search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா"

    • 54 ஆண்டுகளுக்கும்மேலாக 124 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
    • இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் பெரிச்சிபாளையம் காலனியில் மாநகராட்சி சாா்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் சுமாா் 54 ஆண்டுகளுக்கும்மேலாக 124 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் மாநகராட்சிக்கு மாதம் ரூ.10 வாடகையாக செலுத்திவந்த நிலையில் தற்போது ரூ.500 வாடகை செலுத்தி வருகின்றனா்.

    இந்நிலையில் பெரிச்சிபாளையம் காலனி குடியிருப்புக்களை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம் மனுக் கொடுத்திருந்தனா்.

    இதனடிப்படையில் அப்பகுதியில் கே.சுப்பராயன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்கள் குடியிருந்து வருவதால் அவா்களது பெயரிலேயே பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மேயா், மாநகராட்சி ஆணையரிடம் பேசியுள்ளதாகவும், தமிழக முதல்வரை சந்தித்து பட்டா வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அப்பகுதி பொதுமக்களிடம் உறுதியளித்தாா்.

    ஆய்வின்போது மாநகராட்சி துணைமேயா் பாலசுப்பிரமணியம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் முத்துகண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • வாரிசு மற்றும் பட்டா கேட்டு கொடுத்த மனுவின் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது
    • பல ஆண்டுகளாக போராடி கிடைக்காமல் இருந்த சான்றுகளை வழங்கிய தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு மாணவி குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது 17). இவர் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    நான் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறேன். எனது தாயார் சந்திரா மனநலம் பாதித்தவர். நாங்கள் வசிக்கும் வீடு சேதமடைந்து மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பாம்பு, எலி போன்ற பூச்சிகள் வீட்டுக்கு வருவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளது.

    எனவே எனது தந்தை ஆறுமுகத்தின் வாரிசு என்பதற்கான சான்றும், நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டாவும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவின் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இதனிடையே தாசில்தாரிடம் நேரடியாக முறையிட்டதின் பேரில் தாசில்தார் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது மாணவியின் வீடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததும், அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் உறுதியானது. ஆனால் மாணவியின் தந்தைக்கு 2 மனைவிகள் என்பதும் முதல் மனைவி இறந்து விட்டதால் கரூரில் இருக்கும் அவரது மகள் கவிதாவிடம் எழுத்துப்பூர்வமான சம்மதம் பெற்று பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து சந்திரா குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் மாணவிக்கு வாரிசு சான்றிதழ் ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக போராடி கிடைக்காமல் இருந்த சான்றுகளை வழங்கிய தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினருக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    • 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.
    • இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை.

    உடுமலை :

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.

    ஆனால் இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை. தற்போது இந்த இடம் தனியார் நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு 96 குடும்பங்களுக்கு இடத்தை பிரித்து வழங்க வேண்டும். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என அதில் கூறியுள்ளனர்.

    • அரசுக்கு சொந்தமான ஓடை நீர்வழி மற்றும் மந்தை புறம்போக்கு நிலம் சுமார் 10 ஏக்கர் உள்ளது.
    • பலவகை மரம், செடி,கொடிகள் நடப்பட்டு வனம் உருவாக்கி வைத்துள்ளனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டி கொத்துமுட்டி பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஓடை நீர்வழி மற்றும் மந்தை புறம்போக்கு நிலம் சுமார் 10 ஏக்கர் உள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் அந்த நிலத்தில் முல்லைவனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பலவகை மரம், செடி,கொடிகள் நடப்பட்டு வனம் உருவாக்கி வைத்துள்ளனர். இதனிடையே இந்த அரசு நிலத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கி தர அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதனிடையே அவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து கொத்துமுட்டி பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வனத்தை அளித்து பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து தாசில்தார் நந்தகோபாலிடம் மனு அளித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு நிலத்தில் பல ஆயிரக்கணக்கான நிழல் தரும் கனி தரும் மரம்,செடி,கொடிகளை நட்டு பொதுமக்கள் பராமரித்து வரும் நிலையில் அதனை அழித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அங்கு குடியிருந்து வருகின்றனர்.
    • வக்புவாரிய அலுவலகத்தில் தடையின்மை சான்றிதழ் வாங்கி வரக் கோரி பதிவுத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அவிநாசி சேவூர் அருகே 1996 ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தேவேந்திரர்நகர் மக்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அங்கு குடியிருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வீடு கட்ட கடன் வாங்க சென்றபோது சார்பதிவாளர் அலுவலகத்தில், வீட்டுமனைகள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வக்புவாரிய அலுவலகத்தில் தடையின்மைச் சான்றிதழ் வாங்கி வரக் கோரி பதிவுத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேவேந்திர நகர் பகுதி மக்கள் இன்று கலெக்டரிடம் மனு அளித்தனர். 

    • மாணவ- மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கினார்.
    • ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7381 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதி வண்டிகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நாகை சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில், நிரந்தர வீட்டிற்கான பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.

    அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.

    அவர் கொண்டுவந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்றார்.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் ஷாநவாஸ், நாகை மாலி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • குடிமனை பட்டா வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
    • 300 பேர் வீட்டு மனை பட்டா வேண்டி ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு டவுன் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடிமனை பட்டா வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

    ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் கட்சியினர் மற்றும் ஏற்காடு முருகன் நகர், ஜெரினக்காடு, பட்டிபாடி, கீரைக்காடு, கொட்டச்சேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300 பேர் வீட்டு மனை பட்டா வேண்டி ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு டவுன் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

    மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கிராம மக்கள் குடிமனை பட்டா வேண்டி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

    இந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார், பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டது.‌
    • உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டது.‌ இந்த மனுக்களை விசாரணை செய்து பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்ப ந்தப்பட்டதுறைஅலுவ லர்களுக்கு அறிவுறு த்தப்பட்டு உள்ளது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரங்களை உடனடியாக மனுதாரருக்கு தெரிவி க்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ. 22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி :

    திருத்துறைப்பூண்டி தாலுகா பாமினி ஊராட்சி, அத்திமடை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். இதற்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இம்முகாமில் பாமினி, தேசிங்குராஜபுரம், கொக்கலாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் துறைகளின் நலதிட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெறுவதற்கு இம்முகாம் மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த மக்கள் நேர்காணல் முகாமில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில்; வீடு கட்டுவதற்கான ஆணையும்; வருவாய்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு உட்பிரிவு பட்டாவும், 11 நபர்களுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையும், 19 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 84 நபர்களுக்கு ரூ.84 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 11 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாவும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் பேட்டரி தெளிப்பானும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 05 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 250 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரமும் என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சித்ரா, தாசில்தார் அலெக்ஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.
    • தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்தில் அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கீழ மூவர்கரை மீனவ கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிரந்தர பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, மயிலாடுதுறை டி.ஆர்.ஒ. முருகதாஸ், சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல்ஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

    கலெக்டர் லலிதா மீனவ குடும்பங்களுக்கு 122 பட்டாக்களை வழங்கி பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்திற்கு அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்திற்குள் சிறப்பு முகாம்கள் நடத்தி பட்டா விரைவில் முழுமையாக வழங்கப்படும் என்றார்.

    விழாவில் சீர்காழி வட்ட வழங்கல் தனி தாசில்தார் சபிதா தேவி, தனிமண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, ஊராட்சித் தலைவர் சரளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
    • மலைவாழ் கிராமங்களில் பட்டா வழங்க பணிகள் துவங்கியுள்ளது.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் 13க்கும் அதிகமான மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாரம்பரியமாக வசிக்கும் மக்கள் வன உரிமை சட்டத்தின் கீழ் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன் வாயிலாக தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து வன உரிமை குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில், பட்டா வழங்க வன உரிமைக்குழு தீர்மானங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில் பட்டா வழங்க பணிகள் துவங்கியுள்ளது. தளிஞ்சிவயல் கிராமத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வனத்துறையால் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.
    • மாவட்ட அளவில் பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை குறித்து பயிற்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியினை வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். கூடுதல் தாசில்தார்கள் வேதையன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியினை வேதாரண்யம்கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் பார்வையிட்டார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 18 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், திருக்குவளையில் 9 பேருக்கும், கிவளுரில் 14 பேருக்கும், நாகையில் 26 பேருக்கும் என மொத்தம் 67 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவில்பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×