search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா"

    • சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
    • போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதனை ஒட்டிய பகுதியான மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை தங்கம்மன் கோவில் தெருவிலும் அருந்ததியினர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி கள் ஒட்டினர்.

    ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களில் முழுவதும் கருப்புக்கொடி கட்டினர். அனைத்து வீடுகளின் வாசல் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டது.

    அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் அங்குள்ள தங்கம்மன் கோவில் அருகே பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் அரசு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுப வர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது.
    • பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவாதிட்டார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் அரசு ஆவணங்களின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடி கிராமத்தில்அமைச்சர் ரகுபதி வீட்டுமனை பட்டா வழங்கினார்
    • 59 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் 59 விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா விற்கான ஆணைகளை சட்டம ், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்ரகுபதி வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசு ம்போது, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலையில் உள்ள 59 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளுக்கு விலையில்லா வீடுகள் கட்டி தருவதற்கு உரிய நடவடி க்கையும் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், வட்டாட்சியர் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

    • பஸ் உடைக்கப்பட்டதால் பரபரப்பு
    • ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கையை நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் அளித்து உள்ளனர். மேலும் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அருந்த தியர் தெருவை சேர்ந்த மக்கள் பட்டா கேட்டு அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை பற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த னர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெருவில் இருந்து பேரணியாக சாலையை நோக்கி வந்தனர். அவர்கள் சாலையோரம் நின்ற படி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

    திடீரென ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியல் செய்ய அனுமதி இல்லை என கூறினர்.

    ஆனாலும் மக்கள் போலீசாரின் பேச்சை பொருட்ப டுத்தாமல் தொடர்ந்து சாலை மறியல் நடத்தினர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் ராஜேஷ், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமர், திருமுருகன், அருண் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியலை பொதுமக்கள் கைவிடவில்லை.

    அப்போது மறியிலில் ஈடுபட்ட 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மண் எண்ணெய்யை தனது உடல் முழுவதும் ஊற்றினார். இதனை கண்ட போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து கேனை பிடுங்கினர். மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றி னர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதனைதொடர்நது மறியிலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றினர். மேலும் மறியல் செய்த ஆண்களை ஒரு மினிபஸ்சில் ஏற்றினர்.

    அப்போது மினிபஸ்சில் மறியல்காரர்கள் ஏற மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்ட ஆண்களுக்கும் இடையே தகராறுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மறியல்காரர்கள் சாலையில் கிடந்த கற்களை எடுத்து மினி பஸ் மீதும், போலீசார் மீதும் வீசத் தொடங்கினர். இதில் மினிபஸ்சின் முன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் கல் வீச்சில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீஸ்காரர் ஜோஸ் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலை கட்டுக் கடங்காமல் சென்றதால், மறியல்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் தடியடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மறியலில் ஈடுபட்ட ஆண்கள் நாலாபுற மும் சிதறி ஓட தொடங்கினர்.

    போலீசாரின் தடியடியில் குமார், கிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனர். இதில் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. போலீ சாரின் தடியடியால் கிருஷ்ணன்கோவில் சாலை பகுதி போர்களமாக கட்சி அளித்தது.

    இதனைதொடர்ந்து தப்பி ஓடிய மறியல்காரர்களை போலீசாா் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.

    • மணலூர் பகுதிகளில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.
    • சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சி யரிடம், திருநங்கை சுபஸ்ரீ தலைமையில் மனு அளிக்க ப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கருப்பூர் , மணலூர் பகுதிகளில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். திடீரென எங்களை வீட்டை விட்டு காலி செய்யமாறு வீட்டின் உரிமையாளர் கூறி வருகிறார். எங்களுக்கு எங்கு போவது என்று தெரி யவில்லை.

    எங்கள் குடும்பத்தினரும் எங்களை சேர்த்துக் கொள்ளவில்லை. எனவே சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்கி நிரந்தர முகவரியை ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டா வேண்டி 40 வருடங்களாகவே போராடி வருகின்றனர்.
    • வருவாய் துறையினர் உரிய இடத்தை அளவீடு செய்து இதுநாள் வரை தரப்படவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அங்கு செட்டிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுநகர் உள்ளது. இங்கு உள்ள ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட இடத்தில் பட்டா வேண்டி 40 வருடங்களாகவே போராடி வருகின்றனர்.கடந்த ஆண்டு காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு போராட்டம் நடத்தினர். ஆனால் பட்டா வழங்கும் இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வருவாய் துறையினர் உரிய இடத்தை அளவீடு செய்து இதுநாள் வரை தரப்படவில்லை. இந்நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் திடீரென அந்த இடத்தில் கும்பலாக சென்று குடி ஏறும் போராட்டம் செய்து வருகின்றனர்.

    • சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் நரிக்குறவர் காலனியில் 83 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் வசித்து வந்த இவர்களுக்கு மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகத்தூரில் இடம் ஒதுக்கப்பட்டு அதில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் வசித்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு அதிகத்தூரை சேர்ந்த நரிக்குறவர்கள் விண்ணப்பித்த போது இந்த இடம் மேய்ச்சக்கால் புறம்போக்கு நிலம் என்பதால் பட்டா வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தனர். மேலும் சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து நரிக்குறவர்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாதபடி அலுவலக கேட் மூடப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது நரிக்குறவர்கள் சிலர் சூழ்ந்து பட்டாகேட்டு மீண்டும் கோரிக்கை வைத்தனர். மேலும் மணிமாலையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கழுத்தில் அணிவித்து அவரது காலில் விழுந்து கதறினர். அப்போது அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டா தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உறுதி அளித்ததை தொடர்ந்து நரிக்குறவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி வாழ்ந்து வருகிறேன்.
    • நான் குடியிருக்கும் இடம் பழைய ஆவணங்களில் வண்டிப்பாதை என்று உள்ளது

    திருப்பூர்:

    திருப்பூர் கல்லம்பாளையத்தை சேர்ந்த பீட்டர் என்பவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கல்லம்பாளையம் ரெயில்வே லைன் அருகே அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி வாழ்ந்து வருகிறேன்.

    நான் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனக்கு வேறு வீடோ,சொத்துக்களே இல்லை. நான் குடியிருக்கும் இடம் பழைய ஆவணங்களில் வண்டிப்பாதை என்று உள்ளது. அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நான் குடியிருக்கும் இடத்துக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 30 ஆண்டுகளாக அந்த இடத்தில் வீடு கட்டி மின்சார வசதி பெற்று குடியிருந்து வருகிறேன்.
    • அரசுக்கு வீட்டு வரி, குடிநீர் செலுத்தி வருகிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டு கல்லம்பாளையத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் திருப்பூர் வடக்கு தாலுகா தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் குடியிருந்து வரும் இடம் மாநகராட்சிக்கு உரிய வண்டிப்பாதை என பதிவேடுகளில் உள்ளது.

    நான் கடந்த 30 ஆண்டுகளாக அந்த இடத்தில் வீடு கட்டி மின்சார வசதி பெற்று குடியிருந்து வருகிறேன். அரசுக்கு வீட்டு வரி, குடிநீர் செலுத்தி வருகிறேன். ஆகவே எனக்கு பழைய கிராம பதிவேடுகளில் உள்ளதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எனது வறுமை நிலையை கருத்தில் கொண்டு அந்த இடத்துக்கு பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுக்கடைமேடு கிராம மக்கள் 6 தலைமுறையாக வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டு காலமாக வீட்டுமனைகள் இல்லை எனக்கோரி கடந்த 2020-ம் ஆண்டும் 2022-ம் ஆண்டும் பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் குழு அமைத்து பட்டா தருவதற்கான முகாந்திரம் உள்ளதால் பட்டாதாரர்களுக்கான பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடம் தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளார்.

    ஆனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் இனிவரும் மழை காலங்களில் தங்குவதற்கான இட வசதி இல்லாத காரணத்தினால் கடந்த 10-7-2023 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவச பட்டாக்கள் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதை உடனடியாக செயல்படுத்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் ஏற்கனவே தயார் செய்த பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடத்தை கொண்டு உடனடியாக பயனாளிகளை தற்காலிக குடிசைகள் அமைக்க அனுமதி வழங்க உத்தரவிடும் படியும் வலியுறுத்தி உள்ளனர்.

    • பட்டா வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவை நிறுவனர் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். ராமநாதபுரம் இந்திரா நகர் பகுதி குடியிருப்பு மக்களுக்கு பட்டா வழங்காத ஆதி திராவிட நலத்துறை தாசில்தாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்

    மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதாகர், மாவட்டத் தலைவர் சபா தேவேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் வழிவட்ட துரை பழனி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்திரா நகர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

    • பெரம்பலூர் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
    • கலெக்டர் கற்பகம் வழங்கினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் கற்பகம், குரும்பலூரில் விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளையும், முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள இருளர் இன மக்கள் குடிநீர், கழிவறை வசதிகள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், இங்குள்ள மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுவிட்டதா, எத்தனை பேருக்கு வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, தயாராக இருந்த 23 பேரின் இ பட்டாக்களை 20 பேருக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், ஸ்டாலின் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் மெர்சி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×