search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்த்திக்கடன்"

    • 7-ந்தேதி தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார்.
    • 16-ந்தேதி விடையாற்றி விழா நடக்கிறது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பிரசித்திப்பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கென்று தனி சன்னதி கிடையாது. ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தீபமாக காட்சி தரும் அம்மனுக்கு வைகாசி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா பிரசித்திப்பெற்ற திருவிழாக்களுள் ஒன்றாகும்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற நாச்சியார் கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்திலிருந்து அம்மன் கோவிலுக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 27-ந் தேதி வீற்றிருந்த திருக்கோலத்திலும், 28-ந் தேதி தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரத்திலும், 29-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் ஆகாசமாரியம்மன் அருள்பாலித்தார்.

    30-ந் தேதி மதன கோபால அலங்காரத்திலும், 31-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 1-ந் தேதி சேஷ சயன அலங்காரத்திலும், 2-ந் தேதி அம்பாள் அந்தம் வரை வளர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் ஏகாந்த வைபவத்தையொட்டி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று பெரிய திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தல் உள்பட பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    நாச்சியார்கோவில் வீதிகள் அனைத்தும் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து தொட்டில் கட்டியும், பாடை காவடி எடுத்தும், அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஆகாசமாரியம்மன் அருள்பாலிக்கிறார்.

    7-ந் தேதி (புதன்கிழமை) இரவு தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார். அப்போது நின்ற திருக்கோலத்தில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு சமயபுரம் புறப்படுகிறார். வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன் அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.

    • திரளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • நாளை விடையாற்றி மற்றும் அம்பாள் ஊஞ்சலாட்டு விழா நடைபெற உள்ளது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் பூண்டி தெற்கு செங்குந்தர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியும், சுவாமி வீதி உலாவும் நடந்தது.

    விழாவில் நேற்றுமுன்தினம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை சத்திரம் காவிரி படித்துறையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தீமிதிக்கும் இடத்தை வந்தடைந்தது.

    பின்னர் அங்கு திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நேற்று காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.

    நாளை (வெள்ளிக்கிழமை) விடையாற்றி மற்றும் அம்பாள் ஊஞ்சலாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை தெற்கு செங்குந்தர் தெரு கிராம தலைவர் மற்றும் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து மஞ்சள் கயறு கட்டி ஊர்வலமாக வந்தனர்.
    • தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவாரூர்:

    குடவாசல் அருகே சீதக்கமங்கலத்தில் வீரபத்திர மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 9-ம் ஆண்டு தீமிதி திருவிழாவுக்கான பூச்சொரிதல் விழா கடந்த 18-ந் தேதி நடந்தது. அதையடுத்து தினசரி அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.

    நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் திருமலைராஜன் ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கிருந்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து மஞ்சள் கயறு கட்டி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் கோவில் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் பழமையான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரை திருவிழாவையொட்டி பெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து ஆற்றில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் விலை நிலங்களில் விளைந்த நெல், கேழ்வரகை இடித்து புட்டு வைத்து பெருமாளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.

    விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை புல்வாய்குளம் கிராம மக்கள், மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    • பூக்குழி திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    முதல் நாள் திருவிழா சிங்கராஜாகோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 2-ம் நாள் திருவிழா சக்கராஜா கோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 3-ம் நாள் திருவிழா பிள்ளைமார் சமூகத்தார் சார்பிலும், 4-ம் நாள் திருவிழா புதுப்பாளை யம் ஆசாரியர்கள் சமூகத் தார் சார்பிலும், 5-ம் நாள் திருவிழா பூபால்ராஜாபட்டி ஆசாரியர்கள் சமூகத்தார் சார்பிலும், 6-ம் நாள் திருவிழா மடத்துப்பட்டி தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தார் சார்பிலும் நடந்தது.

    7-ம் நாள் திருவிழா புதுப்பாளையம் தேவர்கள் சமூகத்தார் ஆண்டதம்மன் கோவில் தெரு நாட்டாமை சார்பிலும், 8-ம் நாள் திருவிழா துரைச்சாமிபுரம் வணிக வைசியர்கள் சமூகத்தார் சார்பிலும், 9-ம் நாள் திருவிழா சாலியர்கள் சமூகத்தார் சார்பிலும் நடைபெற்றது.

    அம்மன் பொட்டி பல்லக்கு, கண்ணாடி சப்பரம், பூதவாகனம், தண்டியல் கண்ணாடி சப்பரம், பூ சப்பரம் போன்ற சப்பரங்க ளில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். 10-ம் திருவிழாவில் நாராயண ராஜா வகையறாக்கள் சார்பில் மேற்படியாளர்கள் மஞ்சள் பட்டு, சாலியர்கள் மஞ்சள் பட்டுடன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    காப்பு கட்டிய குழந்தைகள் பெண்கள் உள்பட 5080 பக்தர்கள் அணிவகுத்து வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். பின்னர் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா தலைமையில் அறங்காவலர் குழுவினர் ரமேஷ்ராஜா, ராமராஜ் ராஜா, ஜெயக் குமார்ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் செய்தி ருந்தனர். டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தாராபுரத்தில் 7 அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.
    • ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 500 ஆண்டுகள் பழமையான காட்டில் அனுமந்தராயசாமி கோவில் உள்ளது. பொதுவாக ராமர் கோவில்களில் மூலமூர்த்தியாக சீதா, ராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஆஞ்சநேயர் இருப்பது வழக்கம். ஆனால் தாராபுரத்தில் 7 அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா, ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலின் தனி சிறப்பாகும். ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேற்கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே கோவில் இருப்பது இங்கு மட்டுமே. இக்கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்ட விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தையொட்டி தாராபுரம் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பூர்வாதி புண்ணியங்கள் வந்து சேர, நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டி அங்கப்பிரதட்சணம் என்ற மடைபுரலுதல் விநோத நேர்த்திக்கடனை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் பிரகாரத்திற்குள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ ஆஞ்சநேயரும் பக்தர்களுடன் ஒன்றாக உடன் அமர்ந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவு அருந்தியதாகவும், அவர் சாப்பிட்ட இலையின் மீது படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்வது பூர்வ புண்ணிய நற்பலன்களை கொண்டு வந்து சேர்க்கும் என்ற ஐதீகத்தால் நேர்த்திக்கடன் செலுத்த விரும்பியவர்கள் பொதுமக்கள் அன்னதானம் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது, கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டு உருண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

    எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து, துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயப்பெருமானை உள்ளம் உருக வேண்டிக்கொண்டால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணமாகும். தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் குணமாவதுடன், வியாபார தடைகள், குடும்ப பிரிவினைகள் நீங்கி சுபிட்சம் அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை தீமிதி தெப்பத் திருவிழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நடைபெற்றது.

    காலை முதலே அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. 500 பக்தர்கள் காவடி எடுத்து கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஆகாசராயர் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

    அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஆகாசராயர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பருவமழை தவறாமல் செய்ய வேண்டும் பொதுமக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும். தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காக 1000 ஆண்டுகளாக அவினாசியை அடுத்து ராயம்பாளையத்திலிருந்து மண்ணால் உருவாக்கப்பட்டு வண்ணம் தீட்டிய குதிரையை அப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சுமந்து வந்து ஆகாசராயர் கோவிலில் வைப்பது வைதீகம்.

    அதன்படி நேற்று ராயம்பாளையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆகாசராயர் கோவிலுக்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மண் குதிரையை சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து ஆகாசராயர் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது.

    அப்போது மகாகா ளியம்மன் மணிமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்புகட்டி கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர்.

    செண்டை மேளம் முழங்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பூக்குழி இறங்கும் வைபவத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றன்பின் ஒருவராக பூக்குழி இறங்கி பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர்.

    அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.

    தீமிதி திருவிழாவில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 64 கிராம மீனவ மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகையில் உள்ள சுந்தர காளியம்மன் கோவிலில் 7-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    அது சமயம், குடமுருட்டி ஆற்றில் இருந்து கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் தீப்பந்தம் பிடித்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்
    • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், நோய் நொடியின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பொன்னமராவதி:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. மறுநாள் அக்கினிப்பால்குட விழா நடைபெற்றது. இதன் பின்னர் கடந்த 26ம் தேதி சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டது. அன்று முதல் தினசரி மண்டகப்படி தாரர்கள் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், நள்ளிரவு சுவாமி வீதி விழா நடைபெறுகிறது. உற்சவ அம்மன் ரதத்தில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறும்.

    அப்போது தீப்பந்தம் பிடிப்பதால் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், நோய் நொடியின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக ரதத்தின் இருபுறமும் தீப்பந்தம் பிடித்து கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபாடு செய்தனர்.

    • பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

    தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவில் நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் படை யலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி 21 அக்னி சட்டி, 101 அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் குழந்தையை கரும்பு தொட்டிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×