search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனம்"

    • பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஆறுகளில் தண்ணீர் வறண்டு தண்ணீர் இன்றி காணப்படுகிறது.

    வனப்பகுதியில் தண்ணீர் இன்றி மரங்கள் அனைத்தும் காய்ந்து இருக்கிறது. இந்நிலையில் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் அக்காமலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள வனத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் சம்பவ இடததிற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில், 7 ஏக்கர் மதிப்புள்ள செடி, தேயிலை, மரங்கள் போன்றவை எரிந்து சாம்பலாகியது,

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.
    • அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.

    திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.

    அந்த இடம் பார்வதி தேவி தவம் இருந்த இடமாகும்.

    அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.

    வந்த வழி தெரியாமல் மலையில் தவிக்க நேரிடும் என்று தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    ரமணரின் பக்தர்களில் ஒருவரான ஹம்பரீஸ் என்பவருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.

    கடைசியில் அவர் ஒரு விறகு வெட்டி மூலம் மலையில் இருந்து கீழே இறங்கினார்.

    தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழும் எந்த மலையிலும் இப்படி அதிசய வனம் இல்லை.

    திருவண்ணாமலையில் மட்டுமே அந்த அதிசய வனம் உள்ளது.

    • பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மரபு வழிபட்ட பஞ்சவாடி எனப்படும் தெய்வீக வனங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
    • தெய்வீக வனங்களை உருவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நட்டார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், 96.நெம்மேலி ஊராட்சியில் மனோலயம் ஹெல்த் கேர் டிரஸ்ட் சங்கமாஸ் இன்டர்நேஷனல், ஐயோஃபா மற்றும் 108 தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் 108 இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மரபு வழிபட்ட பஞ்சவாடி எனப்படும் தெய்வீக வனங்களை உருவாக்க முடிவு செய்து மரக்கன்றுகள் நடதிட்டமிட்டது.

    அதன்படி, மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் தி.மனோகரன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் சதீஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசுக்கு சொந்தமான ஓடை நீர்வழி மற்றும் மந்தை புறம்போக்கு நிலம் சுமார் 10 ஏக்கர் உள்ளது.
    • பலவகை மரம், செடி,கொடிகள் நடப்பட்டு வனம் உருவாக்கி வைத்துள்ளனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டி கொத்துமுட்டி பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஓடை நீர்வழி மற்றும் மந்தை புறம்போக்கு நிலம் சுமார் 10 ஏக்கர் உள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் அந்த நிலத்தில் முல்லைவனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பலவகை மரம், செடி,கொடிகள் நடப்பட்டு வனம் உருவாக்கி வைத்துள்ளனர். இதனிடையே இந்த அரசு நிலத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கி தர அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதனிடையே அவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து கொத்துமுட்டி பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வனத்தை அளித்து பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து தாசில்தார் நந்தகோபாலிடம் மனு அளித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு நிலத்தில் பல ஆயிரக்கணக்கான நிழல் தரும் கனி தரும் மரம்,செடி,கொடிகளை நட்டு பொதுமக்கள் பராமரித்து வரும் நிலையில் அதனை அழித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குட்டி யானையின் உடல் அருகே செல்லும் போது, தாய் யானை வர வாய்ப்பு இருப்பதால், வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையின் அருகில் செல்லவில்லை.
    • உடல் கிடக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் தாய் யானை பிளிறி கொண்டே இருக்கிறது.

    கோவை:

    கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனசரகத்திற்கு–ட்பட்டது அட்டுக்கல் பகுதி. இந்த பகுதியில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இங்குள்ள யானைகள் யானைமடுவு, அட்டுக்கல் ஆதிவாசி கிராமம், கெம்பனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக இருந்தது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் வாகனங்களில் ரோந்து செல்கின்றனர்.

    நேற்று மாலை வனத்துறை ஊழியர்கள், குப்பேபாளையம் பகுதியில் இருந்து அட்டுக்கல் வழியாக யானைமடுவு பகுதியை நோக்கி சென்றனர். அப்போது அட்டுக்கல் வனத்தில் இருந்து 50 மீட்டரில் குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது.

    மேலும் யானை உடலின் சற்று தொலைவில் அதன் தாய் யானை பிளிறி கொண்டே இருந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது இறந்து கிடந்தது ஒரு மாதமே ஆன குட்டி ஆண்யானை என்பது தெரியவந்தது. இதையடுத்து யானை குட்டியை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். ஆனால் உடல் கிடக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் தாய் யானை பிளிறி கொண்டே இருக்கிறது.

    மேலும் குட்டி யானையின் உடல் அருகே செல்லும் போது, தாய் யானை வர வாய்ப்பு இருப்பதால், வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையின் அருகில் செல்லவில்லை.

    சற்று தள்ளி நின்றபடியே இரவு முழுவதும் குட்டி யானையின் உடலை கண்காணித்தனர். இன்று காலை சத்தியமங்கலம் கால்நடை உதவி டாக்டர் சதாசிவம் தலைமையிலான மருத்துவகுழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

    பின்னர் வனத்துறையினரும், கால்நடை டாக்டர்களும் இணைந்து, குட்டி யானையின் உடல் அருகே சுற்றி திரியும் தாய் யானையை அங்கிருந்து வெளியேற்றி விட்டு, குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஸ்ரீ கண்டன் இயக்கத்தில் வெற்றி, ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் வனம் படத்தின் விமர்சனம்.
    நாயகன் வெற்றி பழமையான அரசு சிறப்பக் கல்லூரியில் படிக்க செல்கிறார். அங்கு கட்டப்பட்ட விடுதியில் குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எதனால் நடக்கிறது என்று கண்டுபிடிக்க முயலுகிறார் வெற்றி. அப்போது கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார். வெற்றியும் ஸ்மிருதி வெங்கட்டும் நட்பாகிறார்கள்.

    ஸ்மிருதி வெங்கட்டுடன் இணைந்து மர்ம மரணங்கள் குறித்து ஆராய முயற்சிக்கிறார். அப்போது, பல அமானுஷ்ய விஷயங்களும், திடுக்கிடும் அசம்பாவிதங்களும் வெளியே வருகிறது. இறுதியில் மர்ம மரணங்களுக்கான காரணங்களை வெற்றி கண்டுபிடித்தாரா? அமானுஷ்ய விஷயங்கள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    வெற்றி நடுத்தர குடும்பத்து இளைஞராக வருகிறார். கண்களாலேயே நமக்குத் திகிலூட்டுகிறார். 8 தோட்டாக்கள், ஜீவி படங்களைப் போலவே இதிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கதாபாத்திரம். கதையின் சீரியஸ் தன்மைக்கு ஏற்றபடி உடல்மொழியும், வசன உச்சரிப்பும் பொருத்தமாக இருக்கிறது. நாயகி ஸ்மிருதி வெங்கட் வந்த பிறகு படம் இன்னும் வேகமாக நகர்கிறது.

    புலமையான புத்தகத்தை வாசிக்கும் நிமிடங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஜமீனாக வேல ராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், வனத்திற்குள் வாழும் பளியர்களின் பரிதாப வாழ்க்கையும் நெஞ்சில் பதிகிறது. வனப்பெண் மல்லியாக அனுசித்தாரா மேக்கப் முகம் உறுத்தல். அழகம் பெருமாளின் சஸ்பென்ஸ் கதாபாத்திரமும், அந்த மாயக்கண்ணாடியும் படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது.

    விமர்சனம்

    வனத்தை மையமாக வைத்து திகில், பேண்டஸி, பீரியட் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கண்டன். இடைவேளைக்குப் பிறகு படத்தில் பல இடங்களில் டுவிஸ்ட் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. வனத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி உருக்கம். இயக்குநர் ஸ்ரீ கண்டன் ஆனந்த், மாதவா, ஐசக் பசில் ஆகியோர் திரைக்கதைக்காக உழைத்திருப்பது தெரிகிறது.

    ரான் ஈத்தன் பின்னணி இசையும், விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் படத்தில் ஒன்ற வைக்கிறது. 

    மொத்தத்தில் ‘வனம்’ திகில் குறைவு.
    அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் வனம் படம் இயற்கையை நேசிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    பூர்வ ஜென்மத்தை நினைவுபடுத்தும் ஜமீன் கதை 
    கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் இப்போதும் மறக்க முடியாத படம் நெஞ்சம் மறப்பதில்லை படம் இதே பாணியில் தற்போது இயக்குநர் ஸ்ரீ கண்டன் என்பவர் வனம் படத்தை எடுத்து வருகிறார். இது மறுபிறவியைப் பற்றிய பேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. 

    அறுபது வருடங்களுக்கு முன்பு நடந்த ஜமீன்தார் ஒருவரின் வாழ்க்கையும், இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பங்களையும் சேர்த்து திரில்லர் படம் இது. கதாநாயகனாக வெற்றி, கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

    வனம்

    இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை ஒரு நாள் அழிக்கும் என்பதை விளக்குகிறது இந்தப்படம். இன்றைய காலகட்டத்தில் அறிவியல், மற்றும் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதால் வனம் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
    ×