந்த மக்கள் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.

    எனவே, அப்பகுதி மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் சென்னை செல்ல ஏதுவாக திருநெல்வேலியில் இருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    இதுகுறித்து போக்கு வரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் கூறியிருப்பதாவது:

    நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, வேளாங்கண்ணி திருவிழா, ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி.

    புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென் னைக்கும், சென்னை யிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 150 பேருந்துகளும், திருச்சியி லிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், அந்த ஊா்களில் இருந்து திருச்சிக்கும்.

    திருச்சி யிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பேருந்துகளும் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இன்றும், நாளையும் இயக்கப்பட வுள்ளன.இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவா் ஊா்களுக்கு செல்ல 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிற தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவுக்கும் செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    அனைத்து போக்கு வரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. எனவே, பயணிகள் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோ தகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.
    • சங்கரன்கோவில்-நெல்லை இடையே குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:-

    சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரை வரை புதிய பஸ்கள் மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்கு இடைநில்லா ஒன்-டு-ஒன் பஸ் மற்றும் சங்கரன்கோவில் - நெல்லை குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
    • இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் அவதி

    இந்த நிலையில் சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் பாலம் வழியாக செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    உயர்மட்ட பாலம் அமைக்கும் முன்பு அனைத்து பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சென்றன. ஆனால் தற்போது சில நிறுத்தங்களை தவிர்த்து பாலம் வழியாக பஸ்கள் சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சிறைபிடிப்பு

    இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற 5 தனியார் பஸ்கள் வழக்கம் போல் பாலம் வழியாக இயக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.கே.செல்வம் தலைமையில் பூசாரிப்பட்டி பகுதியில் அந்த 5 பஸ்களையும் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இதனை மீறி சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக தெரிவித்தனர். பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீ சார் அவர்களை சமாதா னப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

    • தேவகோட்டையில் இருந்து மதுரை, திருச்சிக்கு செல்ல பஸ்கள் இயக்க வேண்டும்.
    • நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் இருந்து மதுரை, திருச்சி மற்றும் வெளியூர்களுக்கு செல்ல அரசுபஸ்கள் இயக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேவகோட்டை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் தேவைகளுக்கு திருச்சி, மதுரை போன்ற நகரங்க ளுக்கு சென்று வருகின்றனர்.

    தேவகோட்டையில் இருந்து பஸ் வசதிகளையே மட்டுமே உள்ளதால் பிற நகரங்களுக்கு செல்ல அதிக நேரம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

    தற்பொழுது தேவ கோட்டையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்பட்டு பைபாஸ் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளதால் அவ்வழியாக மதுரை மற்றும் திருச்சிக்கு பஸ்கள் இயக்கப்பட்டால் பயண நேரங்களும் குறைவ தோடு பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு ஏதுவாக அமையும்.

    மதுரை, திருச்சி புறநகரங்களுக்கு தேவகோட்டையில் இருந்து பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக இயக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அடிச்சட்டம் மற்றும் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1000 பஸ்கள் ரூ.152.50 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
    • முதல் கட்டமாக 100 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அடிச்சட்டம் மற்றும் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1000 பஸ்கள் ரூ.152.50 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. முதல் கட்டமாக 100 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் கோட்டத்தில் அடிச்சட்டம் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 217 பஸ்கள் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 14 பஸ்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் சேலம் மண்ட லத்திற்கு 4 பஸ்களும், தருமபுரி மண்டலத்திற்கு 10 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அந்த பேருந்துகள் புணரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் அந்த பஸ்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் 11, 12, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
    • சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கம்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் விடுமுறை நாளான வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை), 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 15-ந்தேதி சுதந்திர தினத்தை யொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகிறது.

    இதேபோல், சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி. ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் 11, 12, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப வசதியாக வருகிற 13 மற்றும் 15-ந்தேதிகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் ஊருக்கு செல்ல வசதியாக முன்பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் இந்த பஸ் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கால்கடுக்க புத்தக மூட்டையுடன் மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்
    • பயணிகளை ஏற்றி செல்வது ஓட்டுநர்களின் இன்றியமையாத கடமை என மக்கள் தெரிவித்தனர்.

    பொதுவாக மனிதன் வாழும் வாழ்க்கையில் பஸ்களின் அவசியம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகள் அனைவருக்கும் பஸ் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

    தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளியூர் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை விட நகர பஸ்களின் எண்ணிக்கை தான் அதிக அளவில் உள்ளது. ஏனெனில் பொதுமக்கள் நகர்ப்புற எல்லைக்குள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு நகரப் பஸ் மட்டுமே அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

    அத்தகைய நகர பஸ்களை தினமும் காலை மற்றும் மாலை சமயங்களில் உபயோகப்படுத்தாத மக்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நகர பஸ்கள் உரிய நிறுத்தத்தில் நிற்பது கிடையாது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    அதிலும் காலை நேரங்களில் பஸ் நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கூட்டத்தை காணும் போது, டிரைவர் வேண்டுமென்றே வேகத்தை கூட்டி அவர்கள் நிற்கக்கூடிய இடத்தை தாண்டி செல்வார். இது அன்றாடம் நடைபெறும் நிகழ்வு ஆகிவிட்டது. ஒரு சில பஸ்கள் நிற்காமல் சென்று விடும். மற்ற சில பஸ்கள் நிறுத்தத்தை விட்டு, சிறு தூரம் கடந்து சென்று நிற்கும். அப்போது பள்ளி மாணவிகள் தனது புத்தக சுமையையும் தோளில் தொங்க விட்டுக்கொண்டு ஓடி பிடித்து, முண்டியடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறுவது வழக்கம். இது தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது என அன்றாடம் பயணிப்பவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இவ்வாறு பஸ்கள் நிற்காமல் செல்லும்போது, அதன் பின்னால் வரும் தனியார் பஸ்கள் நிறுத்தி அனைவரையும் ஏற்றி விட்டு செல்கின்றனர். அந்த இடத்தில் தனியார் பஸ்களில் வருமானம் அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது போன்ற ஒரு மாயை ஏற்படுகிறது.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் பஸ்சை எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் வாகனங்கள் அல்லாத நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே பஸ்களை எதிர்பார்த்து பயணம் செய்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பஸ் பயணத்தை நம்பியே உள்ளனர். அப்படி இருக்கும் போது அவர்களை புறக்கணித்து விட்டு பஸ்கள் செல்வது மாணவ மாணவிகளுக்கு கஷ்டமாக உள்ளது. காலையிலேயே பஸ் மூலம் அவர்கள் மனது உடையும்போது அன்றும் முழுவதும் பள்ளி படிப்பில் கவனம் செலுத்துவதே முடியாது.

    இதனால் கல்வியில் பின் தங்கிய நிலைக்கு செல்வதற்கு கூட ஒரு வாய்ப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பஸ் ஓட்டும் டிரைவர்கள் இதை கவனத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் நிறுத்தத்தில் சரியாக நிறுத்தி, மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்வது அவர்களது இன்றியமையாத கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×