search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கு தேச கட்சி"

    • சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
    • தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர்.

    பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர். கோர்ட்டில் இருதரப்பு வாதங்கள் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடுவை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார்.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜ மகேந்திரபவரத்தில் உள்ள ஜெயிலில் நள்ளிரவு அடைத்தனர். ஜெயிலில் அவருக்கு 7691 கைதி எண் வழங்கப்பட்டது.

    ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் வீட்டு உணவு வழங்கவும் நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.

    இந்த பந்திற்கு ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் லோக் சத்தா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    தெலுங்கு தேசம் கட்சி பந்த் அறிவிக்கப்பட்டதால் ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவில் பந்த் காரணமாக மாநிலத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வாகனங்களின் டிரைவர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

    விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆந்திராவில் பதட்டம் நிலைவியது.

    ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து வழக்கம் போல ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஆந்திர எல்லையில் இருந்து முக்கிய பஸ் நிறுத்தங்களில் அந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் திருப்பதி இடையே இன்று வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.

    பந்த் காரணமாக ஆந்திராவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    பந்தால் பக்தர்கள் அவதி அடையக் கூடாது என்பதற்காக திருப்பதிக்கு மட்டும் பந்த் இல்லை என விலக்கு அளித்துள்ளனர். திருப்பதியில் கடைகள் ஓட்டல்கள் டீக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.

    • ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.
    • ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    ஆந்திரா மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் ஆந்திராவிற்கு இயக்கப்படுகிறது. அதே போல் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு கிருஷ்ணகிரி வழியாக செல்வது வழக்கம்.

    அதே போல் ஓசூரில் பணிபுரியும் ஆந்திரா மாநில தொழிலாளர்கள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை சென்று வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.

    திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் ஆந்திரா பஸ்கள் ஓசூர், கிருஷ்ணகிரிக்கு பயணிகளை ஏற்றி செல்ல வந்தது. அதே போல் தமிழக பஸ்களும் ஆந்திரா மாநிலத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றன.

    இதனால் வழக்கம் போல் நேற்று காலை முதல் ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் சென்று வந்தன.

    • உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அக்கட்சி தலைவர் வலியுறுத்தல்.
    • தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்து இருக்கிறது.

    தெலுங்கு தேசம் கட்சியின் அச்ச நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முன்னதாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திரா முழுக்க தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.

    மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக ஆந்திர மாநிலம் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

    ×