search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட 14 பஸ்கள் விரைவில் இயக்கம்
    X

    சேலம் கோட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட 14 பஸ்கள் விரைவில் இயக்கம்

    • தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அடிச்சட்டம் மற்றும் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1000 பஸ்கள் ரூ.152.50 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
    • முதல் கட்டமாக 100 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அடிச்சட்டம் மற்றும் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1000 பஸ்கள் ரூ.152.50 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. முதல் கட்டமாக 100 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் கோட்டத்தில் அடிச்சட்டம் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 217 பஸ்கள் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 14 பஸ்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் சேலம் மண்ட லத்திற்கு 4 பஸ்களும், தருமபுரி மண்டலத்திற்கு 10 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அந்த பேருந்துகள் புணரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் அந்த பஸ்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×