search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்துமாரியம்மன்"

    • கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை தீமிதி தெப்பத் திருவிழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நடைபெற்றது.

    காலை முதலே அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. 500 பக்தர்கள் காவடி எடுத்து கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று இரவு தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.



    சிறப்பு அலங்காரத்தில் தாயமங்கலம் முத்து மாரியம்மன்.

     மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரி யம்மன் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா விழா கடந்த 29-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.

    இைதயொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், ஆயிரங்கண் பானை, கரும்பு தொட்டில் கட்டி வருதல் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்தி பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வேண்டுதல் களை நிறைவேற்றினர்.

    ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நீண்ட வரிசையில் நின்று முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று (வியா ழக்கிழமை) இரவு 7.15 மணிக்கு மின் அலங்கார தேரோட்டம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை பால்குடம், ஊஞ்சல் உற்சவம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8-ந்தேதி (சனிக்கிழமை) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்செட்டியார் மற்றும் அலுவலர் கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


    • முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா நடந்தது.
    • அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரம் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ளது தாயமங்லம் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவிழா தொடங்கு வதற்கு 5 நாட்கள் முன்பே மதுரை மாட்டுதாவணி பஸ்நிலை யத்தில்இருந்து தாயமங்லம் கோவில் வரை அரசுபஸ் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த29-ந்தேதி பங்குனி பெருந்திருவிழா தொடங்கியது. நேற்று முதல் தினமும் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் தாயமங்லம் சென்று வருகிறது. வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பொங்கல் விழா, 6-ந்தேதி தேரோட்டம், 7-ந்தேதி பால்குடம், ஊஞ்சல் உற்சவம், இரவு பூபல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முன்னதாக முதல்நாள் விழாவில் மூலவர் அம்மனுக்கு 11 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, நவசக்தி ஹோமம், லட்சார்ச்சனை நடந்தது.

    மேலும் சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோ ட்டை, கமுதி, பரமக்குடி, காளையார் கோவில் ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரம் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    விழாஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்செட்டியார் மற்றும் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கொரோனா நோய்தொற்றிலிருந்து அனைத்து மக்களை காக்க வேண்டி, பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை கோவில் தலைவர் கணேசன், தர்மகர்த்தா திருமணி, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி குமரன்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு, அமைதி, நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, கொரோனா நோய்தொற்றிலிருந்து அனைத்து மக்களை காக்க வேண்டியும், பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் கணேசன், தர்மகர்த்தா திருமணி, செயலாளர் பெருமாள், பொருளாளர் முனியசாமி, கவுரவ ஆலோசகர் ராமர், மற்றும் முத்துக்குமார், மகளிர் அணி, இளைஞர் அணி, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×