search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபயணம்"

    • பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மூலமாக செல்ல சாலைகளும் உள்ளன
    • திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

    இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ளது திருப்பதி.

    இந்துக்களுக்கு மிக முக்கிய புனித தலமாக கருதப்படும் திருப்பதியில் உள்ள திருமலை எனும் மலையில் உள்ள உலக புகழ் பெற்ற கோயிலில், இந்துக்கள் வழிபடும் தெய்வமான திருமாலின் சன்னதி உள்ளது.

    இவரை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி அங்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலின் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எனும் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

    திருப்பதியில் இருந்து மலை மீது உள்ள திருமலைக்கு பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மற்றும் 2 அல்லது 4 சக்கர வாகனங்கள் மூலமாக செல்வதற்கு சாலைகளும் உள்ளன. படிக்கட்டுகள் வழியாக மேல் திருப்பதிக்கு செல்ல சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

    சென்ற வாரம் அங்கு படிக்கட்டு மார்க்கமாக திருமலைக்கு சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த லக்ஷிதா எனும் 6-வயது சிறுமி பெற்றோரிடமிருந்து சற்று விலகி நடந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மலைப்பகுதியிலுள்ள காடுகளில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று அச்சிறுமியை தாக்கியதில், அச்சிறுமி உயிரிழந்தாள்.

    இச்சம்பவத்திற்கு பிறகு திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே செல்ல விரும்பும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.

    வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

    "நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்க கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும்," இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவிக்கிறது.

    • இன்று இரவு கன்னியாகுமரி வருகிறார்
    • அண்ணாமலை, குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்களை சந்திக்கிறார்

    நாகர்கோவில் :

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைப யணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பயணத்தை தொட ங்கிய அவர், பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வருகிறார்.

    இந்த பயணத்தில் அண்ணாமலை, குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்களை சந்திக்கிறார். இதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) இரவு கன்னியாகுமரி வருகிறார். அங்குள்ள தனியார் ஓட்டலில் அவர் தங்குகிறார்.

    தொடர்ந்து நாளை (15-ந்தேதி) விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ட்டபட்ட களியக்கா விளை யில் இருந்து அண்ணாமலை நடைபய ணத்தை தொடங்கு கிறார். காலை 8 மணிக்கு பயண த்தை தொடங்கும் அவர், மதியம் குழித்து றையில் பேசுகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள சமூக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். மாலை 4 மணிக்கு வெட்டுமணியில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, இரவில் இரவிபுதூர்கடை வரை செல்கிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் அவர் பேசுகிறார். 17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட சாமியார் மடத்தில் இருந்து நடைபயணம் தொடங்கும் அவர், மணலி சந்திப்பில் நிறைவு செய்கிறார். மாலை யில் தக்கலை சந்திப்பில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, வில்லுக்குறி சந்திப்பில் பயணத்தை முடிக்கிறார்.

    மறுநாள் (18-ந்தேதி) நாகர்கோவில் தொகுதி க்குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து அவர் நடைபயணம் தொடங்குகிறார். வேப்பமூடு சந்திப்பு வரை செல்லும் அவர், அங்குள்ள காமராஜர் சிலை முன்பு பேசுகிறார். மாலையில் கன்னியாகும ரியில் அவர் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கி றார். மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மூலம் மக்க ளை சந்திக்கும் அவருக்கு கட்சியினர் உற்சாக வர வேற்பு கொடுக்கின்றனர்.

    • பொதுக்கள், பஸ் பயணிகளிடம் போலி டாக்டர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • ஸ்டீராய்டு கிரீம்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும பக்க விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு.

    தஞ்சாவூர்:

    இந்திய தோல், பால்வினை மருத்துவர்கள் மற்றும் தொழுநோய் நிபுணர்கள் சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் 13-வது ஆண்டு கருத்தரங்க மாநாடு கடந்த 11-ந்தேதி தஞ்சை மஹாராஜா மஹாலில் தொடங்கியது. விழாவில் 2-ம் நாளான நேற்று பல்வேறு மருத்துவ தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றன.

    விழாவில் நிறைவு நாளான இன்று காலை தோல் மருத்துவத்தில் போலி மருத்துவர்களை களையக்கோரி விழிப்புணர்வு நடைபயணம் (வாக்கத்தான்) நடை பெற்றது.

    இதற்கு இந்திய தோல், பால்வினை மருத்துவர்கள் மற்றும் தொழுநோய் நிபுணர்கள் சங்க தேசிய தலைவர் டாக்டர் விஜய் ஜவார், கவுரவ பொது செயலாளர் டாக்டர் தினேஷ்குமார் தேவராஜ், மாநில தலைவர் டாக்டர் காளீஸ்வரன், கவுரவ செயலாளர் டாக்டர் அன்னி புளோரா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநாட்டு தலைவர் பத்மானந்தன் முன்னிலை வகித்தார். இந்த நடைபயணத்தில் தோல் சம்பந்தமான மருத்துவ பட்டப்படிப்பு படிக்காமல் சில மாத கோர்ஸ் படித்து விட்டு தோல், முடி, நகம் மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர்களை களைய வேண்டும். இந்த போலி டாக்டர்களிடம் பொது மக்கள் மருத்துவம் பார்க்க கூடாது.

    தோல், முடி, நகம் சிகிச்சையை தகுதியான தோல் மருத்துவரிடம் ( எம்.டி. தோல் மருத்துவம், எம்.டி.டி.வி.எல். டி.என்.பி.டி.வி.எல், டி.டி.வி.எல், டி.டி ) மட்டுமே பெற வேண்டும். தோல் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மேற்பூச்சு ஸ்டீராய்டு கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஸ்டீராய்டு கிரீம்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும பக்க விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டன.

    இந்த நடைபயணமானது மஹாராஜா மகாலில் தொடங்கி புதிய பஸ் நிலை யத்தில் முடிவடைந்தன. அங்கும் பொதுக்கள், பஸ் பயணிகளுக்கு தோல் மருத்துவத்தில் போலி மருத்துவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் மாநாட்டு தலைவர் டாக்டர் கலைசெல்வன், பொருளாளர் டாக்டர் கோபாலகிருஷ்ண பாண்டியன், அறிவியல் தலைவர் டாக்டர் கவியரசன், டாக்டர்கள் மாணிக்கவாசகம், பிரசாத், ராஜசேகர், ஜீவலட்சுமி, பாண்டியன், பாலசுப்பிர மணியன் உள்பட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து இன்று தொடர்ந்து நிறைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றன. பல்வேறு தலைப்புகளின் கீழ் டாக்டர்கள் பேசினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் மாவட்ட நிர்வாகிகள் நேரில் ஆய்வு
    • குமரியில் 3 நாள் நடைபயணம்

    நாகர்கோவில், ஆக.13-

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களை சந்தித்து வருகிறார். ராமநாதபுரத்தில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களில் நடை பயணத்தை முடித்துக் கொண்டு நாளை (14-ந்தேதி) இரவு கன்னியாகுமரி வருகிறார்.

    பின்னர் குமரி மாவட்டத் திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் அண்ணாமலை நடைபய ணம் மேற்கொள்கிறார்.

    15-ந்தேதி காலை 8 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட களியக்காவிளை யில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அன்று மதியம் குழித்துறை யில் சிறப்புரை ஆற்றுகிறார். அங்கு அந்த பகுதியில் உள்ள சமூக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். மாலை 4 மணிக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வெட்டுமணியில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை எருதூர் கடையில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக் குட்பட்ட சாமியார்மடம் பகுதியில் இருந்து நடை பயணம் மேற்கொள்கிறார். மணலியில் சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு குளச்சல் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை வில்லுக்குறி யில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    18-ந்தேதி காலை நாகர்கோவில் தொகுதிக் குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கி வேப்பமூடு காமராஜர் சிலை முன்பு சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட கன்னி யாகுமரி ரவுண்டானாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கி கொட்டாரத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    அண்ணாமலை சிறப்பு ரையாற்ற உள்ள 6 இடங்க ளையும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலை மையில் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகர்கோவில் வேப்பமூட்டில் அண்ணா மலை பேச உள்ள இடத்தை மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு அதற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோ சனை மேற்கொண்டனர். மாநில செயலாளர் மீனா தேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் இன்று அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • ஒரு தனியார் அரங்கத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    விருதுநகர்

    தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சியாக மாநில தலைவர் அண்ணா–மலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேசுவ–ரத்தில் நடைபயணம் தொடங்கி–னார். நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபய–ணத்தை ஆரம்பித்த அவர் இன்று காலை விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் பாதயாத்திரை சென்றார்.

    அப்போது வழிநெடுகி–லும் திரண்டு நின்ற பொது–மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பா.ஜ.க. தொண்டர்கள் அவர் மீது மலர்களை தூவினர். அப் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ராஜ–பாண்டியும் அண்ணாம–லையை வரவேற்றார்.

    தொடர்ந்து அவர் ராம–மூர்த்தி ரோடு, ரெயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலையம், வெயிலுகந்தம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் தெரு, நகராட்சி சாலை, இன்னாசியார் தேவாலயம் வழியாக சாத்தூர் ரோடு சந்திப்பு பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த பொது–மக்கள் மத்தியில் பேசினார். முன்னதாக அவர் பாண்டி–யன் நகர் பகுதியில் அமைந் துள்ள முத்துராம–லிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து இன்று மாலை அண்ணாமலை சிவகாசிக்கு செல்கிறார். அங்குள்ள ஒரு தனியார் அரங்கத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலதிபர் களை சந்தித்து கலந்துரையா–டுகிறார்.

    • வருகிற 19-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் நடைபயணம் தொடங்குகிறது.
    • பொதுக்கூட்டங்கள் நடத்துவதை விட்டுவிட்டு நடைபயணத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்கினார். 5 கட்டங்களாக வருகிற ஜனவரி மாதம் வரை நடைபெறும் இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    முதல் கட்ட யாத்திரை வருகிற 22-ந்தேதி நெல்லையில் முடிவடைகிறது. நேற்று முன்தினம் ஓய்வு என்பதால் அண்ணாமலை சென்னை புறப்பட்டு வந்தார்.

    நேற்று மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாகவும், அந்த கூட்டத்தில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசுவதாகவும் இருந்தது. ஆனால் பாராளுமன்ற கூட்டம் காரணமாக மத்திய மந்திரி வர இயலவில்லை.

    இதனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அண்ணாமலையின் யாத்திரை இன்று தொடங்குவதாக இருந்தது. இப்போது அதுவும் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. நாளை விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து தொடங்குவார் என அறிவிக்கப்பட்டது.

    வருகிற 19-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் நடைபயணம் தொடங்குகிறது. 21-ந்தேதி ஓய்வு, 22-ந்தேதி நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இப்போது அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மத்திய மந்திரிகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுக்கூட்டங்கள் நடத்துவதை விட்டுவிட்டு நடைபயணத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

    • அண்ணாமலையின் நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
    • கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசி நடைப்பயணம் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்க சதி செய்கிறார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது-

    மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை இந்நிலையில் தான் மனிதாபிமான உணர்வோடு மணிப்பூர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புடைய அத்தியாவசிய பொருட்களை கொடுக்க தமிழக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் முன் வந்துள்ளதை அ.தி.ம.மு.க. வரவேற்கிறது,

    இந்நிலையில் மத்தியில் மக்கள் விரோத பா.ஜனதா மோடி அரசுக்கு எதிராக அமைந்துள்ள இந்தியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி பெரு பான்மை மக்களை பா.ஜ.க. வினர் திசை திருப்ப முயல் கின்றனர்.

    மணிப்பூர் தொடங்கி ஹரியானா, டில்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெறுப்பு பேச்சு கலவரத்தை தூண்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத் தோடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கி உள்ளார். அவரது நடைப் பயணம் நகைப்புக்குறியதாக இருக்கிறது.

    அண்ணாமலையும் அவருடன் வரும் கும்பல்களும் தமிழகத்தில் அமைதியாக வாழும் சிறுபான்மை மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசி நடைப்பயணம் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்க சதி செய்கிறார்.

    தமிழக அரசு உடனடியாக விழித்து கொண்டு ஹரி யானா, மணிப்பூர், டில்லி போல் அல்லாமல் கல வரத்தை தடுத்திட அண்ணா மலை கலவர நடைப்பயணத்தை தடை செய்ய வேண்டுமென வேண்டுகி றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் அண்ணாமலை 4 நாட்கள் நடைபயணம் செல்ல இருக்கிறார்.
    • அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    மதுரை

    தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அவர் நடைபயணம் செய்து வருகிறார்.

    ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர். அதே போன்று குழந்தைகளுடன் செல்பி எடுத்தும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றும் வந்தார்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நாளை மறுதினம் (5-ந்தேதி) முதல் 4 நாட்கள் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபயணம் செல்ல உள்ளார். இந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மதுரை பா.ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

    மதுரை ரிசர்வ் லைன் பகுதி ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை பழைய நத்தம் ரோடு, போலீஸ் குடியிருப்பு, சொக்கிகுளம், கிருஷ்ணா புரம் காலனி, மாவட்ட பா,ஜனதா கட்சி அலுவல கம், உழவர் சந்தை, பி.பி. குளம் சந்திப்பு, லேடி டோக் கல்லூரி, செல்லூர் 50 அடி ரோடு வந்தடைகிறார்.

    5-ந் தேதி மாலை 4 மணிக்கு பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலையில் இருந்து நேதாஜி ரோடு, கட்ராபாளையம், ஜான்சி ராணி பூங்கா, நேதாஜி சிலை, நகைக்கடை பஜார், கிழக்கு மாசி வீதி, கீழவாசல், முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை, கீழச்சந்தை பேட்டை, குருவிகாரன்சாலை பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

    7-ந் தேதி மாலை 4 மணிக்கு ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இருந்து ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஏ.ஏ.ரோடு, தமிழ்நாடு வேதாகம கல்லூரி, காளவாசல், சம்மட்டிபுரம், சொக்கலிங்க நகர் வழியாக பழங்காநத்தம் வரை நடைபயணம் செல்கிறார். பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    8-ந் தேதி காலை 9 மணிக்கு திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நுழைவாயில், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் பஸ் நிறுத்தம், 16 கால் மண்டபம், மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நடைபயணம் செல்கிறார்.

    இந்த நிலையில் அண்ணாமலை நடைபயணம் செல்லும் பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் பணம் அபேஸ் செய்துள்ளனர்.
    • மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    சிவகங்கை

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணத்தை ராமேசுவ–ரத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கினார். நான்காவது நாளான நேற்று முன்தினம் சிவகங்கை நகர் முழுவதும் நடை பயணம் மேற்கொண் டார்.

    அப்போது வீரமாகாளி–யம்மன் கோவில் பகுதியில் நடைபெற்ற பாதயாத்திரை–யின் போது அங்கு கட்டா–ணிபட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் சாலையோ–ரம் நின்று கொண்டு இருந்தார். இந்தநிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பிரபுவின் டவுசர் பையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பிளே–டால் கிழித்து அபேஸ் செய் துள்ள–னர்.

    இதுகுறித்து பிரபு சிவ–கங்கை நகர் காவல் நிலை–யத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    சிவகங்கை அருகே உள்ள பாகனேரி புதுவிளக்கு பகு–தியைச் சேர்ந்தவர் முருகே–சன். இவரது மனைவி சுமதி. இவர் மதகுபட்டி பகுதியில் உள்ள கல்லூக்கால் கம்பி தயார் செய்யும் தனியார் கம்பெனி–யில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று அவர் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார்.

    அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர் கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

    இதுபற்றி மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் மதகுபட்டி சப்-இன்ஸ்பெக் டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மேலபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி மனைவி லட்சுமி. இவர் கடந்த மூன்று மாதங்களாக தீராத வயிற்று வலி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப் பட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் அனும–தித்தனர். நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதா–பமாக இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் தவமணி கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் இன்று 4-வது நாளாக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.
    • பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், எண் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த 28-ந்தேதி ராமேசு வரத்தில் தொடங்கினார். அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    3-வது நாளான நேற்று முதுகுளத்தூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள தேவர் சிலைக்கும், வீரன்சுந்தர லிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருஉத்திரகோசமங்கை கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் பிரசார வேனில் அண்ணாமலை சிறிது தூரம் சென்றார். அப்போது பொதுமக்களிடையே பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 3½ லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆகியும் எத்தனை பேருக்கு வேலைகிடைத்தது.

    தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும். 2024-ம் ஆண்டு தாமரை மலரவே இந்த நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம் என்றார்.

    அப்போது அண்ணா மலை பொதுமக்களிடம் பிரதமர் மோடி ராமநாத புரத்தில் போட்டியிட வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அங்கிருந்தவர்கள் ஆமாம் என கோஷமிட்டனர். அதன் பின்னர் பிரசாரத்தை முடித்த அண்ணாமலை ராமநாதபுரத்திற்கு திரும்பி னார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    4-வது நாளான இன்று காலை 10 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை ஆர்.எஸ்.மங்கலத்தில் தனது நடைபயணத்தை தொடர்ந்தார்.

    பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகி களுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் விலைவாசி ஏற்றம் குறித்தும், தி.மு.க. அரசின் நடவடிக்கை குறித்தும் சிறப்புரையாற்றினார். இன்று பிற்பகல் கள்ளிக்குடி ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அதன் பின் ஒன்றிய தலைவர் நர சிங்கம் வீட்டில் மதிய உணவை முடித்து கொண்டு திருவாடானையில் நடைபயணம் செல்கிறார். இரவு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மக்களை சந்தித்து பேசுகிறார். வழிநெடுகிலும் பா.ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நடைபயணத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செய லாளர் கருப்புமுருகானந்தம், மாநில இளைஞரணி செய லாளர் டாக்டர் ராம்குமார், மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி.ரமேஷ், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் தூவல் சத்தியமூர்த்தி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • விளம்பரத்திற்காக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார் என்று முத்தரசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
    • ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா மண்டபத்தில் 13-வது விவசாய தொழிற்சங்க மாநாடு தொடங்கியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா மண்டபத்தில் 13-வது விவசாய தொழிற்சங்க மாநாடு தொடங்கியது. முன்னாள் எம்பி லிங்கம் வரவேற்றார். இந்திய விவசாயிகள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் முத்தரசன் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தொழிலாளர் நலவாரியம் உள்ளது. வேளாண் துறைக்கு தனி அமைச்சகமும் பட்ஜெட்டும் தாக்கல் செய்வது வரவேற்புக்குறியது.

    ஆனால் ஒரு கோடிக்கும் மேல் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு என தனி துறையோ, வாரியமோ இல்லை. கருணாநிதி ஆட்சியில் இருந்தது போல் விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் மாநாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.

    100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துடன் இணைத்து, ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என்.எல்.சி. மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும் நிலத்தை கையகப்படுத்துவது மாநில அரசு தான். அறுவடை முடியும் வரை வாய்க்கால் வெட்டும் பணிகளை நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம் என்பது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் இடம். அண்ணாமலை யாத்திரையை ராமேசு வரத்தில் தொடங்கியது மூலம் பா.ஜ.க.விற்கான முடிவுரை எழுதப்பட்டு விடும் என்பதை காட்டுகிறது. விளம்பரத்திற்காக அண்ணாமலை யாத்திரை செல்கிறார். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை.

    கொடநாடு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னு பாண்டியன், தங்கமணி, பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார்.
    • ராமநாதபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் நாளை மறுநாள்  (28-ந்தேதி) பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்க உள்ளார். மத்திய மந்திரி அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை பாரதிய ஜனதா கட்சியினர் ராமேசுவரத்தில் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அழைப்பிதழை வழங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. ராமேசுவரம் நகர் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் நகர் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்குடன் அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், செயலாளர் கணேசன் அய்யர், பொருளாளர் சுரேஷ், பொதுச்செயலாளர்கள் செல்வம், முருகன் உள்பட பலர் அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.

    ×